07-08-2003, 07:18 PM
மருத்துவத்தில் கருணைக் கொலை என்பதே மிக மிக வரையறைக்குட்பட்ட விடயம், அப்படியிருக்க முழு வளர்ச்சி கண்ட மிக ஆரோக்கியமான ஒருவர் கேட்டதற்கிணங்க மரணத்தை நோக்கி இட்டுச் செல்லக் கூடிய அபாயகரமான சத்திர சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்களுக்கு என்ன தேவையிருந்தது! அப்படி செய்வது அடிப்படை மருத்துவ தர்மத்தை மீறும் செயல் இல்லையா...?! அப்படி அடிப்படை மருத்துவ விதிகளுக்கு அப்பால் மருத்துவத்தின் நோக்கம் செயற்பாடு என்பன நோயாளியின் வேண்டு கோளிற்கிணங்கவாயின் மருத்துவரின் தேவைதான் என்ன...?
சாதாரண உடற்கூற்றியல் அறிவுள்ள ஒருவரே முழு வளர்ச்சி கண்ட ஒருவரில் இப்படியான சத்திர சிகிச்சைகள் வெற்றி அளிப்பது குறைவு என்பது ஊகிக்க கூடியதாகவிருக்க திறமை மிக்க மருத்துவர்கள் ஏன் இச் சத்திர சிகிச்சையை இவர்களுக்கு செய்ய விளைந்தனர்! பணமும் புகழும் இவர்களை மருத்துவ தர்மத்தை மீறி இச் சத்திர சிகிச்சையை செய்யத் தூண்டியதா என்ற நியாய பூர்வமான கேள்வி எழுவது தவிர்க்க முடியாதுள்ளது!
மருத்துவ உலகம் இச் சத்திர சிகிச்சைக்கான உடனடித் தேவையையும் இம் மரணங்களுக்கான காரணத்தையும் விளக்க வேண்டும் அல்லது மனித உயிர்களும் எலி தேரை கரப்பான் போன்று ஆய்வுகூட ஆய்வுத்தேவைகளுக்காக, பணத்தேவைகளுக்காக புகழுக்காக அழிக்கப்படுவது நாளை சர்வ சாதாரண நிகழ்வாகலாம்!
சாதாரண உடற்கூற்றியல் அறிவுள்ள ஒருவரே முழு வளர்ச்சி கண்ட ஒருவரில் இப்படியான சத்திர சிகிச்சைகள் வெற்றி அளிப்பது குறைவு என்பது ஊகிக்க கூடியதாகவிருக்க திறமை மிக்க மருத்துவர்கள் ஏன் இச் சத்திர சிகிச்சையை இவர்களுக்கு செய்ய விளைந்தனர்! பணமும் புகழும் இவர்களை மருத்துவ தர்மத்தை மீறி இச் சத்திர சிகிச்சையை செய்யத் தூண்டியதா என்ற நியாய பூர்வமான கேள்வி எழுவது தவிர்க்க முடியாதுள்ளது!
மருத்துவ உலகம் இச் சத்திர சிகிச்சைக்கான உடனடித் தேவையையும் இம் மரணங்களுக்கான காரணத்தையும் விளக்க வேண்டும் அல்லது மனித உயிர்களும் எலி தேரை கரப்பான் போன்று ஆய்வுகூட ஆய்வுத்தேவைகளுக்காக, பணத்தேவைகளுக்காக புகழுக்காக அழிக்கப்படுவது நாளை சர்வ சாதாரண நிகழ்வாகலாம்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

