05-18-2004, 01:06 PM
பிரதமராக சோனியா காந்தி மறுப்பு!
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பிரதமர் பதவிக்கு 320 மக்களவை உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவருமான சோனியா காந்தி, பிரதமர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்!
டெல்லி உள்ளிட்ட இந்திய அரசியலில் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ள இம்முடிவை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், கருணாநிதி, ஹர்கிஷன், சரத்பவார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் சோனியா காந்தி நேரடியாக தெரிவித்துவிட்டதாக டெல்லி செய்திகள் கூறுகின்றன.
குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று இன்று காலை அவரை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, இப்படிப்பட்ட எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. அனைத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் நாளை மீண்டும் குடியரசுத் தலைவரை சந்திப்பேன் என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார்.
அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திற்குச் சென்ற சோனியா காந்தி பிரதமராக தான் பொறுப்பேற்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பிரதமராக தான் பொறுப்பேற்க விரும்பவில்லை என்பதனை மே 15 ஆம் தேதி நடந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்திலேயே சோனியா காந்தி அறிவிக்க திட்டமிட்டிருந்தார் என்றும், ஆனால் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதை ஆதரிக்கும் அரசியல் தலைவர்களின் வற்புறுத்தலால் தனது முடிவை அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தனது அன்னிய நாட்டவர் பிரச்சனை புதிய அரசை பலவீனப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே பிரதமர் பதவி ஏற்காமல் சோனியா காந்தி ஒதுங்கிக் கொள்வதாகக் கூறுப்படுகிறது.
தனது முடிவிற்கான காரணத்தை இன்று மாலை 5 மணிக்கு ஒரு அறிக்கையாக சோனியா காந்தி வெளியிடுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோனியா காந்தி பிரதமராக பதவியேற்க மறுத்துவிட்டாலும், மூத்த தலைவர் மன்மோகன் சிங் பிரதமராக ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும், அவருக்கு காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும், இடதுசாரி உள்ளிட்ட மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்திட வேண்டும் என்றும் அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.
வெப் உலகம்
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பிரதமர் பதவிக்கு 320 மக்களவை உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவருமான சோனியா காந்தி, பிரதமர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்!
டெல்லி உள்ளிட்ட இந்திய அரசியலில் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ள இம்முடிவை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், கருணாநிதி, ஹர்கிஷன், சரத்பவார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் சோனியா காந்தி நேரடியாக தெரிவித்துவிட்டதாக டெல்லி செய்திகள் கூறுகின்றன.
குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று இன்று காலை அவரை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, இப்படிப்பட்ட எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. அனைத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் நாளை மீண்டும் குடியரசுத் தலைவரை சந்திப்பேன் என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார்.
அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திற்குச் சென்ற சோனியா காந்தி பிரதமராக தான் பொறுப்பேற்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பிரதமராக தான் பொறுப்பேற்க விரும்பவில்லை என்பதனை மே 15 ஆம் தேதி நடந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்திலேயே சோனியா காந்தி அறிவிக்க திட்டமிட்டிருந்தார் என்றும், ஆனால் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதை ஆதரிக்கும் அரசியல் தலைவர்களின் வற்புறுத்தலால் தனது முடிவை அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தனது அன்னிய நாட்டவர் பிரச்சனை புதிய அரசை பலவீனப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே பிரதமர் பதவி ஏற்காமல் சோனியா காந்தி ஒதுங்கிக் கொள்வதாகக் கூறுப்படுகிறது.
தனது முடிவிற்கான காரணத்தை இன்று மாலை 5 மணிக்கு ஒரு அறிக்கையாக சோனியா காந்தி வெளியிடுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோனியா காந்தி பிரதமராக பதவியேற்க மறுத்துவிட்டாலும், மூத்த தலைவர் மன்மோகன் சிங் பிரதமராக ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும், அவருக்கு காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும், இடதுசாரி உள்ளிட்ட மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்திட வேண்டும் என்றும் அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.
வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

