05-05-2004, 09:53 AM
[size=14]இல்லை ஈழவன்
நான் தொடர்ந்து எழுதவே விரும்புகிறேன்.இது கூட எவரையும் குறை கூறும் நோக்கிலல்ல.
நமது படைப்புகள் ஏன் வளரவில்லை என்பது குறித்து பலருக்குத் தெரிய வேண்டும். அதையாவது புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில்தான் எழுதத் தலைப்பட்டேன்.
நமது குறைகள் நமக்குத் தெரிந்தால்தான் நாம் முன்னேற முடியும்.
சில சமயங்களில், சின்ன விடயங்களைக் கூட பெரிது படுத்தக் கூடியவர்கள் இன்னும் எம்மிடமிருக்கிறார்கள்.அதற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டும். அண்மையில் ஒரு நண்பர் படம் எடுப்பவர்களின் வாழ்கையையே படம் எடுக்க வேண்டுமென்ற கருத்தை முன் வைத்திருந்தார்.
இவற்றால் நான் பெற்ற லாபம் என்ன என்பது என் நண்பர்களுக்குத் தெரியும். அவர்கள் எனக்குச் சொல்லும் உபதேசம் இதுதான்:-
"கையில கிடைச்சதை கரியாக்கிற வேலையை எப்ப நிறுத்திறியோ அண்டைக்குத்தான் உருப்படுவாய்."
இதுதான் நான் பெற்ற புகழாரம்.
எமது பணத்தையும் நேரத்தையும் கரியாக்கி குழம்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை.
இதுவேதான் இலங்கை தமிழ் சினிமாக்காரர்களுக்கும் நடந்தது. இவை பலருக்குத் தெரியாது. நான் எனது 13வயதில் சினிமாவுக்குள் போன காரணத்தாலும் ,இலங்கையில் பல இயக்குனர்கள் குடும்ப நண்பர்களாக இருந்ததாலும், அவர்கள் இவை பற்றி என் தந்தையுடன் பேசுவதைக் கேட்டதாலும் ,எனக்கு பல விடயங்கள் தெரியும்.
அதுவே இன்னும் தொடர்வது வேதனையாக இருக்கிறது.
சிங்கள சினிமாவின் பார்வையாளர்களிடமோ, மக்களிடமோ இந்த நிலையில்லாததால் அவர்களது படைப்புகள் (யதார்த்த சினிமா) சர்வதேச தரத்தில் பேசப்படுகின்றன.
அதிகமான இந்திய சினிமாக்கள் பொழுது போக்கு சினிமாவே. அவற்றை வெளி நாட்டவர்கள் மசாலா என்றே அழைக்கிறார்கள். இப்படியான கருத்துள்ளோருக்கு எனது சினிமாவோ ஆதங்கமோ தேவைப்படாது. அவர்களை உருவாக்க எனக்கு நேரமில்லை.
நாம் வாழப் போவது கொஞ்ச காலம்தான். அதற்குள் எதையாவது செய்ய வேண்டும்.
அதை யோசித்த பின்னர்தான் எனது பாதையை மாற்றினேன். மீண்டும் சுவிசின் சினிமாவில் முழு நேரமாக இறங்க முடிவு செய்தேன். இறங்கியும் விட்டேன்.
முடியும் போது எழுதுவேன். இருப்பினும், உலக சினிமாவிலிருந்து எதையாவது வாசிக்கக் கிடைத்தால் அவற்றை இங்கு இணைத்தால் யாராவது பயனடைவார்கள் என்று இணைத்தேன்.
![[Image: cinema.jpg]](http://images.google.ch/images?q=tbn:XU8lrUIXVwsJ:makochan.free.fr/presentation/satsuobs/cinema.jpg)
எவரும் வென்றால்தான் அவன் சாதனையாளன். தோற்றால் அவனுக்கு நாமங்கள் வேறு..........................
Ready..............Rolling....................Take.1
எது சரி?
AJeevan
நான் தொடர்ந்து எழுதவே விரும்புகிறேன்.இது கூட எவரையும் குறை கூறும் நோக்கிலல்ல.
நமது படைப்புகள் ஏன் வளரவில்லை என்பது குறித்து பலருக்குத் தெரிய வேண்டும். அதையாவது புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில்தான் எழுதத் தலைப்பட்டேன்.
நமது குறைகள் நமக்குத் தெரிந்தால்தான் நாம் முன்னேற முடியும்.
சில சமயங்களில், சின்ன விடயங்களைக் கூட பெரிது படுத்தக் கூடியவர்கள் இன்னும் எம்மிடமிருக்கிறார்கள்.அதற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டும். அண்மையில் ஒரு நண்பர் படம் எடுப்பவர்களின் வாழ்கையையே படம் எடுக்க வேண்டுமென்ற கருத்தை முன் வைத்திருந்தார்.
இவற்றால் நான் பெற்ற லாபம் என்ன என்பது என் நண்பர்களுக்குத் தெரியும். அவர்கள் எனக்குச் சொல்லும் உபதேசம் இதுதான்:-
"கையில கிடைச்சதை கரியாக்கிற வேலையை எப்ப நிறுத்திறியோ அண்டைக்குத்தான் உருப்படுவாய்."
இதுதான் நான் பெற்ற புகழாரம்.
எமது பணத்தையும் நேரத்தையும் கரியாக்கி குழம்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை.
இதுவேதான் இலங்கை தமிழ் சினிமாக்காரர்களுக்கும் நடந்தது. இவை பலருக்குத் தெரியாது. நான் எனது 13வயதில் சினிமாவுக்குள் போன காரணத்தாலும் ,இலங்கையில் பல இயக்குனர்கள் குடும்ப நண்பர்களாக இருந்ததாலும், அவர்கள் இவை பற்றி என் தந்தையுடன் பேசுவதைக் கேட்டதாலும் ,எனக்கு பல விடயங்கள் தெரியும்.
அதுவே இன்னும் தொடர்வது வேதனையாக இருக்கிறது.
சிங்கள சினிமாவின் பார்வையாளர்களிடமோ, மக்களிடமோ இந்த நிலையில்லாததால் அவர்களது படைப்புகள் (யதார்த்த சினிமா) சர்வதேச தரத்தில் பேசப்படுகின்றன.
அதிகமான இந்திய சினிமாக்கள் பொழுது போக்கு சினிமாவே. அவற்றை வெளி நாட்டவர்கள் மசாலா என்றே அழைக்கிறார்கள். இப்படியான கருத்துள்ளோருக்கு எனது சினிமாவோ ஆதங்கமோ தேவைப்படாது. அவர்களை உருவாக்க எனக்கு நேரமில்லை.
நாம் வாழப் போவது கொஞ்ச காலம்தான். அதற்குள் எதையாவது செய்ய வேண்டும்.
அதை யோசித்த பின்னர்தான் எனது பாதையை மாற்றினேன். மீண்டும் சுவிசின் சினிமாவில் முழு நேரமாக இறங்க முடிவு செய்தேன். இறங்கியும் விட்டேன்.
முடியும் போது எழுதுவேன். இருப்பினும், உலக சினிமாவிலிருந்து எதையாவது வாசிக்கக் கிடைத்தால் அவற்றை இங்கு இணைத்தால் யாராவது பயனடைவார்கள் என்று இணைத்தேன்.
![[Image: cinema.jpg]](http://images.google.ch/images?q=tbn:XU8lrUIXVwsJ:makochan.free.fr/presentation/satsuobs/cinema.jpg)
எவரும் வென்றால்தான் அவன் சாதனையாளன். தோற்றால் அவனுக்கு நாமங்கள் வேறு..........................
Ready..............Rolling....................Take.1எது சரி?
AJeevan

