07-12-2004, 01:51 AM
[i][b]<span style='font-size:23pt;line-height:100%'>புூப்பென்னும் புனிதம்
நிறைவடையும் திருநாளில்
பைத்தியம் பிடித்துமனம்
பரபரக்கும் ஒருபொழுதில்
சுகமாக அழுவதற்குத்
திருமார்பு தருவாயா?</span>
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_mother-s.jpeg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:30pt;line-height:100%'>இஃதில்லை யான்கேட்பது</span>
-கவிப்பேரரசு வைரமுத்து
காலநேரம் பாராமல்
காமச்சங்கு முழங்கி
நிராயுதபாணியோடு
யுத்தமொன்று தொடங்கி
முத்தமிடத்தெரியாமல்
மோகத்தில் குதறி
மின்விசிறி தலைதட்ட
மேலேற்றிச்சுழற்றி
சிருங்காரபயத்தில் நான்
சில்லிட்டலற
மெத்தைமேல் என்மேனி
விசிறியெறிந்து
உலை கொதிக்குமுன்னே
அவசரத்தில் அரிசியிட்டு
உனக்குள் இருக்கும்
காமக்கொழுப்பை
உருக்கி உருக்கி
எனக்குள் ஊற்றி
தேவை தீர்ந்ததும்
திரும்பிப்படுத்து
குளித்தகூந்தல்
உலர்த்தி வருமுன்னே
குறட்டை விடுமென்
காதற் கணவா
இஃதில்லை யான்கேட்பது
மென்மை வேண்டுமெனக்கு
புல்லிதழில் புறப்பட்ட
பனித்துளியின் யாத்திரைபோல்
சங்கில் நுழைந்து
சத்தமிடும் காற்றைப்போல்
மென்மை வேண்டுமெனக்கு
பிரவாகம் பிறகு
சாரலில் தொடங்கு
ஏது செய்தால்
உயிர் மலரும்
நான் சொல்லமாட்டேன்
நான் அமெரிக்கா
நீ கொலம்பஸ்
கண்டறிதல் உன் பொறுப்பு
பத்துவிரல் அத்தனையும்
மயிலிறகாய் மாற்றி
செல் எல்லாம்
பூப்பூக்கச் செய்
என் அங்கங்களை
ஒன்றுக்கொன்று
அறிமுகம் செய்
அவசரக்காரா
வீணைதடவக்
கோடரி கொண்டுவந்தவனே ! நீ முடித்த இடத்தில்
நான் தொடங்குகிறேன்
யான் கேட்பதெல்லாம்
ஆதிக்கம் முடிந்தபின்னும்
அழுத்தம் குறையாத அதே பிடி
காதுமடல்படும் உனது
சவாசச்சூடு
ஒவ்வொரு நிகழ்வின்
முடிவின்போதும்
உனக்கே நான் என்னும்
உத்தரவாதம்
உன்கூந்தல் கோதும்
உள்ளங்கை வெப்பம்
சிதறிக்கிடக்கு மென்னைச்
சேர்த்தெடுக்கும் அக்கறை
கிடந்தபடி என்னைக்
கிடக்கவிடும் சுதந்திரம்
சிருங்காரக் களைப்பில்
சிறுசிறு சேவை
து}ங்கும் வரைக்கும்
சுகமான தொந்தரவு
மார்பணையும் போது
மனம்பரவும் நம்பிக்கை
இதோ !!!
கம்பளிக்குள் நான் வைக்கும்
காதோரக் கோரிக்கை
மோகம் வழிந்துவிடும்
வாழ்வின் பிற்பகலில்
இதே தீவிரம் இழையுமா?
விருந்தினர் முன்னே
நீ தரும் மதிப்பை
விருந்துகழிந்தும் தருவாயா?
எந்த புடவை நீ
எப்போது தந்ததென்று
தேதி சொல்லித் திகைக்கவைப்பாயா?
என் ஐவிரல் இடுக்கிலும்
ஆலிவ் எண்ணெய்பூசி
ஆர அமர அன்புசெய்வாயா?
மாணிக்கவிரல்கள் மடிமேலிட்டு
நானறியாமல் நகம் களைவாயா?
அழகின் நீர் மட்டம் வடியவடிய
அல்லித்தண்டு மனம்
ஒடியாதிருப்பாயா?
பூப்பென்னும் புனிதம்
நிறைவடையும் திருநாளில்
பைத்தியம் பிடித்துமனம்
பரபரக்கும் ஒருபொழுதில்
சுகமாக அழுவதற்குத்
திருமார்பு தருவாயா?
உறுதி சொல்?
உண்மை சொல்?
நம்பலாமா?
Thanks:
http://www.nilavu.com/content/kavithai/1/kn1.htm
நிறைவடையும் திருநாளில்
பைத்தியம் பிடித்துமனம்
பரபரக்கும் ஒருபொழுதில்
சுகமாக அழுவதற்குத்
திருமார்பு தருவாயா?</span>
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_mother-s.jpeg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:30pt;line-height:100%'>இஃதில்லை யான்கேட்பது</span>
-கவிப்பேரரசு வைரமுத்து
காலநேரம் பாராமல்
காமச்சங்கு முழங்கி
நிராயுதபாணியோடு
யுத்தமொன்று தொடங்கி
முத்தமிடத்தெரியாமல்
மோகத்தில் குதறி
மின்விசிறி தலைதட்ட
மேலேற்றிச்சுழற்றி
சிருங்காரபயத்தில் நான்
சில்லிட்டலற
மெத்தைமேல் என்மேனி
விசிறியெறிந்து
உலை கொதிக்குமுன்னே
அவசரத்தில் அரிசியிட்டு
உனக்குள் இருக்கும்
காமக்கொழுப்பை
உருக்கி உருக்கி
எனக்குள் ஊற்றி
தேவை தீர்ந்ததும்
திரும்பிப்படுத்து
குளித்தகூந்தல்
உலர்த்தி வருமுன்னே
குறட்டை விடுமென்
காதற் கணவா
இஃதில்லை யான்கேட்பது
மென்மை வேண்டுமெனக்கு
புல்லிதழில் புறப்பட்ட
பனித்துளியின் யாத்திரைபோல்
சங்கில் நுழைந்து
சத்தமிடும் காற்றைப்போல்
மென்மை வேண்டுமெனக்கு
பிரவாகம் பிறகு
சாரலில் தொடங்கு
ஏது செய்தால்
உயிர் மலரும்
நான் சொல்லமாட்டேன்
நான் அமெரிக்கா
நீ கொலம்பஸ்
கண்டறிதல் உன் பொறுப்பு
பத்துவிரல் அத்தனையும்
மயிலிறகாய் மாற்றி
செல் எல்லாம்
பூப்பூக்கச் செய்
என் அங்கங்களை
ஒன்றுக்கொன்று
அறிமுகம் செய்
அவசரக்காரா
வீணைதடவக்
கோடரி கொண்டுவந்தவனே ! நீ முடித்த இடத்தில்
நான் தொடங்குகிறேன்
யான் கேட்பதெல்லாம்
ஆதிக்கம் முடிந்தபின்னும்
அழுத்தம் குறையாத அதே பிடி
காதுமடல்படும் உனது
சவாசச்சூடு
ஒவ்வொரு நிகழ்வின்
முடிவின்போதும்
உனக்கே நான் என்னும்
உத்தரவாதம்
உன்கூந்தல் கோதும்
உள்ளங்கை வெப்பம்
சிதறிக்கிடக்கு மென்னைச்
சேர்த்தெடுக்கும் அக்கறை
கிடந்தபடி என்னைக்
கிடக்கவிடும் சுதந்திரம்
சிருங்காரக் களைப்பில்
சிறுசிறு சேவை
து}ங்கும் வரைக்கும்
சுகமான தொந்தரவு
மார்பணையும் போது
மனம்பரவும் நம்பிக்கை
இதோ !!!
கம்பளிக்குள் நான் வைக்கும்
காதோரக் கோரிக்கை
மோகம் வழிந்துவிடும்
வாழ்வின் பிற்பகலில்
இதே தீவிரம் இழையுமா?
விருந்தினர் முன்னே
நீ தரும் மதிப்பை
விருந்துகழிந்தும் தருவாயா?
எந்த புடவை நீ
எப்போது தந்ததென்று
தேதி சொல்லித் திகைக்கவைப்பாயா?
என் ஐவிரல் இடுக்கிலும்
ஆலிவ் எண்ணெய்பூசி
ஆர அமர அன்புசெய்வாயா?
மாணிக்கவிரல்கள் மடிமேலிட்டு
நானறியாமல் நகம் களைவாயா?
அழகின் நீர் மட்டம் வடியவடிய
அல்லித்தண்டு மனம்
ஒடியாதிருப்பாயா?
பூப்பென்னும் புனிதம்
நிறைவடையும் திருநாளில்
பைத்தியம் பிடித்துமனம்
பரபரக்கும் ஒருபொழுதில்
சுகமாக அழுவதற்குத்
திருமார்பு தருவாயா?
உறுதி சொல்?
உண்மை சொல்?
நம்பலாமா?
Thanks:
http://www.nilavu.com/content/kavithai/1/kn1.htm

