Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரதமராக சோனியா மறுப்பு
#14
சோனியா நல்லவரோ கெட்டவரோ என்பதல்ல...சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இலங்கை தொடர்பான நிலைப்பாடு என்ன....??! ராஜீவ் காந்தியையும் ஜே ஆரின் தந்திர வலையில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்தவர்கள் தான் இந்திய வல்லுனர்கள்....அது போக ராஜீவ் காந்தியின் வெளிநாட்டுக் கொள்கை என்பது பலத்த விமர்சனத்துக்குரியதாகவே இன்றும் இருக்கிறது. குறிப்பாக நட்பு நாடுகளாக விளங்கிய இலங்கை நேபாளம் போன்றவற்றுடன் அவசியத்துக்கு அப்பாலான தூர நோக்கற்ற தலையீடுகள்..!

நேரு வீட்டில் பேசுவதை வெளியில் சொல்ல பலர் இருக்கிறார்கள்....சோனியா ராஜீவையோ அல்லது இந்திராவையோ கட்டுப்படுத்தக் கூடிய பலமிக்கவராக ஒரு போதும் இருந்ததில்லை....! இவரை விட அரசியல் பலமானவர் சஜ்ஜையின் மனைவி மேனகா காந்தி...ஆனால் அவர் வழி தனிவழியாதலால் ....நேரு குடும்பக் கட்சியான காங்கிரசை காப்பாற்ற சோனியா தேவைப்பட்டார்...மீட்டுக் கொண்டு வந்தார்கள்..விளம்பரப் பொருளாக்கி வெற்றி கண்டார்கள்...இதற்கொன்றும் அரசியல் சாணக்கியம் அவசியமில்லை...வல்லுனர்களின் வல்லமையும் தேவையில்லை...!

இந்தியாவின் வெளி உறவுக் கொள்கை என்பது அமெரிக்காவினது போன்றதல்ல...இந்தியாவுக்கு அருகில் இருக்கும் நாடுகள் எதனுடனும் இன்று இந்தியாவுக்கு நல்லுறவில்லை...இப்படியாக எந்த ஒரு வல்லாதிக்கம் விரும்பும் நாடும் தனிமைப்பட்ட சூழலில் தன் வல்லாதிக்க கனவை நேரடி அழுத்தங்களுக்கு அப்பால் நனவாக்குவது என்பது கடினமே...!

ஒரு ஆட்சி அமைப்புக்கே திண்டாடும் ஒரு தலைமை உடைய கட்சி இந்தியா எதிர்கொண்டுள்ள எத்தனையோ சவால்களை எப்படிச் சமாளிக்கப் போகின்றது...????! சோனியா பிரதமரானால் என்ன ஆகாவிட்டால் என்ன இந்திய வல்லுனர்கள் தான் இந்தியாவை வழிப்படுத்துவதென்றால் பிறகேன் சோனியா சோனியா என்று இத்தனை நாட்கள் சோனியாவுக்குப் பின்னால் அலைகிறார்கள்...ஏன் காங்கிரசில் சோனியாவைவிட வலுவான தலைவர் அல்லது மூத்த உறுப்பினர்கள் இல்லையா...???! இந்திரா காலத்தில் இருந்து இருப்பவர்களே இருக்கின்றார்..இந்தச் சோனியா இந்திராவுடன் கூட பகைத்தவர் என்பது அவர்களின் குடும்ப விடயம்....!

ஆக காங்கிரஸ் கட்சி என்பது நேரு குடும்ப வாடை விடும் போது மட்டுமே இந்தியாவில் தலை தூக்க முடியும் என்ற நிலையே இருக்கிறது...இந்த நிலை என்பது ஒரு நாட்டின் உண்மையான திறமைத்துவமான வினைத்திறனான தலைமையை ஒரு போது உருவாக்கித்தர எப்போது வாய்ப்பளிக்காது....! காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்ப வாடை வீசாது தற்செயலாக வந்த நரசிமராவே இந்தியாவின் இன்றைய பொருளாதார மேம்பாட்டின் வித்தகர்...இதை ஏன் நேரு குடும்பம் அன்று சாதிக்கவில்லை....????!


:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-18-2004, 01:09 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 01:15 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:31 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:33 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 08:08 PM
[No subject] - by Eelavan - 05-18-2004, 08:44 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:25 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:40 PM
[No subject] - by Eelavan - 05-18-2004, 10:06 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 12:17 AM
[No subject] - by Mathan - 05-19-2004, 01:00 AM
[No subject] - by Mathan - 05-19-2004, 01:07 AM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 02:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)