07-13-2004, 10:44 AM
வைரமுத்துவின் கவிதை வாசித்தபோது என் எண்ணம் வரைந்தவை, எப்போதுமே அப்படித்தான் அவரின் வரிகள் கண்டவுடன் எனது கரங்களும் வரையத்தொடங்கிவிடும்.
(எப்போதும் அனுபவக்கவிதைகளும், கதைகளும் அழுத்தம் தருபவையாகவும் அழகுறுபவவையாகவும் அமைந்துகொள்கின்றன. ம் இது எனக்கு கேள்விஞானக்கவிதை )
மென்மை வேண்டுமெனக்கு
மடியேற்றி வைத்த பாதங்கள்
வாஞ்சையுடன் வருடும் கரங்கள்
உச்சந்தலை தொடங்கி
உள்ளங்கால் வரையான உன்
இதழ்வருடல் இறுக்கத்துடன் வேண்டும்
ஆதிக்கம் இல்லாத ஆர்ப்பாட்டம் காட்டாத
அந்தரங்கம் மறைக்காத உன் ஆண்மை மறந்த
பெண்மை வேண்டும்
பூப்பறிக்க நீ படையெடுப்பு எதற்கு ?
புன்னகை ஓன்றே போதும்
என் பெண்ணகை விழிக்கும்
காமத்தீ அணைக்க
நீ எனக்குள் கடல்தேடும் போதும்
காதல் மணம் வீசிக்கொள்ளவேண்டும்
புலரும் பொழுதிலும் நீ எனக்குள்
புதையல் தேடவேண்டும்
தேடிக்களைத்து தேய்நிலவாகவேண்டும்
மார்போடுனையணைத்து எனை மஞ்சமாக்கவேண்டும்
தாரம் என்றென்னை தனித்துவைக்காமல்
உன் தாய்மடிவாசம்
என்னுள்ளேயும் நீ காணவேண்டும்
அழும்போது அணைக்கவேண்டும்
ஆனந்தத்தில் என்னை ஆலவட்டம்போடவேண்டும்
எந்த துளி எங்கே வீழ்ந்ததென்று
சமுத்திரம் ழூழ்கி தேடாமல்
என் மனதில் தேடி
என்னுள்ளம் நிறைக்கவேண்டும்
பிரிவு என்ற வார்த்தையை
நீ மறந்து வாழவேண்டும்
எனை மறக்காத ஓர் நொடிவேண்டும்
தாய்மை நான் கண்டால்
தாயாக நீ மாறவேண்டும்
சேயாக நான் மாறி சே~;டைகள் செய்திடும்போது
சினக்காமல் வாழவேண்டும்
மாதத்தில் ழூன்று நாட்கள்
மரணவேதனை நான் படும்போது
மார்போடு அணைக்கவேண்டும்
மலர் வருடல் தரவேண்டும்
உன் அன்பின் மழையில்
என் அடிவயிற்று தீக்கொழுந்து
அணைந்துபோகவேண்டும்
இருபத்தைந்தில் கமழும் அன்புமணம்
எழுபத்தைந்திலும் நிலைக்கவேண்டும்
வாரிசுகள் எமக்கு வந்தாலும்
வாஞ்சையுடன் எனை தினம் அணைக்கவேண்டும்
செய்வாயா ?
சோந்துகொள்கின்றேன்
(எப்போதும் அனுபவக்கவிதைகளும், கதைகளும் அழுத்தம் தருபவையாகவும் அழகுறுபவவையாகவும் அமைந்துகொள்கின்றன. ம் இது எனக்கு கேள்விஞானக்கவிதை )
மென்மை வேண்டுமெனக்கு
மடியேற்றி வைத்த பாதங்கள்
வாஞ்சையுடன் வருடும் கரங்கள்
உச்சந்தலை தொடங்கி
உள்ளங்கால் வரையான உன்
இதழ்வருடல் இறுக்கத்துடன் வேண்டும்
ஆதிக்கம் இல்லாத ஆர்ப்பாட்டம் காட்டாத
அந்தரங்கம் மறைக்காத உன் ஆண்மை மறந்த
பெண்மை வேண்டும்
பூப்பறிக்க நீ படையெடுப்பு எதற்கு ?
புன்னகை ஓன்றே போதும்
என் பெண்ணகை விழிக்கும்
காமத்தீ அணைக்க
நீ எனக்குள் கடல்தேடும் போதும்
காதல் மணம் வீசிக்கொள்ளவேண்டும்
புலரும் பொழுதிலும் நீ எனக்குள்
புதையல் தேடவேண்டும்
தேடிக்களைத்து தேய்நிலவாகவேண்டும்
மார்போடுனையணைத்து எனை மஞ்சமாக்கவேண்டும்
தாரம் என்றென்னை தனித்துவைக்காமல்
உன் தாய்மடிவாசம்
என்னுள்ளேயும் நீ காணவேண்டும்
அழும்போது அணைக்கவேண்டும்
ஆனந்தத்தில் என்னை ஆலவட்டம்போடவேண்டும்
எந்த துளி எங்கே வீழ்ந்ததென்று
சமுத்திரம் ழூழ்கி தேடாமல்
என் மனதில் தேடி
என்னுள்ளம் நிறைக்கவேண்டும்
பிரிவு என்ற வார்த்தையை
நீ மறந்து வாழவேண்டும்
எனை மறக்காத ஓர் நொடிவேண்டும்
தாய்மை நான் கண்டால்
தாயாக நீ மாறவேண்டும்
சேயாக நான் மாறி சே~;டைகள் செய்திடும்போது
சினக்காமல் வாழவேண்டும்
மாதத்தில் ழூன்று நாட்கள்
மரணவேதனை நான் படும்போது
மார்போடு அணைக்கவேண்டும்
மலர் வருடல் தரவேண்டும்
உன் அன்பின் மழையில்
என் அடிவயிற்று தீக்கொழுந்து
அணைந்துபோகவேண்டும்
இருபத்தைந்தில் கமழும் அன்புமணம்
எழுபத்தைந்திலும் நிலைக்கவேண்டும்
வாரிசுகள் எமக்கு வந்தாலும்
வாஞ்சையுடன் எனை தினம் அணைக்கவேண்டும்
செய்வாயா ?
சோந்துகொள்கின்றேன்
[b] ?

