05-29-2004, 02:09 PM
புலிகளிடம் வானூர்தி இருப்பதை நிராகரிக்கிறார் விமானப் படைத் தளபதி
விடுதலைப்புலிகளிடம் வானூர்திகள் இருப்பதாகக் கூறப்படுவதை விமானப் படைத் தளபதி ஏயார் மார்ர்ல் டொனால்ட் பெரேரா நிராகரித்துள்ளார்.
அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முயலுமொரு தந்திரமாகவே இதனைத் தாங்கள் கருதுவதாகவும் டொனால்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விடுதலைப்புலிகள் கிளிநொச்சி பகுதியில் விமான ஓடுபாதையொன்றை அமைத்திருப்பதை நன்கறிந்துள்ள படையினர், தற்போதைய நிலையில் புலிகள் வசம் வானூர்தி ஏதும் இருந்தாலும், போர்நிறுத்த உடன்பாடு அமுலிலுள்ளதால் அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அப்பால் அவர்களால் தங்கள் வானூர்தியை பறக்கவிடமுடியாதெனவும் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் விமான ஓடுபாதையையும் விமானப் படையொன்றையும், கொண்டிருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை, வன்னியில் செய்தியாளர்களிடம் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.
கடந்த வாரம் முல்லைத்தீவு கடற்பரப்பில் மர்ம விமானமொன்றை கடற்படைக் கப்பலொன்று அவதானித்ததாகவும், அந்த வானூர்தி கடற்பரப்புக்கு மேலாகப் பறந்து வன்னி நிலப்பரப்பு நோக்கிச் சென்றதாகவும், பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்த நிலையிலேயே, தங்கள் வசம் விமானப் படையொன்றிருப்பதை புலிகள் ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
Thinakkural
விடுதலைப்புலிகளிடம் வானூர்திகள் இருப்பதாகக் கூறப்படுவதை விமானப் படைத் தளபதி ஏயார் மார்ர்ல் டொனால்ட் பெரேரா நிராகரித்துள்ளார்.
அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முயலுமொரு தந்திரமாகவே இதனைத் தாங்கள் கருதுவதாகவும் டொனால்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விடுதலைப்புலிகள் கிளிநொச்சி பகுதியில் விமான ஓடுபாதையொன்றை அமைத்திருப்பதை நன்கறிந்துள்ள படையினர், தற்போதைய நிலையில் புலிகள் வசம் வானூர்தி ஏதும் இருந்தாலும், போர்நிறுத்த உடன்பாடு அமுலிலுள்ளதால் அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அப்பால் அவர்களால் தங்கள் வானூர்தியை பறக்கவிடமுடியாதெனவும் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் விமான ஓடுபாதையையும் விமானப் படையொன்றையும், கொண்டிருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை, வன்னியில் செய்தியாளர்களிடம் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.
கடந்த வாரம் முல்லைத்தீவு கடற்பரப்பில் மர்ம விமானமொன்றை கடற்படைக் கப்பலொன்று அவதானித்ததாகவும், அந்த வானூர்தி கடற்பரப்புக்கு மேலாகப் பறந்து வன்னி நிலப்பரப்பு நோக்கிச் சென்றதாகவும், பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்த நிலையிலேயே, தங்கள் வசம் விமானப் படையொன்றிருப்பதை புலிகள் ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

