05-03-2004, 10:14 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கவிதை எழுத வேண்டும் என்றேன்,
காதலித்து பார் என்றார்கள்,
காதலித்தேன் கவிதை வந்தது,
கூட கண்ணீரும் வந்தது
காதலித்தால் மட்டும் தான் கவிதை
வரும் என்பது வெறும் மாயம்
பாதி சிந்தை, பாதி நிஜம் ரெண்டும்
கலந்தது தான் கவிதை!!!
என் சோகம், என் குழப்பம்
என் கவிதை வரிகள்
ஒரு புது வடிவு எடுக்கின்றது
நான் உங்களுக்கு எதாவது
உதவி செய்ய முடியும் என்றால் ....
அது என் கவிதை மட்டும்....கண்ணீர் துளி..அல்ல
அன்புடன்
கண்ணடி மின்னல் சுவிற்மிச் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வணக்கம் சுவிற்மிச்...
காதலித்தால் கவிதை வரும். காதல் வெற்றிகரமாக அமைந்து இன்பம் தந்தாலும், அது தோல்வியாக அமைந்து சோகம் தந்தாலும் காதலித்ததால் தானோ கவிதை வந்தது!?
தொடருங்கள்...உங்கள் கவிதைகளை இன்றுதான் வாசிக்க நேர்ந்தது. மன்னிக்கவும். தொடருங்கள். எழுதுங்கள். பயின்று பயின்று பயன்று தேர்ச்சி பெறுங்கள்.காதலோடு மட்டும் நின்றுவிடாதீர்கள். ஆண்பெண் காதலுக்கும் அப்பால் எழுதுவதற்கு, அதாவது கவிதையில் தெரிவிப்பதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. உங்களைப் போன்ற இளையவர்கள் துணிந்து நிறைய எழுதவேண்டும். எனவே சமுதாயத்தின் வேறு பக்கங்களைப் பற்றியும் சிந்தியுங்கள்.
சிறப்புப் பாராட்டு: நம்முடைய இளைய சமூகம் எல்லாம் ஆங்கிலத்தில் எழுத முற்படும் போது, ஆரம்பத்தில் தமிழில் எழுதினால் தான் உள்ளே வரலாம் என்று விதிமுறை போட்டும் சளைக்காமல் முயற்சி செய்து உள்ளே வந்து கவிதை எழுதிப் பலபேரினதும் பாராட்டுப் பெற்ற உங்களை நிச்சயமாகப் பாராட்டியே ஆகவேண்டும்.
உங்கள் நண்பர்களுக்கும் தமிழில் எழுதும் ஆர்வத்தை நீங்கள் உண்டாக்கவேண்டும் என்பது என்னுடைய அவா. அவர்களையும் அழைத்து வாருங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் ...
நன்றி
காதலித்து பார் என்றார்கள்,
காதலித்தேன் கவிதை வந்தது,
கூட கண்ணீரும் வந்தது
காதலித்தால் மட்டும் தான் கவிதை
வரும் என்பது வெறும் மாயம்
பாதி சிந்தை, பாதி நிஜம் ரெண்டும்
கலந்தது தான் கவிதை!!!
என் சோகம், என் குழப்பம்
என் கவிதை வரிகள்
ஒரு புது வடிவு எடுக்கின்றது
நான் உங்களுக்கு எதாவது
உதவி செய்ய முடியும் என்றால் ....
அது என் கவிதை மட்டும்....கண்ணீர் துளி..அல்ல
அன்புடன்
கண்ணடி மின்னல் சுவிற்மிச் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வணக்கம் சுவிற்மிச்...
காதலித்தால் கவிதை வரும். காதல் வெற்றிகரமாக அமைந்து இன்பம் தந்தாலும், அது தோல்வியாக அமைந்து சோகம் தந்தாலும் காதலித்ததால் தானோ கவிதை வந்தது!?
தொடருங்கள்...உங்கள் கவிதைகளை இன்றுதான் வாசிக்க நேர்ந்தது. மன்னிக்கவும். தொடருங்கள். எழுதுங்கள். பயின்று பயின்று பயன்று தேர்ச்சி பெறுங்கள்.காதலோடு மட்டும் நின்றுவிடாதீர்கள். ஆண்பெண் காதலுக்கும் அப்பால் எழுதுவதற்கு, அதாவது கவிதையில் தெரிவிப்பதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. உங்களைப் போன்ற இளையவர்கள் துணிந்து நிறைய எழுதவேண்டும். எனவே சமுதாயத்தின் வேறு பக்கங்களைப் பற்றியும் சிந்தியுங்கள்.
சிறப்புப் பாராட்டு: நம்முடைய இளைய சமூகம் எல்லாம் ஆங்கிலத்தில் எழுத முற்படும் போது, ஆரம்பத்தில் தமிழில் எழுதினால் தான் உள்ளே வரலாம் என்று விதிமுறை போட்டும் சளைக்காமல் முயற்சி செய்து உள்ளே வந்து கவிதை எழுதிப் பலபேரினதும் பாராட்டுப் பெற்ற உங்களை நிச்சயமாகப் பாராட்டியே ஆகவேண்டும்.
உங்கள் நண்பர்களுக்கும் தமிழில் எழுதும் ஆர்வத்தை நீங்கள் உண்டாக்கவேண்டும் என்பது என்னுடைய அவா. அவர்களையும் அழைத்து வாருங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் ...
நன்றி

