07-09-2004, 02:19 PM
<img src='http://www.yarl.com/forum/files/cinima.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>பெண்களே சமூகத்தின் கலாச்சார காவிகளாக இருக்கின்றார்கள். இதற்கு இன்று புகலிட நாடுகளில் எடுக்கப்படும் ஒரு சில குறுந்திரைப்படங்களும் தப்பவில்லை. உதாரணமாக சுவிஸிலிருந்து ஜீவனால் எடுக்கப்பட்ட \"நிழல்யுத்தம்\" என்ற படத்தில் வரும் பெண்ணின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டால் கூட கோயிலுக்கு போவதற்கு கூட அப்பெண் தன்னை அலங்கரிக்கும் விதத்தைக் கூறலாம். அத்துடன் பெண்கள் சந்தேகப்படுபவர்கள் என்றே அப்படம் காட்டுகிறது. பெண் என்றால் சந்தேகப்பிராணி என்பதும் பலவீனமானவள் என்பதும் ஆணாதிக்கம் நிலைநிறுத்துகின்ற கருத்தியல். இதையே நிழல்யுத்தமும் சொல்கிறது. அவளின் உணர்வுகள் கூட கணவனின் தேர்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அவள் கோவிலுக்கு போவதற்காக தன்னை அலங்கரித்து தயாராகிக் காத்திருந்து...ஏமாந்து...சோர்ந்து...உறங்கிப் போய்விடுகிறாள். ஆனால் அவரோ தன் நண்பனுக்கு உதவிசெய்து முடித்துவிட்டு மிக காலதாமதமாக வீட்டுக்கு வருகிறார். வந்து தான் பிந்தி வந்ததை நியாயப்படுத்துகிறார். அவள் கோபப்படுவதிலுள்ள நியாயத்தைக்கூட பார்வையாளரில் தொற்ற வைக்காமல் அது அவளின் சிடுமூஞ்சித்தனம் போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படத்தின் முடிவும் சினிமாப்பாணியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. அவள் அவனைத் தேடி சோர்ந்து போய் வந்து சரணடைகிறாள். கண்ணீர்விடுகிறாள். நிழல் யுத்தம் முடிவுக்கு வருகிறது.
அப்பெண் தனித்து தனது காலில் நின்று உழைத்து வாழக்கூடிய தன்மையிலோ அல்லது கணவனின் குடும்பச்சுமையில் அவளும் பங்கு கொள்வதாகவோ காட்டப்படவில்லை. மாறாக ஒரு ஆண் எல்லாவற்றையும் சுமக்கிறான் என்றே காட்டப்படுகின்றது. இதே படத்தை ஒரு ஆண் சந்தேகப்படுபவனாகவோ, அல்லது ஒரு பெண் தனித்து குடும்பத்தை சுமக்கிறாள் என்பதையோ ஜீவனால் காட்டியிருக்க முடியும். ஆனால் அதை ஜீவன் செய்யவில்லை. அதற்கான காரணம் ஆண்நோக்கு நிலையில் நின்று சிந்திப்பதுதான். ஆணாதிக்கக் கருத்தியலை கேள்வி கேட்காத எவராலும் பெண்நிலையில் நின்று சிந்திப்பது முடியாத காரியம். அதனால் அவர்களால் பெண்களின் பிரச்சினைகளை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்வதில் தடைப்பட்டே இருக்கிறார்கள்.</span>
தொடர்ச்சி........
நன்றி: தோழியர்
<span style='font-size:25pt;line-height:100%'>பெண்களே சமூகத்தின் கலாச்சார காவிகளாக இருக்கின்றார்கள். இதற்கு இன்று புகலிட நாடுகளில் எடுக்கப்படும் ஒரு சில குறுந்திரைப்படங்களும் தப்பவில்லை. உதாரணமாக சுவிஸிலிருந்து ஜீவனால் எடுக்கப்பட்ட \"நிழல்யுத்தம்\" என்ற படத்தில் வரும் பெண்ணின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டால் கூட கோயிலுக்கு போவதற்கு கூட அப்பெண் தன்னை அலங்கரிக்கும் விதத்தைக் கூறலாம். அத்துடன் பெண்கள் சந்தேகப்படுபவர்கள் என்றே அப்படம் காட்டுகிறது. பெண் என்றால் சந்தேகப்பிராணி என்பதும் பலவீனமானவள் என்பதும் ஆணாதிக்கம் நிலைநிறுத்துகின்ற கருத்தியல். இதையே நிழல்யுத்தமும் சொல்கிறது. அவளின் உணர்வுகள் கூட கணவனின் தேர்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அவள் கோவிலுக்கு போவதற்காக தன்னை அலங்கரித்து தயாராகிக் காத்திருந்து...ஏமாந்து...சோர்ந்து...உறங்கிப் போய்விடுகிறாள். ஆனால் அவரோ தன் நண்பனுக்கு உதவிசெய்து முடித்துவிட்டு மிக காலதாமதமாக வீட்டுக்கு வருகிறார். வந்து தான் பிந்தி வந்ததை நியாயப்படுத்துகிறார். அவள் கோபப்படுவதிலுள்ள நியாயத்தைக்கூட பார்வையாளரில் தொற்ற வைக்காமல் அது அவளின் சிடுமூஞ்சித்தனம் போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படத்தின் முடிவும் சினிமாப்பாணியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. அவள் அவனைத் தேடி சோர்ந்து போய் வந்து சரணடைகிறாள். கண்ணீர்விடுகிறாள். நிழல் யுத்தம் முடிவுக்கு வருகிறது.
அப்பெண் தனித்து தனது காலில் நின்று உழைத்து வாழக்கூடிய தன்மையிலோ அல்லது கணவனின் குடும்பச்சுமையில் அவளும் பங்கு கொள்வதாகவோ காட்டப்படவில்லை. மாறாக ஒரு ஆண் எல்லாவற்றையும் சுமக்கிறான் என்றே காட்டப்படுகின்றது. இதே படத்தை ஒரு ஆண் சந்தேகப்படுபவனாகவோ, அல்லது ஒரு பெண் தனித்து குடும்பத்தை சுமக்கிறாள் என்பதையோ ஜீவனால் காட்டியிருக்க முடியும். ஆனால் அதை ஜீவன் செய்யவில்லை. அதற்கான காரணம் ஆண்நோக்கு நிலையில் நின்று சிந்திப்பதுதான். ஆணாதிக்கக் கருத்தியலை கேள்வி கேட்காத எவராலும் பெண்நிலையில் நின்று சிந்திப்பது முடியாத காரியம். அதனால் அவர்களால் பெண்களின் பிரச்சினைகளை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்வதில் தடைப்பட்டே இருக்கிறார்கள்.</span>
தொடர்ச்சி........
நன்றி: தோழியர்

