Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆய்த எழுத்து
#26
'ஆய்த எழுத்து" அந்த மோசமான அரசியல்வாதி யார்?

தமிழ் சினிமாவின் மகாக்களில் ஒருவராகக் கூறப்படும் மணிரத்னம் 'ஆய்த எழுத்து" என்ற தனது உற்பத்தியை இப்போது சந்தைக்கு விட்டிருக்கிறார். அதில்தான் இந்த செல்வநாயகம் என்கிற ஒரு அரசியல்வாதி வருகிறார். ஆய்த எழுத்தின் மோசமான அரசியல்வாதி செல்வநாயகம் யார்? என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்துள்ளது.
மணிரத்னம் நல்ல சினிமா இயக்குனர் என்பதற்கும் மேலாக, ஒரு சிறந்த தமிழ்த் தேசிய எதிர்ப்பு கருத்தாளர் என்பதை இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். இதனை இவர் வெளியிட்ட 'இருவர்" உள்ளிட்ட அனைத்துப் படங்களும் இதையே பறைசாற்றி நிற்கின்றன. குறிப்பாக தமிழக தமிழர்களின் தமிழுணர்வை சிதைப்பதற்கே, நையாண்டி செய்வதற்கே மணிரத்னம் தனது படங்களைப் பயன்படுத்தி வந்தார்.
மறுபக்கம் ஈழத்தமிழரைக் காட்டி ஈழத்தமிழரிடம் வணிகம் செய்ய மணிரத்னம் உற்பத்தி செய்த "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் ஈழத்தமிழரின் போராட்டத்தைக் கூறுவதாக வெளிக்கிட்டு அவரின் ஈழத்தமிழர் எதிர்க்கருத்தே அதில் வெளிப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக 'ஆய்த எழுத்து" மணிரத்னத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கதை இதுதான் ஒரு அடிதடிக்காரன் (ரவுடி) அது நடிகர் மாதவன். அவர் அரசியல்வாதி செல்வநாயகத்துக்காக (இயக்குனர் பாரதிராசா) அடிதடி செய்கிறார். செல்வநாயகத்திற்கு எதிராக கிளம்பும் பல்கலைக்கழக மாணவன் மைக்கேல் (சூர்யா) மற்றும் அவரின் கூட்டணியை ஒழிக்க முயலுகிறார். இதில் விபத்தாக மூன்றாவது நபர் (சித்தார்த்) நுழைகிறார். கடைசியில் செல்வநாயகத்துக்கு எதிராக தேர்தலில் மைக்கல் தலைமையிலான இளைஞர்கள் புரட்சிகர சிந்தனையுடன் வெற்றிபெற்று சட்;டசபை செல்கின்றனர்;. புது தலைமுறை நேர்மையுடன் அரசியலில் நுழைவதுதான் படம்.
படத்தில் ஒரு முக்கிய காட்சி மைக்கல் மாதவனால் சுடப்படும் காட்சி. அதில் சித்தார்த்; மைக்கலைக் காப்பாற்றுவது படத்தின் முக்கால்பங்கு காட்சி இது. ஒரே காட்சி மாதவன் பார்வையில் (POINT OF VIEW) FLASH BACK சூர்யா பார்வையில் FLASH BACK சித்தார்த் பார்வையில் ஒரு FLASH BACKஎன ஆய்த எழுத்தில் மூவரிடம் ஒரு காட்சியை மணிரத்னம் FLASH BACK க்குகளாகக் காட்டியுள்ளார்.
ஆனால் ஆய்த எழுத்தின் வில்லனாக வருகிற பாத்திரத்திற்குச் சூட்டப்பட்டுள்ள பெயர் செல்வநாயகம். தமிழக பாரம்பரியத்தில் செல்வநாயகம் என்ற பெயர் யாருக்கும் சூட்டப்படுவதாக நாம் அறிந்ததில்லை. எனவே தங்கள் மத்தியில் வழக்கிலில்லாத ஆனால், ஈழத்தமிழர்களின் புகழ்பூத்த அரசியற் தலைவரின் பெயரை மணிரத்னம் திட்டமிட்டே பயன்படுத்தியுள்ளாரா என்ற கேள்வி ஈழத்தமிழரிடையே எழுவது தவிர்க்க முடியாதது.
ஈழத்தமிழர்களின் சாத்வீக போராட்டத்தின் தந்தையாக இருந்தவர் SJV செல்வநாயகம். தமிழகத்தில் ஈ.வெ.ரா. பெரியார் தமிழக மக்களால் உரிமையுடன் 'தந்தை பெரியார்" என அழைக்கப்பட்டது போன்றே, ஈழத்தில் SJV. செல்வநாயகம் ஈழத்தமிழர்களால் உரிமையுடன் 'தந்தை செல்வா" என அழைக்கப்பட்டார்.

'இருவர்" என்ற திரைப்படத்தில் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்திய மணிரத்னம், ஆய்த எழுத்தில் ஈழத்தின் அறவழிப் போராட்ட நாயகனான தந்தை செல்வாவை கொச்சைப்படுத்துகிறாரா என்ற கேள்வியை ஈழத்தமிழன் கேட்கத் தோன்றுகின்றான். தமிழக சினிமா ஈழத்தமிழனை வைத்து பிழைத்து வருகின்ற இன்றைய நிலையில், ஈழத்தமிழனையே தொடர்ந்து கொச்சைப்படுத்தும் இவ்வாறான பாங்கு அனுமதிக்கப்படலாமா என்பதே இப்போது ஈழத்தமிழன் ஒவ்வொருவனின் கேள்வியாகவுமுள்ளது.
ஒரு சில நல்ல திரைப்படங்களான நந்தா, காற்றுக்கென்ன வேலி போன்றவற்றைத் தவிர, மிகுதியானவற்றில் ஈழத்தமிழர்களை எள்ளி நகையாடும் பாத்திரங்களே படைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, புன்னகை மன்னன், தெனாலி, நளதமயந்தி, கன்னதில் முத்தமிட்டால் போன்றவற்றை ஈழத்தமிழர்களை எள்ளி நகையாடும் திரைப்படங்களாகச் சுட்டிக்காட்டலாம்.
இன்று தங்களது படத்தின் பொருளாதார ரீதியான வெற்றிக்கு புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்கள் வாழும் மேற்குலக நாடுகளின் திரையரங்குகளையே நம்பியிருக்கிற தமிழக சினிமாவின் முக்கியமானவர்கள் அதே ஈழத்தமிழர்களை எள்ளி நகையாடுவதையும் தமது வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். இதிலும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாடுகளிலேயே, ஈழத்தமிழர்களின் துணையோடு வெளிநாட்டுப் படப்பிடிப்புக்களைச் செலவுச் சிக்கனத்தோடு மேற்கொள்ளும் தமிழக சினிமாவின் தமிழ்த்தேசிய எதிர்ப்பு முதலாளிகள், நடிகர்கள் மறுபுறத்தே ஈழத்தமிழர்களையே பதம்பார்த்து வருகிறார்கள்.
'ஆய்த எழுத்து" செல்வநாயகம் மூலம் ஈழத்தமிழரால் அதிகம் உச்சரிக்கப்பட்ட அறவழிப் போராட்ட அரசியற்தலைவரான தந்தை செல்வா என்ற SJV செல்வநாயகம் பற்றிய விம்பத்தை சிதைப்பதாக சூட்டப்பட்ட பெயர் இல்லையென்பதை மணிரத்னம் மறுத்துரைப்பாரா? ஈழத்தமிழர்களின் மன உணர்வுகளை, போராடும் குணத்தை அறிந்த மணிரத்னத்துக்கு, ஏன் ஒரு தமிழக அரசியல்வாதியின் பெயரை சூட்ட முடியாமல் அல்லது மனமில்லாமல் போனது?
இதற்கான பதிலை மணிரத்னம் தரப்போவதில்லை, இவ்வாறானவற்றிற்கான பழியை வசனகர்த்தா சுஐhதா (ரங்கராஜன்) மீது போட்டுத் தப்பிக்க முயற்சிக்கலாம். ஆனால் மணிரத்னத்திற்கான பதிலை, தமிழக சினிமாக்காரர்களிற்கான பதிலைத் தருவதற்கு ஈழத்தமிழர்கள் தயாராகவே உள்ளனர். இனிமேலும் இவ்வாறான நிகழ்வுகள் தமிழக சினிமாக்களிலே இடம்பெற்றால் அத் திரைப்படங்களை மேற்குலகில் பகிஷ்கரிப்பதற்கும், திரைப்பட நட்சத்திரங்கள் 'காசு பார்க்கும்" நட்சத்திர இரவுகளைப் புறக்கணிப்பதற்கும் ஈழத்தமிழர்களை மணிரத்னம் தயாராக்கி விட்டுள்ளார்.
எனவே மணிரத்னம் ஈழத்தமிழனிற்கு தீமை செய்யப் போய், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடையே தமிழக சினிமா குறித்த வெறுப்பை மேலும் தீவிரப்படுத்தி ஒட்டுமொத்த தமிழக சினிமாவையும் வெறுப்புடன் ஈழத்தமிழன் நோக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழக சினிமா உலகம் இதுபற்றிச் சிந்திக்குமா?


- தாயகத்திலிருந்து உணர்வுள்ள தமிழன் / நன்றி: TamilNaatham


நன்றி படங்கள்:
தற்ஸ் தமிழ் இணையத்தளம்
சினி சௌத் இணையத்தளம்

நன்றி sooriyan.com
Reply


Messages In This Thread
ஆய்த எழுத்து - by shanmuhi - 03-19-2004, 08:45 PM
[No subject] - by shanmuhi - 03-23-2004, 11:52 AM
[No subject] - by kuruvikal - 03-23-2004, 12:58 PM
[No subject] - by Eelavan - 03-23-2004, 02:03 PM
[No subject] - by Eelavan - 03-23-2004, 05:57 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 06:43 PM
[No subject] - by Eelavan - 03-24-2004, 05:21 AM
[No subject] - by shanmuhi - 03-24-2004, 10:42 AM
[No subject] - by shanmuhi - 03-25-2004, 10:15 AM
[No subject] - by Mathan - 03-25-2004, 02:10 PM
[No subject] - by Mathan - 04-02-2004, 01:56 PM
[No subject] - by sWEEtmICHe - 04-03-2004, 03:53 PM
[No subject] - by shanmuhi - 05-01-2004, 10:43 AM
[No subject] - by Mathan - 05-26-2004, 06:25 PM
[No subject] - by Eelavan - 05-26-2004, 06:32 PM
[No subject] - by tamilini - 05-26-2004, 06:45 PM
[No subject] - by kuruvikal - 05-27-2004, 12:23 PM
[No subject] - by Mathan - 05-27-2004, 03:11 PM
[No subject] - by Mathan - 05-27-2004, 03:19 PM
[No subject] - by kuruvikal - 05-28-2004, 12:24 PM
[No subject] - by Eelavan - 05-28-2004, 02:36 PM
[No subject] - by Mathan - 05-28-2004, 09:27 PM
[No subject] - by Eelavan - 05-28-2004, 09:32 PM
[No subject] - by Mathan - 05-28-2004, 10:34 PM
[No subject] - by Eelavan - 05-29-2004, 12:47 PM
[No subject] - by tamilini - 06-15-2004, 03:57 PM
[No subject] - by Mathan - 06-23-2004, 03:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)