07-10-2003, 09:20 AM
வணக்கம் அருமையான ஒரு நிகழ்வு அது. அதைப்பற்றி நான் இங்கு விமர்சிக்க இருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. அதற்குள் நீங்கள் தொடக்கிவிட்டீர்கள். நல்லது.
தமிழ்த்தொகை;காட்சி பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதபோதும் கோடைகால நிகழ்ச்சிகள் என்று இலவச ஒளிபரப்பை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலும் மகிழ்வான விடயம் என்னவென்றால் உங்களைப்போல நானும் பலவருடங்களின் பின் ஒரு வில்லிசைநிகழ்வை கண்ணுற்றேன். இறுதியாக எத்தனையாவது வருடம் என்று தெரியாது. திரு.சின்னமணி வில்லிசைக்குழுவினரின் நிகழ்வு ஓன்று தாயகத்தில் கண்ணுற்றேன். எனக்கு வில்லுப்பாட்டு என்றால் விருப்பம்.இ அவர்களின் அபிநயங்கள் நகைச்சுவைகள் எல்லாம் கவரக்கூடியவைகள். அந்தவைகயில் பல வருடங்களின் பின் ஒரு தரமான நிகழ்வு ஓன்றை எனக்கு காண சந்தர்ப்பம் அளித்த தமிழ் ஓளி தொலைக்காட்சிக்கு நன்றிகள்.
அருமையான நிகழ்வு என்பதைவிட பயனுள்ள ஒன்றாகவே தோன்றுகின்றது. இன்றைய நடப்பினை இலகுதமிழில் பாமரரும்புரியக்கூடிய முறையில் திரு.ராஜன் அவர்கள் எடுத்தியம்பியிருந்தார். அருமை. அவருடைய அந்த நிகழ்வமைப்பு மிகவும்நேர்த்தியான முறையில் அமைந்திருந்தது. எங்கெங்கே தொய்வு ஏற்படுமோ அங்கெல்லாம் இறுக்கிப்பிடித்து நகைச்சுவைகளை திணித்து கருவினை சிதையாமல் நிகழ்த்தியிருந்தார். முதன்முதலில் அவருடைய நிகழ்வை கண்டிருந்தாலும் அதைப்போல ஓரு நிகழ்வை இதுவரை காணவில்லை என்ற சந்தோசம் இருந்தது.
இன்னும் அவரது கலைப்பணி தொடரவேண்டும். அவர் இதைப்போல இன்னும் பல பல நிகழ்வுகள் நிகழ்த்தவேண்டும். அதை எமது ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து ஒளி ஒலிபரப்பு செய்யவேண்டும்.
நல்லதொரு கருத்தாடல்விடயம் ஆரம்பித்துவைத்த இளைஞனிற்கு நன்றிகள்
தமிழ்த்தொகை;காட்சி பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதபோதும் கோடைகால நிகழ்ச்சிகள் என்று இலவச ஒளிபரப்பை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலும் மகிழ்வான விடயம் என்னவென்றால் உங்களைப்போல நானும் பலவருடங்களின் பின் ஒரு வில்லிசைநிகழ்வை கண்ணுற்றேன். இறுதியாக எத்தனையாவது வருடம் என்று தெரியாது. திரு.சின்னமணி வில்லிசைக்குழுவினரின் நிகழ்வு ஓன்று தாயகத்தில் கண்ணுற்றேன். எனக்கு வில்லுப்பாட்டு என்றால் விருப்பம்.இ அவர்களின் அபிநயங்கள் நகைச்சுவைகள் எல்லாம் கவரக்கூடியவைகள். அந்தவைகயில் பல வருடங்களின் பின் ஒரு தரமான நிகழ்வு ஓன்றை எனக்கு காண சந்தர்ப்பம் அளித்த தமிழ் ஓளி தொலைக்காட்சிக்கு நன்றிகள்.
அருமையான நிகழ்வு என்பதைவிட பயனுள்ள ஒன்றாகவே தோன்றுகின்றது. இன்றைய நடப்பினை இலகுதமிழில் பாமரரும்புரியக்கூடிய முறையில் திரு.ராஜன் அவர்கள் எடுத்தியம்பியிருந்தார். அருமை. அவருடைய அந்த நிகழ்வமைப்பு மிகவும்நேர்த்தியான முறையில் அமைந்திருந்தது. எங்கெங்கே தொய்வு ஏற்படுமோ அங்கெல்லாம் இறுக்கிப்பிடித்து நகைச்சுவைகளை திணித்து கருவினை சிதையாமல் நிகழ்த்தியிருந்தார். முதன்முதலில் அவருடைய நிகழ்வை கண்டிருந்தாலும் அதைப்போல ஓரு நிகழ்வை இதுவரை காணவில்லை என்ற சந்தோசம் இருந்தது.
இன்னும் அவரது கலைப்பணி தொடரவேண்டும். அவர் இதைப்போல இன்னும் பல பல நிகழ்வுகள் நிகழ்த்தவேண்டும். அதை எமது ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து ஒளி ஒலிபரப்பு செய்யவேண்டும்.
நல்லதொரு கருத்தாடல்விடயம் ஆரம்பித்துவைத்த இளைஞனிற்கு நன்றிகள்
[b] ?

