07-06-2004, 07:37 PM
sOliyAn Wrote:"நானொன்றும் சைக்கில் டியுப் ஒட்டும் பஞ்சர் கடைக்காரனில்லை" என்று உடனே சொன்னேன்.'
அருமையான உவமை. அது சரி! சிவமா?! யாரையா அது?!
'இவர்தான் மாப்பிளை.. இவதான் பொண்ணு... இதுதான் திகதி பெயர்.. திருமண வாழ்த்துமடல் எழுது' என்று சொல்லுறமாதிரி ஒரு உணர்வு... தொடருங்கள் அஜீவன்! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<span style='font-size:22pt;line-height:100%'>நன்றிகள் சோழியன்.
ஒரு படத்தின் தலைவிதியை இறுதியாக மாற்றி ஆரம்பத்தில் நினைக்காத முடிவை தந்து மெருகூட்டும் கலைஞனே எடிட்டர் எனப்படும் தொகுப்பாளர். இவர் கட்டிட மேல்புூச்சுக்காரர் போன்றவர். அழகியலோடு படைக்கப்படும் கலையை தொய்ய விடாது பார்வையாளனை பொய்யைக் கூட மெய்யாக உணர வைப்பவனே தொகுப்பாளன்.
சிறந்த இயக்குனர்கள் கதை விவாதங்களில் ஈடுபடும் போது எடிட்டிரையும் வைத்துக் கொண்டே விவாதிப்பார்கள். காரணம் கதாசிரியர் தன் கதை திசை மாறக் கூடாது என்பதிலேயே கருத்தாக இருப்பார்.ஒளிப்பதிவாளருக்கோ, கதையின் நோக்கம் கெடா ஒளிப்பதிவு அமைய வேண்டுமென்ற நோக்கமே முதன்மையாக இருக்கும். இயக்குனர் அனைத்தையும் நினைப்பதால் இறுதியாக தேவைப்படும் ஒரு சில ஷாட்களை மறக்க நேரிடலாம். அவற்றைக் கோர்வையாக கோர்க்கும் போது எடிட்டருக்கு பிரச்சனை வருகிறது.அதை ஈடு செய்யவே எடிட்டர் இங்கே இப்படியான ஷாட்களை பிரத்தியேகமாக எடுங்கள் என்று குறிப்பிடுவார்.
எவ்வளவு அழகாக சமையல் செய்தாலும் தட்டில் பரிமாறும் போது அதை கவர்ச்சியாக படைப்பதிலேதான் அந்த பசியே உருவாகி நாவே ஊறுகிறது.
ஒரு படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைக்கச் செய்யும் கலை தெரியாத எடிட்டர் கையில் ஒரு படம் கிடைத்தால் அம்போதான்.
எனக்கு ஒரு நண்பரைத் தெரியும் அவரது கதைத் தேர்வு எனக்கே இல்லை. ஆனால் கடைசியில் கதையை சொதப்பி நாற வைப்பதில் அவருக்கு இணையாக நான் யாரையும் பார்த்தில்லை.
சர்வதேச தரம் வாய்ந்த பல படங்கள் படத் தொகுப்பால் சிகரத்தைத் தாண்டியுள்ளது.
எனவேதான்
\"நானொன்றும் சைக்கில் டியுப் ஒட்டும் பஞ்சர் கடைக்காரனில்லை\" என்று சொன்னேன்.
சிவமா? சிவ சிவா !!!!!!!!!!!!!!</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->