05-18-2004, 01:09 PM
காங். மூத்த தலைவர் மன்மோகன் சிங் பிரதமராகிறார்?
<img src='http://www.webulagam.com/homepage/mainimages/img2_5182004_42833am.jpg' border='0' alt='user posted image'>
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் பிரதமர் பதவியை ஏற்கக் கூடும் என்று தெரிகிறது.
குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை இன்று நண்பகல்வாக்கில் சோனியா காந்தி சந்தித்துப் பேசினார்.
அப்போது அவருடன் மன்மோகன் சிங்கும் உடன் சென்றிருந்தார். ஏற்கனவே நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதித் துறை பொறுப்பை வகித்த மன்மோகன் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்தபோது தான் புதிய பொருளாதாரக் கொள்கையை வகுத்து அமல்படுத்தத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பா.ஜ.க தரப்பில் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்றும், அவர் பிரதமர் போன்று உயரிய பதவியை வகிக்கக் கூடாது என்றும், அவரது பதவியேற்பு நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாகவும் பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் பதவிக்கான போட்டியில் மன்மோகன்சிங்கும், பிரணாப் முகர்ஜியும் இருந்தபோதிலும் பிரணாப் முகர்ஜி பிரதமராவதற்கு இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் மன்மோகன் சிங்கே பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வெளியிடுவார் என்று டெல்லியில் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெப் உலகம்
<img src='http://www.webulagam.com/homepage/mainimages/img2_5182004_42833am.jpg' border='0' alt='user posted image'>
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் பிரதமர் பதவியை ஏற்கக் கூடும் என்று தெரிகிறது.
குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை இன்று நண்பகல்வாக்கில் சோனியா காந்தி சந்தித்துப் பேசினார்.
அப்போது அவருடன் மன்மோகன் சிங்கும் உடன் சென்றிருந்தார். ஏற்கனவே நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதித் துறை பொறுப்பை வகித்த மன்மோகன் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்தபோது தான் புதிய பொருளாதாரக் கொள்கையை வகுத்து அமல்படுத்தத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பா.ஜ.க தரப்பில் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்றும், அவர் பிரதமர் போன்று உயரிய பதவியை வகிக்கக் கூடாது என்றும், அவரது பதவியேற்பு நிகழ்ச்சியைப் புறக்கணிக்கப் போவதாகவும் பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் பதவிக்கான போட்டியில் மன்மோகன்சிங்கும், பிரணாப் முகர்ஜியும் இருந்தபோதிலும் பிரணாப் முகர்ஜி பிரதமராவதற்கு இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் மன்மோகன் சிங்கே பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வெளியிடுவார் என்று டெல்லியில் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

