06-06-2004, 12:49 PM
மூதாளர் பேணலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தங்ககத்தை தமிழீழத் தேசியத் தலைவர் திறந்து வைப்பு
அன்புச்சோலை மூதாளர் பேணலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தங்ககத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் திறந்து வைத்து, மூதாளர்களுக்கு அன்புப் பரிசில்களையும் வழங்கினார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள மூதாளர் பேணலகத்தில நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர். சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து பொதுச்சுடரினைத் தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் அவர்கள் ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட பெண்களுக்கான தங்ககத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
மாவீரர்கள், போராளிகள் குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளர் திருக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தனது துணைவியாருடன் கலந்து கொண்டு மூதாளர்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்களுக்கு அன்புப் பரிசில்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு. வே.பாலகுமாரன், அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன், அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி ஆகியோர் உட்பட பல பொறுப்பாளர்கள் போராளிகள் கலந்து கொண்டனர்.
தாயக மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களின் பெற்றோர்கள் அன்புச்சோலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்....!
அன்புச்சோலை மூதாளர் பேணலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தங்ககத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் திறந்து வைத்து, மூதாளர்களுக்கு அன்புப் பரிசில்களையும் வழங்கினார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள மூதாளர் பேணலகத்தில நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர். சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து பொதுச்சுடரினைத் தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் அவர்கள் ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட பெண்களுக்கான தங்ககத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
மாவீரர்கள், போராளிகள் குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளர் திருக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தனது துணைவியாருடன் கலந்து கொண்டு மூதாளர்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்களுக்கு அன்புப் பரிசில்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு. வே.பாலகுமாரன், அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன், அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி ஆகியோர் உட்பட பல பொறுப்பாளர்கள் போராளிகள் கலந்து கொண்டனர்.
தாயக மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களின் பெற்றோர்கள் அன்புச்சோலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

