Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா கனாக்கள்
#13
[align=center:3b478ea4ad]<img src='http://www.yarl.com/forum/files/sandle.1.jpeg' border='0' alt='user posted image'>[/align:3b478ea4ad]


[align=center:3b478ea4ad] <span style='color:red'><b>செருப்பு குறும்படம் பற்றி சில நிமிடம்</b>
செல்வி தர்மினி பத்மநாதன்,
யாழ் பல்கலைக்கழகம்
நன்றி வீரகேசரி வாரவெளியீடு[/align:3b478ea4ad]
சமாதானச்சுருள் திரைப்பட வெளியீடு அண்மையில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது பெரும் எண்ணிக்கையில் இரகசிர்கள் அங்கு திரண்டிருந்தனர். 7 குறும்படங்கள் அங்கு திரையிடப்பட்டன. அவற்றில் என் மனதை பாதித்த படைப்புக்கள் \"செருப்பு\" \" போருக்குப்பின் \"என்பனவாகும்

தென்னிந்திய திரைப்படத்தையும், தொடர் நாடகங்களையும் பார்த்து அந்த கற்பனையில் நாம் வாழ கற்றுக்கொள்கின்றோம். எமது தாயகத்தின் பிரதிபலிப்புக்களை ஏனேதா தானோ என்று விட்டுவிடுகின்றோம் போலிருக்கின்றது. ஆனால் நாம் ஒரு முறை எம்மை திரும்பி பார்க்க வேண்டும். எமக்குள் ஆழப்புதைந்த வடுக்களை உரணவேண்டும். இவைதான் காலத்தால் அழியாதவை. அந்த உணர்வுகள் ஒரு முறை எமது தேசத்தை மீட்டுப்பார்க்க உதவும்

\"கடலோரக்காற்று\" \"உப்பில் உறைந்த உதிரங்கள்\" ஆகியவை பல்கலையில் திரையிட்டபோது நிறைந்து வழிந்த ரசிகர்களை \"அம்மா நலமா ? \" திரையிட்டபோது காணமுடியவில்லை.

இருப்பினும் : \"செருப்பு\" குறும்படத்தில் ஆரம்பத்தில் உயிர் பெறுகின்ற களம் வன்னிநிலப்பரப்பு என்பதை உணர்த்துகின்றது. பாழடைந்த கட்டிடம். ஏழ்மை நிறைந்த குடும்பம். அவர்களை பிண்ணனியாக கொண்டு கதை நகர்த்தப்படுகின்றது பொருளாதார வசதியின்மையால் செருப்பு வாங்குவதற்கு சிறுமி உண்டியல் சேர்க்கிறாள். உண்டியல் சேர்த்த பணத்தில் செருப்பு வாங்கியும் அவள் ஆசைக்கு அதை அணியவில்லை என்பதே குழந்தை மனத்தின் சோகம். வெளிப்பார்வை என்பதைவிட அவள் அடிமனதின் ஆழத்தை அவளது ஏக்கத்தை ரசிகர்கள் மீது நேரடியாக உடைக்காமல் மெல்ல மெல்ல நுழைக்கிறார் தயாரிப்பாளர் கௌதம்.

சிறுமி பெண் என்ற ரீதியில் மிக அமைதியாகவே தன் ஏக்கத்தை மனதில் அடக்கி வைத்திருக்கின்றார். தன் நண்பியிடம் ஆசைக்கு ஓரு தடைவ செருப்பை போட்டுப்பார்க் கவிரும்பி கேட்கின்றாள். பாடசாலை போகும்போது வெறுங்காலுடன் வெயிலில் நடந்து போவதும் காலில் கொப்பளங்கள் வருவதும் மனதை உருக்குகின்றுது. அதில் அவளுக்கு ஏற்படும் கவலைகள் . . ?

தொடர்ந்து அவளது தங்கை செருப்பு வாங்கி வந்தததைக்கண்டதும் அந்த ஆசையில் தான் நின்ற பிரதேசத்தையும் கவனிக்காமல் ஓடியபோது அவலம் வந்து சேர்கின்றது. பாதத்தை இழந்த சிறுமி தனக்கு வாங்கி வந்த செருப்பில் ஓன்றை போட்டுப்பார்ப்பதும் \"நான் செருப்பபு வாங்கிட்டன் வாடி \" என்று வெளியில் நின்ற நண்பியை வீட்டிற்குள் கூப்பிடுவதும் அந்த சிறுமியின் உள்ளார்ந்த வேதனையின் வெளிப்பாட்டை காணலாம். இங்கு சிறுமிக்கு செருப்பு முக்கியமில்லை. அவளின் பாதம்தான் முக்கிய கருவாகின்றது. இனி எத்தனை செருப்பு வாங்கியும் என்ன பயன் ?

இளம் தயாரிப்பாளார் கௌதம் மிதிவெடி வெடிப்பதுடனேயே படத்தை முடித்திருக்கலாம் போலும். வாசகர்களின் சிந்தனைக்கு படத்தை தூரப்படுத்தி விட்டிருக்கலாம்.

[align=center:3b478ea4ad]விளைநிலம் எம் நிலம்
செந்நிலம் -வெடிக்கும்
விதைகளை விதைத்தது
அரக்க கூட்டம் . .
(யாழ்வாணன் கவிதைகள் )[/align:3b478ea4ad]

வன்னி நிலத்தில் இன்று எம் உறவுகளை முடக்கி விடும் விதைகள் எத்தனை ? அந்த வகையில் ' செருப்பு' யுத்தமேகம் சூழ்ந்த எமது தாயகத்தின் ஓரு துளியினை ஆவணமாகத்தந்துள்ளது. பிரதேச ஆக்கிரமிப்புமு; அவற்றின் விளைவுகளுமே எண்ணிலடங்காதன. அவற்றின் ஓரு துளியே கௌதமின் ' செருப்பு '

இளம் வயதிலேயே பலரும் பேசக்கூடிய வகையில் எடுத்துக்கொண்ட முயற்சி வாழ்த்துவதற்குரியது. இங்கு ஏதோ ஓர் வகை 'தொற்றல்' இந்த கலைஞனை பீடித்திருக்கின்றுது போலும். குறிப்பாக பேசும் கலை இசை காலம் இடம் சூழல் என்பன அவரின் திறனுக்கெட்டியவரை நகர்ந்து செல்கின்றது.

எமது தேசியமும் அதன் வரலாறுகளும் ஆவணமாக வேண்டிய சூலில் நகர்ந்து கொண்டிருப்பது சிறப்பானது. தேசிய உண்மைகள் பேணப்பட குறும்படமும் ஓர் உத்தியாக இருக்கின்றது. அந்த வகையில் தொடர்ந்தும் இக்கலைஞன் ஈழவரலாற்றை பேணும் தேடலில் வாழும் போது அவனது அர்ப்பணிப்பு, அவன் வரலாறு பேசும்.</span>

[align=center:3b478ea4ad]நன்றி:
]http://www.paranee.yarl.net/[/align:3b478ea4ad]

[align=center:3b478ea4ad] <b>குறிப்பு:</b> விமர்சகர், இயக்குனரை, தயாரிப்பாளர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நல்லதொரு விமர்சனம் முன் வைக்கப்படும் போது இப்படியான தவறுகள் நேராமல் இருந்தால் நல்லது.

AJeevan[/align:3b478ea4ad]
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 04-08-2004, 02:29 AM
[No subject] - by Eelavan - 04-08-2004, 03:45 AM
[No subject] - by AJeevan - 04-08-2004, 11:56 AM
[No subject] - by sOliyAn - 04-08-2004, 12:25 PM
[No subject] - by AJeevan - 04-24-2004, 07:59 PM
[No subject] - by AJeevan - 04-26-2004, 02:44 PM
[No subject] - by vasisutha - 04-27-2004, 09:59 PM
[No subject] - by AJeevan - 04-30-2004, 01:55 PM
[No subject] - by AJeevan - 04-30-2004, 02:17 PM
[No subject] - by AJeevan - 05-03-2004, 12:43 PM
[No subject] - by Mathan - 05-04-2004, 02:17 PM
[No subject] - by sOliyAn - 05-04-2004, 04:49 PM
[No subject] - by AJeevan - 05-04-2004, 11:01 PM
[No subject] - by sOliyAn - 05-05-2004, 12:53 AM
[No subject] - by Eelavan - 05-05-2004, 02:37 AM
[No subject] - by Eelavan - 05-05-2004, 02:38 AM
[No subject] - by AJeevan - 05-05-2004, 09:53 AM
[No subject] - by Mathan - 05-05-2004, 10:59 AM
[No subject] - by AJeevan - 05-05-2004, 11:36 AM
[No subject] - by AJeevan - 06-02-2004, 01:27 PM
[No subject] - by Mathivathanan - 06-02-2004, 01:44 PM
[No subject] - by Mathan - 06-02-2004, 02:38 PM
[No subject] - by Eelavan - 06-02-2004, 03:55 PM
[No subject] - by shanmuhi - 06-02-2004, 05:09 PM
[No subject] - by kuruvikal - 06-02-2004, 05:38 PM
[No subject] - by vasisutha - 06-03-2004, 12:10 AM
[No subject] - by Mathan - 06-03-2004, 04:08 AM
[No subject] - by Chandravathanaa - 06-03-2004, 07:17 AM
[No subject] - by sOliyAn - 06-03-2004, 08:03 AM
[No subject] - by AJeevan - 06-15-2004, 01:56 AM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 07:16 PM
[No subject] - by AJeevan - 07-06-2004, 03:39 AM
[No subject] - by sOliyAn - 07-06-2004, 02:36 PM
[No subject] - by AJeevan - 07-06-2004, 07:37 PM
[No subject] - by sOliyAn - 07-06-2004, 09:30 PM
[No subject] - by AJeevan - 07-07-2004, 01:15 AM
[No subject] - by AJeevan - 07-10-2004, 02:03 PM
[No subject] - by sOliyAn - 07-12-2004, 08:48 AM
[No subject] - by AJeevan - 07-12-2004, 11:24 AM
[No subject] - by பரஞ்சோதி - 08-21-2004, 05:23 PM
[No subject] - by AJeevan - 08-22-2004, 12:32 AM
[No subject] - by sOliyAn - 08-22-2004, 02:51 AM
[No subject] - by Mathivathanan - 08-22-2004, 03:12 AM
[No subject] - by sOliyAn - 08-22-2004, 06:14 AM
[No subject] - by AJeevan - 08-22-2004, 04:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)