07-12-2004, 01:56 PM
Chandravathanaa Wrote:வாழ்ந்தோம்தான்.
அப்படி வாழ்ந்த நாங்களும் எங்களோடு வாழ்ந்தவர்களும்...
தமிழர்கள் என்பதையும் கடந்து அடியடியாக வந்த உறவுகள். ±õ§Á¡Î ஒத்து... அதாவது ஓரளவுக்காவது எமது நடைமுறைக்கு.. எமது பழக்கவழக்கங்களுக்கு.. என்று ஒத்து வாழப் பழக்கப் பட்டவர்கள். ஒரு கூட்டாக எம்மோடு வாழ்ந்தவர்கள். அது மட்டுமன்றி அடி, நுனி என்று அவர்தம் பரம்பரைப் பழக்க வழக்கங்கள் கூட எமக்குத் தெரிந்திருக்கும்.
இந்தக் குடும்பத்துடன் இந்தளவுக்குத்தான் சகவாசம் வைக்க வேண்டும் என்னும் கணக்குப் போட்டு வைக்கும் அளவுக்கு ஓரளவுக்கேனும் ஒவ்வொரு குடும்பத்தையும் அறிந்து வைத்திருப்போம்.
ஆனால் புலம் பெயர் மண்ணில் அப்படியில்லையே.
சந்திப்பவர்களில் எத்தனையோ பேர் தேவை கருதிப் பழகிவிட்டு, சமயம் வரும் போது உதைத்து விடுபவர்களாக இருக்கிறார்கள்.
இதில் 100க்கு 100 சதவிகித உடன்பாடு எனக்கும். நாம் பாடசாலைகளில் படிக்கும் போது அந்தப் பாடசாலையில் உள்ள அனைவரையும் பற்றி அல்லது நமது ஊரில் உள்ளவர்களைப் பற்றி நமக்குத் தெரியும். அவர்களைத் தேர்வு செய்து எவரோடு எப்படிப் பழக வேண்டுமென்று அறிந்தே பழகுகிறோம்.
ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் யாருமில்லாததால் நம்முடையவன்தானே என்று திடீரென பாசம் கொள்கிறோம்.
அதுவே பின்னர் வினையாகி விடுகிறது.
kavithan Wrote:தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா., அவர்களின் முயற்சி பாரட்டப் படவேண்டும்....... ஆனால் அவர்களின் பேச்சை இவர்கள் கேட்க வேண்டுமே.....இப்படிப் பட்டவர்கள் எல்லாம் பேச்சைக் கேட்டு திருந்துபவர்களா :?: அவர்களைப் பொறுத்தவரை இது செகிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான்...... இருக்கும்..... பாப்பம்....... அவர்களின் முயற்சி வெற்றி அளிக்க வாழ்த்துக்கள்.
<img src='http://www.yarl.com/forum/files/images.jpeg' border='0' alt='user posted image'>
இல்லை கவிதன்
சில இளைஞர்களது நிலைக்குக்கூட சில பெரியவர்கள்தான் காரணம். இவர்களில் சிலர் தறபோது தங்கள் பெயர் வரவேண்டுமென்று யாரோ அவர்களுக்குச் சுட்டிக் காட்டிச் சொன்ன வார்த்தைகளை அவர்களது எண்ணங்களாக வானோலிகள்-தொலைக்காட்சிகள்-மேடைகளில் சொல்வது வியப்பாக இருக்கிறது.
காரணம் இவர்கள்தான் முன்னர் இந்த இளைஞர்களை காடையர்கள்-தெருப்பொறுக்கிகள் என்று பேசியவர்கள்.
தற்போது அழகான முகமூடிகளோடு மேடைகளுக்கு வந்திருக்கிறார்கள்.
தெரிந்தவர்களுக்குத் தெரியும்.
இந்த சமூத்துக்கும் இளைஞர்களுக்குமாக கொடுக்கும் சாரிட்டிப் பணங்களை கொள்ளை அடித்துக் கொண்டு இந்த அப்பாவி இளைஞர்களை இந்நிலைக்கு தள்ளியதற்கு இவர்களே காரணம். உண்மையில் இந்த இளைஞர்களல்ல. அவர்களோடு ஒரு நாள் வாழ்ந்து பார்த்தால் அவர்களைப் புரியும்.
என்னால் இவர்களில் அநேகரை வெறுக்க முடியவில்லை.
லண்டனில் வாழும் ஒரு இளைஞன் ஊரிலிலுள்ள இறந்து போன தன் நண்பனின் சகோதரி வாழ்கைக்காக வரதட்சனைப் பணம் கொடுக்க ஒரு குற்றத்தை செய்து ஆரம்பத்தில் மாட்டிக் கொண்டான்.........................
இப்படி எத்தனையோ நல்ல இளகிய மனம் கொண்ட பலர்...................தொடர்களாகி இருக்கின்றனர்.
<span style='font-size:22pt;line-height:100%'>பேசுவதெல்லாம் இலகுவானது.
அவர்களுக்கு ஏதாவது நம்மால் செய்ய முடியுமா? </span>
<b><span style='font-size:25pt;line-height:100%'>இளைஞர்கள்;
தவறுகளை சுட்டிக் காட்டித்;
தட்டிக் கேட்க வேண்டும்.
உலகத்தை மாற்ற வேண்டுமென்று நினைப்பவர்கள்.
போராடும் மனோ நிலை கொண்டவர்கள்.
போர்க் குணம் மிக்கவர்கள்.</b></span>
இங்கே எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது இலங்கை பல்கலைக் கழகத்தில் இருந்தவர்களுக்குத் தெரியும். அங்கு படிக்கும் போது அநேகமான இளைஞர்கள் பொதுவுடமை-சமத்துவ-கொமியுனிச-பகுத்தறிவுவாத சிந்தாந்தங்களுடன் வாழ்பவர்களாகவே இருப்பார்கள்.
உலகம் எங்கள் கையில் என்று கோசமிடுவார்கள்.
பல்கலைக் கழகத்தை விட்டு வெளியே வந்த சில காலங்களில் இவை தளர்ந்து காணப்படும்.
வேலைக்கான;
அரசியல்வாதிகளின் ஒரு கடிதத்துக்காக அலையோ அலையென்று அலைவார்கள்.
சில பெண்கள் அரசியல்வாதிகளின் படுக்கைகளை அலங்கரித்து விட்டு ஒரு வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அநேகமானவை வெளியே தெரிவதில்லை.
இப்படிப் பாதிக்கப்பட்ட இவர்கள் பின்னர்
முன்னய நிலையிலிருந்து நேரெதிராக மாறி லஞ்சம் தொடங்கி................ அனைத்து விடங்களையும் செய்கிறார்கள்.
பல்கலைக்கழக பட்டதாரிகளே இப்படியாகும் போது பாமர இளைஞர்கள் நிலை எப்படியிருக்கும்?
யோசிக்க வேண்டியிருக்கிறது?
இதைவிட மகாபலம் பொருந்திய அரசியல்வாதிகளைப் பாருங்களேன்.
கலசம் - பொன்முடி கிடைக்கும் வரை போடும் சத்தம்;
பொன்முடி கிடைத்தவுடன் அடங்கிவிடுகிறதே?
மாறிவிடுகிறார்களே?
<span style='font-size:30pt;line-height:100%'>ஏன்?</span>

