05-18-2004, 09:40 PM
நளினிக்கு மன்னிப்பு வழங்கிய சோனியா புலிகள் மீதான தடையினை நீக்குவார்ம.ம.மு. தலைவர் சந்திரசேகரன் நம்பிக்கை
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை இந்திய அரசாங்கம் நீக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பெ.சந்திரசேகரன் சென்னையில் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
தமிழர்களது பிரச்சினையில் இந்திய அரசாங்கம் மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். தற்போது ஈழத்தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சந்திரசேகரன் மேலும் தெரிவித்ததாவது:
ஆயுதம் ஏந்தி போராடும் போராளிகள் என்ற நிலையில் இருந்து மாறி ஜனநாயகமுறைப் படி அவர்களது ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட்டு 22 இடங்களில் வெற்றி பெற்று மக்களின் முழு ஆதரவை பெற்று உள்ளனர். எனவே இந்தியாவில் அவர்கள் மீது உள்ளதடையை இந்திய அரசு நீக்க வேண்டும்.
எனவே இந்தியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சோனியாவை சந்தித்து இந்த கோரிக்கையினை முன் வைக்க இருக்கிறோம். அதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 22 தமிழ் எம்.பி.க்கள் எதிர்வரும் ஜூலை மாதம் டில்லிக்கு வந்து சோனியாவை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைக்க இருக்கிறோம்.
நிச்சயமாக அவர் எங்கள் கோரிக்கையை ஏற்பார். ஏற்கனவே ராஜீவ் கொலையின் வழக்கில் தொடர்புடைய நளினிக்கு கூட மன்னிப்பு வழங்கி இருக்கிறார். எனவே விடுதலைப் புலிகள் மீதான தடையை சோனியா நீக்க முன்வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும் எங்கள் தரப்பு நியாயம் பற்றி இந்திய தலைவர்கள் அனைவரையும் சந்தித்து எங்கள் குழு எடுத்து கூறும்.
தற்போது இலங்கையில் உள்ள சந்திரிகா ஆட்சியில் ஈழப் பிரச்சினை தீரவாய்ப்பு இல்லை.ரணில் தலைமையில் ஆட்சிவர வேண்டும் அல்லது அவரைவிட தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர் ஆட்சிக்கு வந்தால் தான் இந்த பிரச்சினை தீரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வீரகேசரி
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை இந்திய அரசாங்கம் நீக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பெ.சந்திரசேகரன் சென்னையில் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
தமிழர்களது பிரச்சினையில் இந்திய அரசாங்கம் மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். தற்போது ஈழத்தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சந்திரசேகரன் மேலும் தெரிவித்ததாவது:
ஆயுதம் ஏந்தி போராடும் போராளிகள் என்ற நிலையில் இருந்து மாறி ஜனநாயகமுறைப் படி அவர்களது ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட்டு 22 இடங்களில் வெற்றி பெற்று மக்களின் முழு ஆதரவை பெற்று உள்ளனர். எனவே இந்தியாவில் அவர்கள் மீது உள்ளதடையை இந்திய அரசு நீக்க வேண்டும்.
எனவே இந்தியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சோனியாவை சந்தித்து இந்த கோரிக்கையினை முன் வைக்க இருக்கிறோம். அதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 22 தமிழ் எம்.பி.க்கள் எதிர்வரும் ஜூலை மாதம் டில்லிக்கு வந்து சோனியாவை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைக்க இருக்கிறோம்.
நிச்சயமாக அவர் எங்கள் கோரிக்கையை ஏற்பார். ஏற்கனவே ராஜீவ் கொலையின் வழக்கில் தொடர்புடைய நளினிக்கு கூட மன்னிப்பு வழங்கி இருக்கிறார். எனவே விடுதலைப் புலிகள் மீதான தடையை சோனியா நீக்க முன்வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும் எங்கள் தரப்பு நியாயம் பற்றி இந்திய தலைவர்கள் அனைவரையும் சந்தித்து எங்கள் குழு எடுத்து கூறும்.
தற்போது இலங்கையில் உள்ள சந்திரிகா ஆட்சியில் ஈழப் பிரச்சினை தீரவாய்ப்பு இல்லை.ரணில் தலைமையில் ஆட்சிவர வேண்டும் அல்லது அவரைவிட தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர் ஆட்சிக்கு வந்தால் தான் இந்த பிரச்சினை தீரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

