Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும்
#11
இந்தியா சமாதானத்தைக் குழப்புமா? - நிலாந்தன்

Saturday, 29 May 2004

பி.பி.சி தமிழோசையை தொடர்ச்சியாகக்கோட்டுவரும் எவரும் ஒரு விசயத்தை அவதானித்திருப்பார்கள். அதில் இலங்கைத்தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் அணுபுகுமுறையில் ஏதும் மாற்றங்களுக்கு இடமுண்டா என்று கேட்கப்படும் போதெல்லாம் டில்லியிலிருந்து கதைக்கும் பேராசிரியர் சகாதேவன் உட்பட எல்லா ஆய்வாளர்களும் முன்னாள் ராஜதந்திரிகளும் மீடியாக்காரர்களும் ஒரு விசயத்தை வாய்ப்பாடு போல திரும்பத்திரும்பச் சொல்லக்கோட்கலாம். அது என்னவெனில் இந்தியா ஒரு பெரியநாடு அதன் வெளியுறவுக்கொள்கைகளை அடிக்கடி மாற்றமுடியாது என்பதே.

இப்படிச் சொல்லும்போதெல்லாம் அவர்கள் மூன்று விசயங்களை வற்புறுத்திக்கூற முயல்வதாகத் தோன்றும். முதலாவது, விடுதலைப்புலிகள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் பெரிய பெரிய மாற்றங்கள் எதற்கும் இடமில்லை என்ற விசயம். மற்றது, இந்தியா இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளில் தலையிடாது என்ற விசயம். மூன்றாவது, இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை ஒரு மாறாத அடித்தளத்தின் மீது கட்டி யொழுப்பப்பட்டிருக்கிறது என்பது.

இன்று இப்பத்தி இந்த மூன்றாவது விசயத்தின் மீதே தனது கவனத்தைக் குவிக்கிறது. கடந்த வாரம் இந்தியா புலிகளின் மீதான தடையை மேலும் இரண்டாடுகளுக்கு நீடித்திருக்கும் ஒரு பின்னணியில் இந்த விசயம் மேலும் முக்கியத்துவம் உடையதாகிறது.

சரி, அது என்ன இந்தியாவின் மாறாவெளியுறவுக் கொள்கை? அல்லது இந்திய வெளியுறவுக்கொள்கையின் இதயமாய் இருக்கும் மாறாதஅந்த அடிப்படைஅம்சம் எது?

இதுதான்? இந்தியா பெரியநாடு. இந்தப்பிராந்தியத்திலேயே நிலத்தாலும் பலத்தாலும் அது ஒரு பெரியநாடு. எனவே இந்தப்பிராந்தியத்தில் எது நடாந்தாலும் அது இந்தியாவின் கையை மீறிப்போக முடியாது. அதாவது இந்தப்பிராந்தியம் இந்தியாவினுடையது. இதில் எதுவும் இந்தியாவின் மேலாண்மைக்கு உட்பட்டதாகவே இருக்கமுடியும்.

இந்தியாவின் மாறா வெளியுறவுக் கொள்கை என்று இந்திய ஆய்வாளர்களும் விமசகர்களும் ராஜதந்திரிகளும் ஊடக வியலாளர்களும் கூறுவது இதைத்தான். இந்தியாவின் ஆட்சியாளராக வரும் எவரும் இந்த புவிசார் அரசியல் யாதார்த்தத்திற்குத்தான் தலைமை தாங்க முடியும். இதை மீறிப்போவதென்றால் அந்த தலைவர் தீர்க்க தரிசனமிக்க மிகத்துணிச்சலான ஒரு பெருந்தலைவராக இருக்கவேண்டும். ஆனால் இநடதளவு பெரிய இந்திய நாடு கடந்த தேர்தலில் ஒரு இத்தாலியப் பெண்ணையே தனது தலைவியாக தெரிந்தெடுத்திருநடத அளவுக்கு தலைமைப்பஞ்சம் நிலவும் ஒரு சூழலில் ஒரு பெருந்தலைவனை உடனடியாக எதிர்பார்ப்பது கடினம்தான்.

சுpல வாரங்களுக்கு முன்பு முன்னைய வாஜ்பாய் அரசு சீனாவுடன் ஒரு உடன்படிக்கைக்கு ஒத்துக்கொண்டது. அதன்படி சீன சிக்கிம் நாட்டின் மீதான இந்தியாவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும்.

எப்படி இருக்கிறது உலகம்? இருபெரிய நாடுகள் இரு சிறிய இனங்களின் தலைவிதியை தங்களுக்கிடையில் பங்கிடும் ஒரு நிலை.

இதுதான் இலங்கைத்தீவின் கதியும். இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தன்னுடைய ஆதிக்க வலையத்தள் தன்னை மீறி நிகழும் எந்தவொரு அசைவையும் இந்தியா சகித்துக்கொள்ளத்தயாரில்லை. ஒரு மூத்த பத்திரிகையாளர் முன்பொருமுறை சொன்னார்? ?இந்தியா இலங்கைத்தீவை தனது ஆசைநாயகி என்று நினைக்கிறது. இந்த ஆசை நாயகியை வேறுயார் நெருங்கி வந்தாலும் அதை இந்தியா சகித்துக்கொள்ளாது.? என்று.

இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகள் ஒரு எல்லைக்கப்பால் தன்னை மீறிச்செல்வதை இந்தியா பெறுத்துக் கொள்ளாது என்பதை அது கடந்த வருடம் யப்பான் இந்த சமாதான முயற்சிகளில் நுழைந்த போதே சிறிது எரிச்சலோடு வெளிக்காட்டியது.

ஆனாலும் மேற்கு நாடுகளின் ஈடுபாட்டை அது ஒரு கட்டம் வரையிலும் சகித்துக் கொள்ளக் கூடும் என்று அனுமானிக்கத்தக்க விதத்திலேயே கடந்த இரண்டாண்டு காலசமாதான முயற்சிகளில் இந்தியாவின் அசைவுகள் காணப்படுகின்றன. இப்படி மேற்கு நாடுகளின் சமாதான முயற்சிகளில் ஒரு எல்லை வரை அனுசரித்துப் போக வேண்டிய ஒரு யதார்த்தம் ஏன் இந்தியாவுக்கு ஏற்பட்டது?

இந்த கேள்விக்கு விடைகாண்பதென்றால் இப்பொழுது இந்தியாவின் பிரதமராயுள்ள மன்மோகன்சிங்கிடம் இருந்தே தொடங்க வேண்டும். முன்பு நரசிம்மராவின் அமைச்சரவையில் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த காலத்தில் தான் இந்தியாவை மேற்கு நாடுகளுக்கு முழு அளவில் திறந்துவிடத் தொடங்கினார். அதாவது திறந்த சந்தைப் பொருளாதாரத்துக்குள் இந்தியா நுழைந்தது. அதிலிருந்து தொடங்கி துரிதமாக வளர்ந்து இன்று உலகின் ஆறாவது பெரிய வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவாகியிருக்கின்றது. அதோடு, உலகின் கணனி மென்பொருள் வியாபாரத்தில் முப்பது வீதம் இந்தியாவிடம் தான்உள்ளது.

இப்படி இந்தியாவை மேற்குலகிற்கு திறந்து விட்டதன் மூலம் நரசிம்மராவ் - மன்மோகன்சிங் அரசு தொடக்கி வைத்த மாற்றங்களின் விளைவாக இன்று இந்தியா பொருளாதாரத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கு மிக நெருக்கமான நண்பனாக காணப்படுகிறது. அதாவது உவகளாவிய ஒரு பொதுப்பொருளாதாரா போக்கினுள் .இந்தியா எர்பொதோ கரையத் தொடங்கிவிட்டது.

இதில் இந்திய கொள்கை வகுப்பாளர்களும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள கூச்சப்படும் ஒரு விசயம் இருக்கிறது. அதாவது கெடுபிடிப்போரின் முடிவோடு உலகில் ஏகப்பெரு வல்லரசாக அமெரிக்கா உருவாகிவிட்டது. அந்த யதார்த்தத்தை இந்தியா சந்தடியின்றி ஏற்றுக்கொண்டுவிட்டது. பூகோள அளவில் இந்தியா அமெரிக்காவின் பேரரசுத்தனத்தை சகித்துக்கொள்ளத்தயார் அதற்கேற்ப தனது பொருளாதாரம், தொழிலநுட்பம் போன்ற சில பல துறைகளில் தன்னை சுதாகரித்துக்கொள்ளவும்தயார்.

இது எதைக்காட்டுகிறது? இந்தியா தனது வெளியுறவுக்கொள்கையை புதிய பூகோள யதார்த்தம் ஒன்றிற்கு ஏற்ப சுதாரித்துக்கொண்டு வருகிறது என்பதை;தானே?

ஆனால் இதெல்லாம் பூகோள அளவில் தான் பிரந்திய மட்டத்திலோயெனின், இந்தியா தனது மேலான்மையை மேலும் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறது. அது பூகோளயதார்த்தத்துடன் தன்னை சுதாகரித்துக்கொண்டது என்பதே தன்னை பிராந்திய மட்டத்தில் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான விட்டுக்கொடுத்தல் தான்.

ஒரு புறம் இந்தியா தன்னை மேற்கு நாடுகளில் நிறுவனங்களுக்கு திறந்து வைத்திருக்கிறது. இன்னொருபுறம் தனது சிறிய அயல் நாடுகளில் அது தனது சந்தையை விஸ்தரித்து வருகிறது. இந்தியாவின் இந்த வர்த்தக விரிவாக்க வலயத்திற்குள் இலங்கைத்தீவு எப்பொழுதோ வந்துவிட்டது. உதாரணத்திற்கு, ஒருகாலம் எமதுதெருக்களில் யப்பான் வகனங்களே அதிகம் ஓடித்திரிந்தன ஆனால் இப்பொழுது கண்ணைப்பறிக்கும் நிறங்களில் கீரோக்கொண்டாக்கள், ரி.வி.எஸ்கள் மினிங்கிக்கொண்டு திரிகின்றன. மருந்துப்பொருற்களைப் பொருத்தவரை மற்றெல்லா நாட்டு மருந்துகளை விடவும் இந்திய உற்பத்திகள் மலிவானவைகளாய் காணப்படுகின்றன.

எனவே பொருளாதார வார்த்தைகளில் சொன்னால், தனது வர்த்தகவிரிவாக்கத்தின் பிரகாரமும் மேற்குலகுடனான தனது சதாகரிப்புக்கொள்கைகளின் படியும் இந்தியா மேற்கு நாடுகள் கொண்டு வந்திருக்கும் சமாதான முயற்சிகளை ஒரு எல்லைவரை சகித்துக்கொள்ளத்தயார்போல தெரிகிநது.

ஆனால் எதுவரை சகித்துக்கொள்வார்கள் என்பது இந்தியா தனது வெளியுறவுக்கொள்கையை பூகோள பொருளதாரயதார்த்தத்திற்கு ஏற்ப எவ்வளவு விகிதத்திற்கு சுதாகரித்துக்கௌ;கிறது என்பதில் தான் தங்கியிருக்கிறது. அதாவது பூகோளஅளவில் அமெரிக்கா மோண்மையை ஏற்றுக்கொள்ளும் விதமாக பிரந்திய அளவில் இந்தியா தனது மேலாண்மையை எவ்வளவு விகிதத்திற்கு விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறதோ அவ்வளவு விகதத்திற்குத்தான் அது இலங்கைத்தீவின் மேற்கு நாடுகள் செய்து வரும் சமாதானத்தை சகித்துக்கொள்ளும்.

மாறாக, இந்தியமத்திய அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சக்திகளின் பலத்தாள் தீர்மானிக்கப்படும் ஒரு விவகாரமல்ல இது.

இ;ந்தப்பிராந்தியத்தில் இந்தியா ஒரு பெரியநாடு என்பதிலிருந்தே இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை தொடங்குகிறது. இந்தியா நிலத்தாலும் பலத்தாலும் பெரியநாடாயிருக்கும்வரை இந்தவெளியுறவுக் கொள்கையில் அடிப்படை மாற்றம்ஏதும் நிகழவாய்ப்பில்லை.

ஒரு புறம் இந்தியா அமெரிக்காவின் உலகலாவிய மேலாண்மையை ஏற்றுக்கொண்டு தன்னை சுதாகரித்து வரும் அதேசமயம் தனது தனித்துவத்தையும் பிராந்திய மட்டத்தில் தனது மேலாண்மையையும் பேணமுயல்கிறது. இன்னொருபுறம் தனது அயலில் வாழும் சிறிய இனங்கள் தமது தனித்துவத்தை இழந்து தனது மேலாண்மைக்கு அடங்கிவாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

இப்பொழுதுள்ள இந்திய சனாதிபதி அப்துல்கலாம் ஒருமுறை சொன்னார்? இந்தியா ஒரு பெரிய நாடு ஆனால் அதன் மக்கள் பெரியசிந்தனைகளோடு இல்லை என்ற தொனிப்பட.

உண்மைதான். பெரியவர்கள் பெரியவர்களைப்போல நடந்துகொள்ளும் வரை சிறியவர்கள் பெரியவர்களை மதிக்கும் நிலையும் காணப்படும். பெரியவர்கள் பெரிய மனதுபண்ணி சிறியவர்களை மதித்து நடக்கும் போது சிறியவர்களும் பெரியவர்களை கணமடபண்ணும் நிலை உருவாகிறது.

இந்தியா ஒரு பெரிய நாடு என்பதிலிருந்து அதன் வெளியுறவுக்கொள்கை தொடங்குகிறது. அதே சமயம் அப்துல்கலாம் சொன்னது போல பெரிய நாட்டிற்கு இருக்கவேண்டிய பெரியபெரிய சிந்னைகளிலிருந்து அதைத்தொடங்கினால், அமெரிக்கா மயப்பட்டுவரும் இவ்வுலகில் தனது இந்தியத்தன்மையைப் பேணியபடி தன்னை சுதாகரித்துக் கொண்டு வரும் இந்தியா இந்தப்பிராந்தியத்தில் சிறிய இனங்கள் தமது தனித்துவத்தை பேணியபடி இந்தியாவை மதித்து நடக்கும் ஒரு உன்னதமான பிராந்திய ஒழுங்குக்கு போக முடியுமல்லவா.

நிலாந்தன்/Eelanatham
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-29-2004, 04:42 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 04:46 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 04:49 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 04:52 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 04:53 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 04:57 AM
[No subject] - by Eelavan - 05-29-2004, 12:04 PM
[No subject] - by Eelavan - 05-29-2004, 12:07 PM
[No subject] - by Eelavan - 05-29-2004, 12:22 PM
[No subject] - by Mathan - 05-30-2004, 06:51 AM
[No subject] - by Mathan - 05-30-2004, 07:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)