07-10-2003, 10:35 AM
எங்களுக்கு அந்த வில்லிசையைக் காணக்கிடைக்கவில்லை. எனினும் உங்கள் விமர்சனங்களில் இருந்து பார்க்கும் போது நாச்சிமார் கோவிலடி ராஜனின் வில்லிசை தரம் குன்றாத பெருமையை என்றும் தக்கவைத்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அவரால் யதார்த்த பூர்வமானதும் அதேவேளை சமூகச் சீர்திருத்தங்களை வலியுறுத்துவதாகவும் அமையத்தக்க வில்லிசைகளே மிகவும் ஜனரஞ்சகமாக அமைக்கப் படுவதாக தாயக்கத்தில் வாழும் போது பலர் சொல்லிக் கேட்டிருக்கிறோம்.... நாங்கள் வளரும் காலத்தில் அவருடைய வில்லிசைகள் எமக்குக் கிடையாமல் போனது துரதிஷ்டமே..எனினும் மீண்டும் புலத்தில் அவருடைய படைப்புக்கள் மிளிரத் தொடங்கியுள்ளமை நிச்சயம் கலா ரசிகர்களை மகிழ்விக்கும் என்பது மட்டுமன்றி நல்ல பல சமூக சிந்தனைகளையும் பரப்பி நிக்கும் என்பது திண்ணமே....இப்படியான அருமை பெருமை மிக்க கலைஞர்களின் படைப்புக்கள் என்றும் வாழ்த்தி வரவேற்றுப் பயன் பெறுவோமாக!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

