07-10-2003, 08:26 AM
வணக்கம் நண்பர்களே...
எனக்கு ஆழ்ந்த தொடர்பு இல்லாத துறைக்குள் கால் வைக்கிறேன். அத்துறைக்குள்
அல்லது அத்துறையோடு நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வண்ணமே
இந்தச் சிறிய தொடக்கம்.
புலம்பெயர் வாழ்வில் நம் கலைகள் வளர்க்கப்படுகின்றனவா? அவை எந்த வகையில்
வளர்க்கப்படுகின்றன? அவற்றில் காலத்திற்கேற்ற, சமுதாய வளர்ச்சிக்கேற்ற மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளனவா? அந்தக் கலைகளிற்கான ஊடகங்களின் பங்களிப்பென்ன? மக்களின்,
மக்களின் "மாண்புமிகுக்களின்" பங்களிப்பென்ன? ஆதரிக்கிறார்களா? அலட்சியப்-
படுத்துகிறார்களா? மொத்தத்தில் புலம்பெயர் தேசங்களில் கலைஞர்களிற்கு உரிய
அங்கீகாரம் கொடுக்கப்படுகிறதா? அவர்கள் சமுதாயத்தால் தனது எதிரொலி என்ற
எண்ணத்தோடு அரவணைக்கப்படுகிறார்களா?
இத்தனை கேள்விகளிற்கும் விடை நான் தரப் போவதில்லை. நீங்களும், கலைஞர்களும்
உங்களோடு சேர்ந்து நானும் விடைகளை ஆராய்வோம்.
சரி...ஏன் நான் இந்த விடயத்துள் இப்பொழுது நுழைந்தேன். காரணம் என்ன? இருக்கிறது.
"தமிழ் தொலைக்காட்சி இணையத்தில்" நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்களின்
வில்லிசை நிகழ்ச்சி ஒன்று சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. உங்களைப் பொறுத்த
மட்டில் அந்த வில்லிசை நிகழ்வு எப்படியோ தெரியாது. ஆனால் என்னைப் போன்ற
இளைஞர்களிற்கு நீண்ட காலத்தின் பின்னர் காணக்கிடைத்த அற்புத நிகழ்வு. கடைசியாக
நான் வில்லிசை பார்த்து மகிழ்ந்தது கொழும்பில் பாடசாலையில் படித்த போது. ஆனால்
வில்லிசை என்றால் ஒன்றில் சினிமாப் பாடல்கள், அல்லது வரலாற்று நிகழ்வுகள் அதுவும்
அல்லாவிடில் புராணக் கதைகள் தான் அதிகம் சொல்ப்பட்டிருக்கிறது. இது எனது
அனுபவத்தில் மட்டும்.
இன்றைய தற்போதைய சூழலையும் சமுதாயத்தின் நிலையையும், கலை வடிவில்
மக்களைச் சென்றடையும் வகையில் தரும் கலைஞர்கள் வெகு குறைவே என்பது எனது கருத்து.
ஈழத் தமிழர்களைப் பொஞத்தமட்டில் அது மெல்ல மாறி வருகினும். சில நேரங்களில்
நாம் தனியே நிகழ்காலமாகப் போராட்டத்தை மட்டுமே கருதுகிறோம் என்றும் எண்ணத்
தோன்றுகிறது. தேசம் தேசியம் தன்னாட்சி எல்லாம் அவசியம்தான். ஆனாலும் இவற்றை
எல்லாம் உரித்துடைய மக்கள் புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கையும் கவனிக்கப்படவேண்டியதே.
அந்த வகையில் கலையில், இலக்கியத்தில் இவற்றைப் பிரதிபலிப்பவர்கள் சிலர்.
"துமிழ் தொலைக்காட்சி இணையம்" ஒளிபரப்பிய அந்த நிகழ்ச்சியில் நாச்சிமார் கோயிலடி
இராஜன் அவர்கள் மிகவும் சிறப்பாக புலம்பெயர் வாழ்வின் சீர்கேட்டையும், அவர்கள் வாழும்
சூழலையும் மையப்படுத்தி வில்லிசை வடிவில் தந்திருந்தார். இசைகளின் இடையே கதைகளைச்
சொல்லும்போது அவருடைய அபிநயங்கள் (கையசைவுகள், கண்ணசைவுகள்) எல்லாம்
கதைக்கு மிகவும் பலம்சேர்ப்பனவாக அமைந்திருந்தன. அவற்றோடு தமிழர்களின் சில பழக்க
வழக்கங்களை நையாண்டி பண்ணுவதும், பின்னர் அதனிடையில் தமிழரின் தனித்தன்மை இழக்கா
வண்ணம் அவர்களின் பெருமையைச் சொல்வதும் வரவேற்கத் தக்கதாய் இருந்தது.
இதுதான் இன்றைய தேவை. எத்தனை காலத்திற்குத்தான் இன்னமும் பழம் பெருமைகளைப்
பேசித் திரியப் போகிறோம். இன்று நாம் என்ன செய்கிறோம்? இவற்றையெல்லாம் கலைஞர்கள்
கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்கள் போன்ற கலைஞர்களை, தமிழ் இளைஞர்களிற்கு அதிலும்
குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களிற்கு அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும். இந்தக்
கலைஞர்கள் மூலம் இப்படியான கலைகளை இன்னும் எப்படிப் புதிதாக மாற்றியமைக்கலாம்,
புதிய தொழில்நுட்பங்களோடு சேர்த்து மக்களைச் சென்றடையக் கூடிய வழிமுறைகள் என்ன
என்பது பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும். எப்போதுமே ஒரே மாதிரி இருந்தால் கலை வாழாது.
கலையென்பது தன்னுள்ளும் தன்னைச்சுற்றியும் மாற்றத்தை உண்டு பண்ணவேண்டும்.
அதற்கு "நாச்சிமார் கோயிலடி இராஜன்" போன்ற கலைஞர்கள் முன்வரவேண்டும். அவர்களிற்கு நமது
ஊடகங்கள் கைகொடுத்து வரவேற்று அரவணைக்க வேண்டும். இங்கு இன்னொரு விடயத்தையும்
சொல்லிவிடுகிறேன். சில "மாணபுமிகுக்கள்" தமிழர் மத்தியில் இருக்கிறார்கள். சிலர் அல்ல பலர்.
இவர்கள் கலைஞர்களையும் கலையையும் வளர விடுவதில்லை. "தமிழைக் கேலிசெய்கிறார்கள்,
தமிழர்களை நையாண்டி செய்கிறார்கள், சமயத்தைப் பழிக்கிறார்கள், எங்களையும் நையாண்டி
செய்கிறார்கள்" என்று இவர்கள் கத்துவார்கள். உண்மையாணவர்களாய் இருந்து உண்மைகளை
ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். இவர்களையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு எம் தமிழ்க்
கலைஞர்களே வாருங்கள், வேகமாக வாருங்கள், தமிழ் வளர்க்க! தமிழ்க் கலை வளர்க்க!
சரி நண்பர்களே... நீங்களும் "தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில்" நடந்த வில்லிசை நிகழ்ச்சியைப்
பார்த்தீர்களா? உங்கள் கருத்தென்ன? அந்நிகழ்வு பற்றிய உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள்.
புலம்பெயர் வாழ்வும் கலையும் பற்றிய உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள். கலைஞர்களை
அரவணைத்துத் தமிழோடு பயணிப்போம்.
நன்றி
எனக்கு ஆழ்ந்த தொடர்பு இல்லாத துறைக்குள் கால் வைக்கிறேன். அத்துறைக்குள்
அல்லது அத்துறையோடு நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வண்ணமே
இந்தச் சிறிய தொடக்கம்.
புலம்பெயர் வாழ்வில் நம் கலைகள் வளர்க்கப்படுகின்றனவா? அவை எந்த வகையில்
வளர்க்கப்படுகின்றன? அவற்றில் காலத்திற்கேற்ற, சமுதாய வளர்ச்சிக்கேற்ற மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளனவா? அந்தக் கலைகளிற்கான ஊடகங்களின் பங்களிப்பென்ன? மக்களின்,
மக்களின் "மாண்புமிகுக்களின்" பங்களிப்பென்ன? ஆதரிக்கிறார்களா? அலட்சியப்-
படுத்துகிறார்களா? மொத்தத்தில் புலம்பெயர் தேசங்களில் கலைஞர்களிற்கு உரிய
அங்கீகாரம் கொடுக்கப்படுகிறதா? அவர்கள் சமுதாயத்தால் தனது எதிரொலி என்ற
எண்ணத்தோடு அரவணைக்கப்படுகிறார்களா?
இத்தனை கேள்விகளிற்கும் விடை நான் தரப் போவதில்லை. நீங்களும், கலைஞர்களும்
உங்களோடு சேர்ந்து நானும் விடைகளை ஆராய்வோம்.
சரி...ஏன் நான் இந்த விடயத்துள் இப்பொழுது நுழைந்தேன். காரணம் என்ன? இருக்கிறது.
"தமிழ் தொலைக்காட்சி இணையத்தில்" நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்களின்
வில்லிசை நிகழ்ச்சி ஒன்று சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. உங்களைப் பொறுத்த
மட்டில் அந்த வில்லிசை நிகழ்வு எப்படியோ தெரியாது. ஆனால் என்னைப் போன்ற
இளைஞர்களிற்கு நீண்ட காலத்தின் பின்னர் காணக்கிடைத்த அற்புத நிகழ்வு. கடைசியாக
நான் வில்லிசை பார்த்து மகிழ்ந்தது கொழும்பில் பாடசாலையில் படித்த போது. ஆனால்
வில்லிசை என்றால் ஒன்றில் சினிமாப் பாடல்கள், அல்லது வரலாற்று நிகழ்வுகள் அதுவும்
அல்லாவிடில் புராணக் கதைகள் தான் அதிகம் சொல்ப்பட்டிருக்கிறது. இது எனது
அனுபவத்தில் மட்டும்.
இன்றைய தற்போதைய சூழலையும் சமுதாயத்தின் நிலையையும், கலை வடிவில்
மக்களைச் சென்றடையும் வகையில் தரும் கலைஞர்கள் வெகு குறைவே என்பது எனது கருத்து.
ஈழத் தமிழர்களைப் பொஞத்தமட்டில் அது மெல்ல மாறி வருகினும். சில நேரங்களில்
நாம் தனியே நிகழ்காலமாகப் போராட்டத்தை மட்டுமே கருதுகிறோம் என்றும் எண்ணத்
தோன்றுகிறது. தேசம் தேசியம் தன்னாட்சி எல்லாம் அவசியம்தான். ஆனாலும் இவற்றை
எல்லாம் உரித்துடைய மக்கள் புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கையும் கவனிக்கப்படவேண்டியதே.
அந்த வகையில் கலையில், இலக்கியத்தில் இவற்றைப் பிரதிபலிப்பவர்கள் சிலர்.
"துமிழ் தொலைக்காட்சி இணையம்" ஒளிபரப்பிய அந்த நிகழ்ச்சியில் நாச்சிமார் கோயிலடி
இராஜன் அவர்கள் மிகவும் சிறப்பாக புலம்பெயர் வாழ்வின் சீர்கேட்டையும், அவர்கள் வாழும்
சூழலையும் மையப்படுத்தி வில்லிசை வடிவில் தந்திருந்தார். இசைகளின் இடையே கதைகளைச்
சொல்லும்போது அவருடைய அபிநயங்கள் (கையசைவுகள், கண்ணசைவுகள்) எல்லாம்
கதைக்கு மிகவும் பலம்சேர்ப்பனவாக அமைந்திருந்தன. அவற்றோடு தமிழர்களின் சில பழக்க
வழக்கங்களை நையாண்டி பண்ணுவதும், பின்னர் அதனிடையில் தமிழரின் தனித்தன்மை இழக்கா
வண்ணம் அவர்களின் பெருமையைச் சொல்வதும் வரவேற்கத் தக்கதாய் இருந்தது.
இதுதான் இன்றைய தேவை. எத்தனை காலத்திற்குத்தான் இன்னமும் பழம் பெருமைகளைப்
பேசித் திரியப் போகிறோம். இன்று நாம் என்ன செய்கிறோம்? இவற்றையெல்லாம் கலைஞர்கள்
கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்கள் போன்ற கலைஞர்களை, தமிழ் இளைஞர்களிற்கு அதிலும்
குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களிற்கு அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும். இந்தக்
கலைஞர்கள் மூலம் இப்படியான கலைகளை இன்னும் எப்படிப் புதிதாக மாற்றியமைக்கலாம்,
புதிய தொழில்நுட்பங்களோடு சேர்த்து மக்களைச் சென்றடையக் கூடிய வழிமுறைகள் என்ன
என்பது பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும். எப்போதுமே ஒரே மாதிரி இருந்தால் கலை வாழாது.
கலையென்பது தன்னுள்ளும் தன்னைச்சுற்றியும் மாற்றத்தை உண்டு பண்ணவேண்டும்.
அதற்கு "நாச்சிமார் கோயிலடி இராஜன்" போன்ற கலைஞர்கள் முன்வரவேண்டும். அவர்களிற்கு நமது
ஊடகங்கள் கைகொடுத்து வரவேற்று அரவணைக்க வேண்டும். இங்கு இன்னொரு விடயத்தையும்
சொல்லிவிடுகிறேன். சில "மாணபுமிகுக்கள்" தமிழர் மத்தியில் இருக்கிறார்கள். சிலர் அல்ல பலர்.
இவர்கள் கலைஞர்களையும் கலையையும் வளர விடுவதில்லை. "தமிழைக் கேலிசெய்கிறார்கள்,
தமிழர்களை நையாண்டி செய்கிறார்கள், சமயத்தைப் பழிக்கிறார்கள், எங்களையும் நையாண்டி
செய்கிறார்கள்" என்று இவர்கள் கத்துவார்கள். உண்மையாணவர்களாய் இருந்து உண்மைகளை
ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். இவர்களையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு எம் தமிழ்க்
கலைஞர்களே வாருங்கள், வேகமாக வாருங்கள், தமிழ் வளர்க்க! தமிழ்க் கலை வளர்க்க!
சரி நண்பர்களே... நீங்களும் "தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில்" நடந்த வில்லிசை நிகழ்ச்சியைப்
பார்த்தீர்களா? உங்கள் கருத்தென்ன? அந்நிகழ்வு பற்றிய உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள்.
புலம்பெயர் வாழ்வும் கலையும் பற்றிய உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள். கலைஞர்களை
அரவணைத்துத் தமிழோடு பயணிப்போம்.
நன்றி

