05-19-2004, 12:17 AM
இணைப்புக்கு நன்றி ஈழவன். இதோ சுந்தர வடிவேல் எழுதிய கட்டுரையும் அதற்கு ராஜா எழுதிய பதிலும் ......
தட்டுவோம், திறக்கும் - சுந்தர வடிவேல்
பத்தொன்பது வருடங்களுக்கு முன் இதே மே மாதம், 15ம் தேதி. 1985. ஒரு பயணியர் படகு. பெயர் குமுதினி. நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவன் தோணித்துறைக்குப் போனது. பயணம் செய்தது எத்தனை பேரென்று யாருக்குத் தெரியும்? ஐம்பதிருக்கலாம். ஆறு சிங்களக் கடற்படையினரும் ஏறினார்கள். நடுக்கடலில் ஒவ்வொரு பயணியையாக அழைத்தார்கள். உன் பெயரைச் சத்தம் போட்டுச் சொல் என்றார்கள். நடுங்கிய பயணிகள் சொன்னார்கள். வயசெத்தனை, எந்த ஊரு, எங்க போறே, கத்திச் சொல் என்றார்கள். சொன்னார்கள். பிறகு வெட்டிக் கொன்றார்கள். இரண்டு வயதுக் குழந்தை, பெண்கள் என்று நாற்பத்தெட்டு தமிழர்களை அந்தப் படகில் வைத்துக் கொன்றார்கள். நைனத் தீவுக் கடற்படைக் காரர்கள்தான் இந்தப் படுகொலைகளைச் செய்தது என்று நீதிமன்ற முறையீடு. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கண்ணால் கண்ட சாட்சிகளை வைத்து அது சிங்களக் கடற்படையினரே என்று வாதிட்டது. லலித் அதுலத் முதலியோ "யார் செய்தது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை"யென்று சொல்லிப் போய்விட்டார். நீதி மன்றத்தில் பத்தொன்பது வருடங்களாகத் தூங்குகிறது குமுதினிப் படகுப் படுகொலைக் கோப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி இந்தப் பிறவியில் கிடைக்குமா?
காங்கோ இனப் படுகொலையில் இதே மாதிரி ஒரு படகுக் கொலை நடந்தது உலகத்துக்கே தெரிகிறது. நியூயார்க் படகு விபத்தில் பத்து பேர் செத்துப் போனதற்கு உலகம் முழுக்கப் பதறுகிறது. 1994ல் க்யூபாவிலிருந்து தப்பிக்க 72 பேரோடு கிளம்பியவொரு படகு அந்நாட்டுக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டு, அதில் 41 பேர் செத்ததற்கு போப்புசாமி ஆறுதலாவது சொன்னாராம். ஆனால் இந்தக் குமுதினிப் படகுப் படுகொலையைப் பற்றி இணையத்தில் தேடிப் பார்த்தால், கிடைக்கும் பதிவுகளை ஒரு கையினால் விரல் விட்டு எண்ணி விடலாம். காங்கோ, நியூயார்க் சம்பவங்கள் கடந்த ஒரு வருடத்துக்குள் நடந்தவை. இப்போதிருக்கும் தொலைத் தொடர்பு வசதி 1985இலே இல்லையென்பதால்தான் அதைப் பற்றிய செய்திகள் இணையத்திலே கிடைக்கவில்லை என்பது காரணமா? அல்லது குறை நம்மிடம் இருக்கிறதா? நாம் எதையும் அம்பலப் படுத்துவதில்லை. எண்ணிக் குமைவதை யாரிடமும் சொல்வதில்லை. அதனாலேயே நாம் உலகின் பார்வையிலிருந்து விலகிக் கிடக்கிறோமா? நாம் பட்ட பழைய கஷ்டங்களை யாரிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது, எல்லாம் விதி, தலையெழுத்து என்ற மனப்பான்மை நமக்கு இருக்கிறதோ? சின்னதாயிருந்தாலும், பெரிதாயிருந்தாலும் நம்மிடையே நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பேரொலியுடன் அம்பலப் படுத்துவதன் மூலம்தானே பரபரப்பான இவ்வுலகின் கவனத்தை நாம் ஈர்க்க முடியும்? போராட்டமும், குரலெழுப்புதலும்தானே நமக்குத் தீர்வைத் தரும்? எனவே மனித உரிமைகள் மீறப்படும்போது நாம் துளியும் சகித்துக் கொள்ளாமல் (Zero Tolerance) குரலெழுப்ப வேண்டும்.
குமுதினி - ராஜாவின் மறுமொழி
தட்டுவோம், திறக்கும் என்ற சென்ற பதிவுக்கு நண்பர் ராஜா மறுமொழியிட முயன்றிருக்கிறார். என் மறுமொழிப் பெட்டியில் ஏதோ பிழை. அவரால பதிய முடியலை. தனியஞ்சலில் அனுப்பினார். அவருடைய மறுமொழி இதோ:
"இந்தக் குமுதினிப் படகுப் படுகொலையைப் பற்றி நான் கேள்விபட்டதில்லை. இது போல இன்னும் எத்தனையோ வெளியே வராத விசயங்கள் ஈழத்தில் நடந்துள்ளன. ஈழத்தைப் பற்றிப் பேசினாலோ, எழுதினாலோ அது தேசத் துரோகம் என்பது போல நம் நாட்டிலேயே எண்ணப்படும் போது நாம் அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் ஏன் சலித்து கொள்ள வேண்டும்? ராஜிவ் கொலை என்பது மன்னிக்க முடியாத, தன்னிலை விளக்கத்திற்கும் (துன்பியல் சம்பவ???்) உட்படுத்த முடியாத, நம் உணர்வுகளைக் காயப்படுத்திய, மாறாத ஒரு வடுவை நம் நெஞ்சங்களில் ஏற்ப்படுத்திவிட்ட ஒரு பாதகசெயல் என்ற விதத்தில் எனக்குப் புலிகள் மேல் தீராத ஆற்றாமை உண்டு. ஆனால் இப்போது நம் அமைதிப் படையினர் அங்கே செய்த கொடுமைகளைப் பற்றி அம்மக்கள் சொல்லக் கேட்கும் போது அவர்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறதோ என்று கொஞ்சம் மனதில் படுகிறது. அந்த ஒரு தவறை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நாம் இன்னும் ஈழம் பற்றியும், அம்மக்கள் படும் துயரம் பற்றியும் கிஞ்சித்தும் அக்கறையில்லாமல் இருப்பது, ஈழம் பற்றிப் பேசினாலே பொடா பாயும் என்று பயமுறுத்துவதும் நம் தமிழ் இனத்துக்கே நாம் செய்யும் வரலாற்றுத் துரோகம். ஒரு தமிழனாகிய எனக்கே இந்தக் குமுதினி படுகொலை இதுவரை தெரிய வில்லை, என்னைப் போன்ற பலருக்கும் இது வரை இது தெரியவில்லை என்பதும் இது பற்றிய செய்தியை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பதும் நம் தமிழ்நாட்டு ஊடகங்கள் நமக்கு செய்து வரும் மிகப் பெரிய துரோகம். முதலில் சரிய செய்யப்பட வேண்டியது இது தான்.
வெட்டி வீழ்த்தப்பட்டு, வெட்டுக் காயங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு முதல் உதவி முதலில் நாம் செய்வோம். உதவிக்கு அடுத்த வீட்டுக்காரன் கதவை தட்டுவது பற்றியெல்லாம் அப்புறம் யோசித்துக் கொள்ளலாம்".
தட்டுவோம், திறக்கும் - சுந்தர வடிவேல்
பத்தொன்பது வருடங்களுக்கு முன் இதே மே மாதம், 15ம் தேதி. 1985. ஒரு பயணியர் படகு. பெயர் குமுதினி. நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவன் தோணித்துறைக்குப் போனது. பயணம் செய்தது எத்தனை பேரென்று யாருக்குத் தெரியும்? ஐம்பதிருக்கலாம். ஆறு சிங்களக் கடற்படையினரும் ஏறினார்கள். நடுக்கடலில் ஒவ்வொரு பயணியையாக அழைத்தார்கள். உன் பெயரைச் சத்தம் போட்டுச் சொல் என்றார்கள். நடுங்கிய பயணிகள் சொன்னார்கள். வயசெத்தனை, எந்த ஊரு, எங்க போறே, கத்திச் சொல் என்றார்கள். சொன்னார்கள். பிறகு வெட்டிக் கொன்றார்கள். இரண்டு வயதுக் குழந்தை, பெண்கள் என்று நாற்பத்தெட்டு தமிழர்களை அந்தப் படகில் வைத்துக் கொன்றார்கள். நைனத் தீவுக் கடற்படைக் காரர்கள்தான் இந்தப் படுகொலைகளைச் செய்தது என்று நீதிமன்ற முறையீடு. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கண்ணால் கண்ட சாட்சிகளை வைத்து அது சிங்களக் கடற்படையினரே என்று வாதிட்டது. லலித் அதுலத் முதலியோ "யார் செய்தது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை"யென்று சொல்லிப் போய்விட்டார். நீதி மன்றத்தில் பத்தொன்பது வருடங்களாகத் தூங்குகிறது குமுதினிப் படகுப் படுகொலைக் கோப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி இந்தப் பிறவியில் கிடைக்குமா?
காங்கோ இனப் படுகொலையில் இதே மாதிரி ஒரு படகுக் கொலை நடந்தது உலகத்துக்கே தெரிகிறது. நியூயார்க் படகு விபத்தில் பத்து பேர் செத்துப் போனதற்கு உலகம் முழுக்கப் பதறுகிறது. 1994ல் க்யூபாவிலிருந்து தப்பிக்க 72 பேரோடு கிளம்பியவொரு படகு அந்நாட்டுக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டு, அதில் 41 பேர் செத்ததற்கு போப்புசாமி ஆறுதலாவது சொன்னாராம். ஆனால் இந்தக் குமுதினிப் படகுப் படுகொலையைப் பற்றி இணையத்தில் தேடிப் பார்த்தால், கிடைக்கும் பதிவுகளை ஒரு கையினால் விரல் விட்டு எண்ணி விடலாம். காங்கோ, நியூயார்க் சம்பவங்கள் கடந்த ஒரு வருடத்துக்குள் நடந்தவை. இப்போதிருக்கும் தொலைத் தொடர்பு வசதி 1985இலே இல்லையென்பதால்தான் அதைப் பற்றிய செய்திகள் இணையத்திலே கிடைக்கவில்லை என்பது காரணமா? அல்லது குறை நம்மிடம் இருக்கிறதா? நாம் எதையும் அம்பலப் படுத்துவதில்லை. எண்ணிக் குமைவதை யாரிடமும் சொல்வதில்லை. அதனாலேயே நாம் உலகின் பார்வையிலிருந்து விலகிக் கிடக்கிறோமா? நாம் பட்ட பழைய கஷ்டங்களை யாரிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது, எல்லாம் விதி, தலையெழுத்து என்ற மனப்பான்மை நமக்கு இருக்கிறதோ? சின்னதாயிருந்தாலும், பெரிதாயிருந்தாலும் நம்மிடையே நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பேரொலியுடன் அம்பலப் படுத்துவதன் மூலம்தானே பரபரப்பான இவ்வுலகின் கவனத்தை நாம் ஈர்க்க முடியும்? போராட்டமும், குரலெழுப்புதலும்தானே நமக்குத் தீர்வைத் தரும்? எனவே மனித உரிமைகள் மீறப்படும்போது நாம் துளியும் சகித்துக் கொள்ளாமல் (Zero Tolerance) குரலெழுப்ப வேண்டும்.
குமுதினி - ராஜாவின் மறுமொழி
தட்டுவோம், திறக்கும் என்ற சென்ற பதிவுக்கு நண்பர் ராஜா மறுமொழியிட முயன்றிருக்கிறார். என் மறுமொழிப் பெட்டியில் ஏதோ பிழை. அவரால பதிய முடியலை. தனியஞ்சலில் அனுப்பினார். அவருடைய மறுமொழி இதோ:
"இந்தக் குமுதினிப் படகுப் படுகொலையைப் பற்றி நான் கேள்விபட்டதில்லை. இது போல இன்னும் எத்தனையோ வெளியே வராத விசயங்கள் ஈழத்தில் நடந்துள்ளன. ஈழத்தைப் பற்றிப் பேசினாலோ, எழுதினாலோ அது தேசத் துரோகம் என்பது போல நம் நாட்டிலேயே எண்ணப்படும் போது நாம் அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் ஏன் சலித்து கொள்ள வேண்டும்? ராஜிவ் கொலை என்பது மன்னிக்க முடியாத, தன்னிலை விளக்கத்திற்கும் (துன்பியல் சம்பவ???்) உட்படுத்த முடியாத, நம் உணர்வுகளைக் காயப்படுத்திய, மாறாத ஒரு வடுவை நம் நெஞ்சங்களில் ஏற்ப்படுத்திவிட்ட ஒரு பாதகசெயல் என்ற விதத்தில் எனக்குப் புலிகள் மேல் தீராத ஆற்றாமை உண்டு. ஆனால் இப்போது நம் அமைதிப் படையினர் அங்கே செய்த கொடுமைகளைப் பற்றி அம்மக்கள் சொல்லக் கேட்கும் போது அவர்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறதோ என்று கொஞ்சம் மனதில் படுகிறது. அந்த ஒரு தவறை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நாம் இன்னும் ஈழம் பற்றியும், அம்மக்கள் படும் துயரம் பற்றியும் கிஞ்சித்தும் அக்கறையில்லாமல் இருப்பது, ஈழம் பற்றிப் பேசினாலே பொடா பாயும் என்று பயமுறுத்துவதும் நம் தமிழ் இனத்துக்கே நாம் செய்யும் வரலாற்றுத் துரோகம். ஒரு தமிழனாகிய எனக்கே இந்தக் குமுதினி படுகொலை இதுவரை தெரிய வில்லை, என்னைப் போன்ற பலருக்கும் இது வரை இது தெரியவில்லை என்பதும் இது பற்றிய செய்தியை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பதும் நம் தமிழ்நாட்டு ஊடகங்கள் நமக்கு செய்து வரும் மிகப் பெரிய துரோகம். முதலில் சரிய செய்யப்பட வேண்டியது இது தான்.
வெட்டி வீழ்த்தப்பட்டு, வெட்டுக் காயங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு முதல் உதவி முதலில் நாம் செய்வோம். உதவிக்கு அடுத்த வீட்டுக்காரன் கதவை தட்டுவது பற்றியெல்லாம் அப்புறம் யோசித்துக் கொள்ளலாம்".
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

