07-10-2004, 02:03 PM
<b><span style='font-size:30pt;line-height:100%'>சினிமா கனாக்கள்.......................</b></span>
<span style='font-size:30pt;line-height:100%'>விமர்சன நிழல்யுத்தம்</span>
<span style='font-size:22pt;line-height:100%'>படைப்பு என்பது ஒரு பிரசவம் என்பார்கள். அது பிரசவத்தை விட வேதனையானது போலத் தெரிகிறது.
விமர்சனங்கள் என்ற பெயரில் , குறும்படத்துக்கும் ,முழு நீளப்படத்துக்குமான புரிந்துணர்வு இல்லமை காரணமாகவே சில விமர்சனங்கள் தமிழர் சமூகத்துக்குள் இடம் பெறுகிறதோ என்ற ஒரு கேள்வி , சில விமர்சனங்களைப் பார்க்கும் போது எழவே செய்கிறது.
குறும்படமென்பது ஒரு சிறு கதைக் கருவை மையமாக வைத்து ஒரு படைப்பை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் உருவாக்கிக் காட்டுவது. (30 நிடங்களுக்குள் அது 1நிமிடமாகக் கூட இருக்கலாம்.) இதில் ஏதாவது ஒரு செய்தி சொல்லப்பட வேண்டும்.தொழில் நுட்ப ரீதியான விடயங்களும் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஒரு முழு நீளத் திரைப்படத்தில் ஒரு கதைக்கருவை பலப்படுத்துவதற்கு ஏகப்பட்ட விடயங்களை சேர்ப்பதோ, அதற்கான நியாயங்களை முன் வைப்பதோ இலகுவான காரியம்.இதற்கு 1 முதல் 3 மணி நேரம் வரை கால வரையரை இருக்கிறது. சில இதற்கு மேலும் நீள முடியும்.
ஒரு குழந்தையை பிரசவிக்கும் வேதனை எப்படியானதென்பது அத் தாய்க்கு மட்டுமே தெரியும்.பக்கத்தில் நிற்பவர்;
\"கொஞ்சம் பொறு சரியாயிட்டு இந்தா கொஞ்சம்தான்..........\"
என்பதோ அல்லது
\"உனக்கு மட்டும்தான் வலியா? வேறு யாரும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லையா? நாங்கள் உன் நன்மைக்குத்தானே சொல்கிறோம்.\"
என்ற அதட்டல் பாணியில் அறிவுரை சொல்வதோ இலகுவானது.
எப்படியோ குழந்தை பிறந்த பிறகு அக் குழந்தையின் வாழ்கை முறை மாற்றங்களுக்கு தாய்-தந்தை-குடும்பம்-சமூகம்............................... என பலர் உரிமை கொண்டாடுகின்றனர். அது நல்லதோ கெட்டதோ எதுவாக இருப்பினும்....................
ஆனால் ஒரு சினிமா படைப்பின் விமர்சனத்துக்கு உள்ளாவது படைப்பாளியான இயக்குனர் மட்டுமேதான்.
நன்றாக நடித்திருக்கிறார்கள் என்றால் அது நடித்தவர்களுக்கான பாராட்டு. இல்லாவிடில் ஏதோ ஒரு பகுதி நன்றாக இருக்கிறது என்றால் அதுவும் அது சார்ந்தவர்களையே சேரும்.
சரியில்லை என்றால் அது நேரடியாக இயக்குனரை மட்டுமே குறிவைத்து தாக்குகிறது.அதை தாங்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பும், பொறுமையும் இயக்குனருக்கு இருந்தே ஆகவேண்டும்.
குழந்தையின் வளர்ப்பில் வரும் தவறுகளுக்கு சமூகம் கூட பொறுப்பேற்கத் தயாராயிருக்கிறது.ஆனால் ஒரு சினிமா படைப்பின் வளர்ப்புக்கு இயக்குனர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டி வருகிறது.
தமிழ் திரை விமர்சகர்களில், அநேகமாகக் கதையை மட்டும் முதன்மைப் படுத்தி விமர்சிப்பவர்களே அதிகம். இதற்கு மாற்றுக் கருத்து இல்லை என்றே நினைக்கிறேன். மிகக் குறைவானவர்களே தொழில்நுட்ப ரீதியான விமர்சனங்களை வைக்கின்றனர்.
விமர்சனம் என்பதும் கருத்து என்பதும் வேவ்வேறு.எனக்கு ஒரு செயல் பிடிக்கவில்லை என்பது எனது கருத்தாகலாம். ஒரு செயலைப் பற்றி விமர்சிப்பதற்கு எனக்கு அச்செயல் பற்றிய முழு விபரமும் தெரிந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் அப்படியாவதற்கான அடிப்படைக் காரணங்களை பகுத்தறியும் கல்வி அல்லது அது குறித்த நீண்ட-நெடிய அனுபவம் இருத்தல் தேவை.
ஐரோப்பிய அல்லது மேற்கத்திய நாடுகளின் திரை விமர்சகர்கள் இவற்றைக் கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் கதையை மட்டும் பார்ப்பதில்லை தொழில் நுட்ப ரீதியான செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டே விமர்சிக்கிறார்கள். இப்படியான அநேகமான விமர்சனங்கள் ஒரு ஆரோக்கியமான விமர்னமாகவே இருக்கிறது.
இவர்கள் திரைப்படங்களை வகைப்படுத்தியே பார்க்கிறார்கள்-விமர்சிக்கிறார்கள்.
அது கதை பற்றிய சினிமாவா?
குழந்தைகளுக்கான சினிமாவா?
வெளிநாட்டு சினிமாவா?
பேய் கதைகக்கான சினிமாவா?
யதார்த்த சினிமாவா?
டாக்யுமன்றி சினிமாவா?
விசேட தொழில் நுட்பங்களுக்காக உருவான சினிமாவா?
பொழுது போக்கு சினிமாவா?
கொமடி சினிமாவா?
தகவல் சொல்லும் சினிமாவா?
உண்மை கதையை தழுவிய சினிமாவா?..................................
என்பது போன்ற தரங்களை வகைப்படுத்தி முதன்மைப்படுத்தியே விமர்சிக்கிறார்கள்.
ஒரு திரைப்படைப்பை விமர்சிக்கும் போது இவை கருத்தில் கொள்ளப்பட்டால் என்றுமே ஆரோக்கியமாக இருக்கும்.
எல்லோரையும் எல்லோராலும் திருப்திப்படுத்த முடியாது.இது சினிமாக் கலைக்கு மிக மிக பொருத்தமானதே.
அண்மையில் எம்மவர் ஒருவரின் திரைப்படமொன்றைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத் திரைப்படம் புலம் பெயர் நாட்டில் வாழும் ஒருவரால் தமிழ்நாட்டில் உருவான திரைப்படம்.
அதை விமர்சனம் செய்யும் படி சிலர் என்னிடம் கேட்டார்கள். தனிப்பட்ட ரீதியில் எனது கருத்துகளை அது குறித்தவரோடு பகிர்ந்து கொண்டேன்.நான் எழுதுவதினால்; ஒன்று அவரை அடுத்த படைப்பைச் செய்யவிடாது தடை செய்வதாகிவிடும் என்று கூறினேன். தவிரவும் அதை ஒரு நண்பரின் வீட்டிலேயே பார்த்தேன். அத்திரைப்படத்தில் நல்ல பல விடயங்கள் இருந்தன,அதை விமர்சனம் செய்வதானால் நான் பல முறை அத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.. அதை என்னிடம் தருவதற்கு அவரால் முடியவில்லை.காரணம் அது வெளியீடுக்கான பிரதியல்ல.விநியோகஸ்தர்களுக்கான திரையிடல்களுக்காக மட்டுமே லேப்பிலிருந்து கொடுக்கப்பட்ட பிரதியின் கமரா கொப்பியாகும்.
அவருக்கு என் வாழ்த்துகள்.அவரை என்னால் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது.அது அவரது ஒரு கனவு.ஏதோ ஒரு சிலராவது ஏதாவது, அது நல்லதோ கெட்டதோ எந்த வழியிலாவது அவர்கள் எண்ணப்படி செய்யட்டும். அவர் செலவு செய்ததில் 25 சதவிகிதத்தை புலம் பெயர் சினிமா ஒன்றுக்காக செலவு செய்திருந்தால் அவர் புலம் பெயர் சினிமா வரலாற்றுக்காகப் பேசப்பட்டிருப்பார்.
தவறுகள்தான் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையென்றால்.தவறுகளே புதியதொரு புலம் பெயர் சினிமா ஒன்றை உருவாக்க அடிவகுக்கலாம்தானே?
ஒருவரது கருத்தை மேற்கோள் காட்டும் போது சில கருத்துகள் வேதனை தருகிறது. அது வருத்தத்திற்குரியதே. அதற்காக மேற்கோளை மாற்ற முடியாது.ஒருவரைப் பற்றி வாதிடும் போது தாமும் மற்றையவரது கருத்துகளை வேதனை தந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் வேண்டும்.
காவிக்கொண்டு வந்தாலும் தூக்கிக் கொண்டு வந்தாலும் வார்த்தைகளில்தான் வேறுபாடே தவிர அர்த்தம் ஒன்றுதான்.நாம் எதையும் கொண்டு வரவுமில்லை கொண்டு போகப் போவதுமில்லை. எல்லாமே உண்டு.அதைப் பயன் படுத்துகிறோம்.அவ்வளவுதான்.
<b>ஒரு பக்க சார்ப்பாக முன்வைக்கப்படும் படைப்புகளை விட, யதார்த்தத்தை முன்வைக்கும் போது அதை பகுத்தாராய்ந்து சரி எது, பிழையெது என்று தீர்மானிக்கும் சமூகமாக நமது எதிர்கால சந்ததிகளாவது திகழ வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.</b>
<b>ஒருவனைத் தாக்கியதற்காக, தாக்குதலுக்குள்ளானானவன் திருப்பி அவனது சட்டையைப் பிடித்தால், தாக்க வந்தவன் என்னைத் தாக்க வருகிறானே என்று கத்தி, ஏதோ தாக்குதலுக்குள்ளானவன் போல் ஊரைக் கூட்டுகிறான்.
தாக்கியவனுக்கே இந்த வலியென்றால், தாக்கப்பட்டவனுக்கு எப்படி வலித்திருக்கும்?</b>
படைப்பாளிகள் விமர்சனங்களை பொறுத்துக் கொண்டேயாகவேண்டும்.அது சிலருக்கு நிச்சயமுண்டு.
குழந்தை தீயவனாக இருக்கிறான் என்று கூற விமர்சனம் என்ற பெயரில் செய்ய வேண்டியதில்லை எனது கருத்து என்று சொல்லலாம்.அது நிச்சயம் தேவை.வரவேற்க வேண்டியது.கருத்துக் கூறப்பட்டவனால் முடியாமல் போனாலும், நாளைய சமூகத்துக்கு அது நிச்சயம் தேவைப்படும்.
கருத்துக்காக வாதிட்டாலும், நட்பில் கீறல்கள் விழாமல் தொடரலாம்?</span>
<span style='font-size:30pt;line-height:100%'>விமர்சன நிழல்யுத்தம்</span>
<span style='font-size:22pt;line-height:100%'>படைப்பு என்பது ஒரு பிரசவம் என்பார்கள். அது பிரசவத்தை விட வேதனையானது போலத் தெரிகிறது.
விமர்சனங்கள் என்ற பெயரில் , குறும்படத்துக்கும் ,முழு நீளப்படத்துக்குமான புரிந்துணர்வு இல்லமை காரணமாகவே சில விமர்சனங்கள் தமிழர் சமூகத்துக்குள் இடம் பெறுகிறதோ என்ற ஒரு கேள்வி , சில விமர்சனங்களைப் பார்க்கும் போது எழவே செய்கிறது.
குறும்படமென்பது ஒரு சிறு கதைக் கருவை மையமாக வைத்து ஒரு படைப்பை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் உருவாக்கிக் காட்டுவது. (30 நிடங்களுக்குள் அது 1நிமிடமாகக் கூட இருக்கலாம்.) இதில் ஏதாவது ஒரு செய்தி சொல்லப்பட வேண்டும்.தொழில் நுட்ப ரீதியான விடயங்களும் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஒரு முழு நீளத் திரைப்படத்தில் ஒரு கதைக்கருவை பலப்படுத்துவதற்கு ஏகப்பட்ட விடயங்களை சேர்ப்பதோ, அதற்கான நியாயங்களை முன் வைப்பதோ இலகுவான காரியம்.இதற்கு 1 முதல் 3 மணி நேரம் வரை கால வரையரை இருக்கிறது. சில இதற்கு மேலும் நீள முடியும்.
ஒரு குழந்தையை பிரசவிக்கும் வேதனை எப்படியானதென்பது அத் தாய்க்கு மட்டுமே தெரியும்.பக்கத்தில் நிற்பவர்;
\"கொஞ்சம் பொறு சரியாயிட்டு இந்தா கொஞ்சம்தான்..........\"
என்பதோ அல்லது
\"உனக்கு மட்டும்தான் வலியா? வேறு யாரும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லையா? நாங்கள் உன் நன்மைக்குத்தானே சொல்கிறோம்.\"
என்ற அதட்டல் பாணியில் அறிவுரை சொல்வதோ இலகுவானது.
எப்படியோ குழந்தை பிறந்த பிறகு அக் குழந்தையின் வாழ்கை முறை மாற்றங்களுக்கு தாய்-தந்தை-குடும்பம்-சமூகம்............................... என பலர் உரிமை கொண்டாடுகின்றனர். அது நல்லதோ கெட்டதோ எதுவாக இருப்பினும்....................
ஆனால் ஒரு சினிமா படைப்பின் விமர்சனத்துக்கு உள்ளாவது படைப்பாளியான இயக்குனர் மட்டுமேதான்.
நன்றாக நடித்திருக்கிறார்கள் என்றால் அது நடித்தவர்களுக்கான பாராட்டு. இல்லாவிடில் ஏதோ ஒரு பகுதி நன்றாக இருக்கிறது என்றால் அதுவும் அது சார்ந்தவர்களையே சேரும்.
சரியில்லை என்றால் அது நேரடியாக இயக்குனரை மட்டுமே குறிவைத்து தாக்குகிறது.அதை தாங்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பும், பொறுமையும் இயக்குனருக்கு இருந்தே ஆகவேண்டும்.
குழந்தையின் வளர்ப்பில் வரும் தவறுகளுக்கு சமூகம் கூட பொறுப்பேற்கத் தயாராயிருக்கிறது.ஆனால் ஒரு சினிமா படைப்பின் வளர்ப்புக்கு இயக்குனர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டி வருகிறது.
தமிழ் திரை விமர்சகர்களில், அநேகமாகக் கதையை மட்டும் முதன்மைப் படுத்தி விமர்சிப்பவர்களே அதிகம். இதற்கு மாற்றுக் கருத்து இல்லை என்றே நினைக்கிறேன். மிகக் குறைவானவர்களே தொழில்நுட்ப ரீதியான விமர்சனங்களை வைக்கின்றனர்.
விமர்சனம் என்பதும் கருத்து என்பதும் வேவ்வேறு.எனக்கு ஒரு செயல் பிடிக்கவில்லை என்பது எனது கருத்தாகலாம். ஒரு செயலைப் பற்றி விமர்சிப்பதற்கு எனக்கு அச்செயல் பற்றிய முழு விபரமும் தெரிந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் அப்படியாவதற்கான அடிப்படைக் காரணங்களை பகுத்தறியும் கல்வி அல்லது அது குறித்த நீண்ட-நெடிய அனுபவம் இருத்தல் தேவை.
ஐரோப்பிய அல்லது மேற்கத்திய நாடுகளின் திரை விமர்சகர்கள் இவற்றைக் கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் கதையை மட்டும் பார்ப்பதில்லை தொழில் நுட்ப ரீதியான செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டே விமர்சிக்கிறார்கள். இப்படியான அநேகமான விமர்சனங்கள் ஒரு ஆரோக்கியமான விமர்னமாகவே இருக்கிறது.
இவர்கள் திரைப்படங்களை வகைப்படுத்தியே பார்க்கிறார்கள்-விமர்சிக்கிறார்கள்.
அது கதை பற்றிய சினிமாவா?
குழந்தைகளுக்கான சினிமாவா?
வெளிநாட்டு சினிமாவா?
பேய் கதைகக்கான சினிமாவா?
யதார்த்த சினிமாவா?
டாக்யுமன்றி சினிமாவா?
விசேட தொழில் நுட்பங்களுக்காக உருவான சினிமாவா?
பொழுது போக்கு சினிமாவா?
கொமடி சினிமாவா?
தகவல் சொல்லும் சினிமாவா?
உண்மை கதையை தழுவிய சினிமாவா?..................................
என்பது போன்ற தரங்களை வகைப்படுத்தி முதன்மைப்படுத்தியே விமர்சிக்கிறார்கள்.
ஒரு திரைப்படைப்பை விமர்சிக்கும் போது இவை கருத்தில் கொள்ளப்பட்டால் என்றுமே ஆரோக்கியமாக இருக்கும்.
எல்லோரையும் எல்லோராலும் திருப்திப்படுத்த முடியாது.இது சினிமாக் கலைக்கு மிக மிக பொருத்தமானதே.
அண்மையில் எம்மவர் ஒருவரின் திரைப்படமொன்றைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத் திரைப்படம் புலம் பெயர் நாட்டில் வாழும் ஒருவரால் தமிழ்நாட்டில் உருவான திரைப்படம்.
அதை விமர்சனம் செய்யும் படி சிலர் என்னிடம் கேட்டார்கள். தனிப்பட்ட ரீதியில் எனது கருத்துகளை அது குறித்தவரோடு பகிர்ந்து கொண்டேன்.நான் எழுதுவதினால்; ஒன்று அவரை அடுத்த படைப்பைச் செய்யவிடாது தடை செய்வதாகிவிடும் என்று கூறினேன். தவிரவும் அதை ஒரு நண்பரின் வீட்டிலேயே பார்த்தேன். அத்திரைப்படத்தில் நல்ல பல விடயங்கள் இருந்தன,அதை விமர்சனம் செய்வதானால் நான் பல முறை அத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.. அதை என்னிடம் தருவதற்கு அவரால் முடியவில்லை.காரணம் அது வெளியீடுக்கான பிரதியல்ல.விநியோகஸ்தர்களுக்கான திரையிடல்களுக்காக மட்டுமே லேப்பிலிருந்து கொடுக்கப்பட்ட பிரதியின் கமரா கொப்பியாகும்.
அவருக்கு என் வாழ்த்துகள்.அவரை என்னால் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது.அது அவரது ஒரு கனவு.ஏதோ ஒரு சிலராவது ஏதாவது, அது நல்லதோ கெட்டதோ எந்த வழியிலாவது அவர்கள் எண்ணப்படி செய்யட்டும். அவர் செலவு செய்ததில் 25 சதவிகிதத்தை புலம் பெயர் சினிமா ஒன்றுக்காக செலவு செய்திருந்தால் அவர் புலம் பெயர் சினிமா வரலாற்றுக்காகப் பேசப்பட்டிருப்பார்.
தவறுகள்தான் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையென்றால்.தவறுகளே புதியதொரு புலம் பெயர் சினிமா ஒன்றை உருவாக்க அடிவகுக்கலாம்தானே?
ஒருவரது கருத்தை மேற்கோள் காட்டும் போது சில கருத்துகள் வேதனை தருகிறது. அது வருத்தத்திற்குரியதே. அதற்காக மேற்கோளை மாற்ற முடியாது.ஒருவரைப் பற்றி வாதிடும் போது தாமும் மற்றையவரது கருத்துகளை வேதனை தந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் வேண்டும்.
காவிக்கொண்டு வந்தாலும் தூக்கிக் கொண்டு வந்தாலும் வார்த்தைகளில்தான் வேறுபாடே தவிர அர்த்தம் ஒன்றுதான்.நாம் எதையும் கொண்டு வரவுமில்லை கொண்டு போகப் போவதுமில்லை. எல்லாமே உண்டு.அதைப் பயன் படுத்துகிறோம்.அவ்வளவுதான்.
<b>ஒரு பக்க சார்ப்பாக முன்வைக்கப்படும் படைப்புகளை விட, யதார்த்தத்தை முன்வைக்கும் போது அதை பகுத்தாராய்ந்து சரி எது, பிழையெது என்று தீர்மானிக்கும் சமூகமாக நமது எதிர்கால சந்ததிகளாவது திகழ வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.</b>
<b>ஒருவனைத் தாக்கியதற்காக, தாக்குதலுக்குள்ளானானவன் திருப்பி அவனது சட்டையைப் பிடித்தால், தாக்க வந்தவன் என்னைத் தாக்க வருகிறானே என்று கத்தி, ஏதோ தாக்குதலுக்குள்ளானவன் போல் ஊரைக் கூட்டுகிறான்.
தாக்கியவனுக்கே இந்த வலியென்றால், தாக்கப்பட்டவனுக்கு எப்படி வலித்திருக்கும்?</b>
படைப்பாளிகள் விமர்சனங்களை பொறுத்துக் கொண்டேயாகவேண்டும்.அது சிலருக்கு நிச்சயமுண்டு.
குழந்தை தீயவனாக இருக்கிறான் என்று கூற விமர்சனம் என்ற பெயரில் செய்ய வேண்டியதில்லை எனது கருத்து என்று சொல்லலாம்.அது நிச்சயம் தேவை.வரவேற்க வேண்டியது.கருத்துக் கூறப்பட்டவனால் முடியாமல் போனாலும், நாளைய சமூகத்துக்கு அது நிச்சயம் தேவைப்படும்.
கருத்துக்காக வாதிட்டாலும், நட்பில் கீறல்கள் விழாமல் தொடரலாம்?</span>

