04-26-2004, 08:55 PM
<b><span style='font-size:30pt;line-height:100%'>தமிழ் எம்.பிக்களின் ஒன்றியத்துக்கு பிரபாகரன் போட்ட பிள்ளையார் சுழி </b> </span>
Monday, 26 April 2004
--------------------------------------------------------------------------------
தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கடந்த செவ்வாயன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, மேல்மாகாண தமிழ் மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மூன்று கட்டங்களாக சந்தித்திருக்கிறார். பொதுத் தேர்தல் இடம்பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து நடந்த முதலாவது சந்திப்பு மட்டுமல்ல கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சமாதான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பின்னர் தமிழ் அரசியற் தலைவர்களை புலிகள் தலைவர் சந்தித்திருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனையவர்களை மிகமிக அவசியம் எனக் கருதும் பட்சத்திலேயே தலைவர் சந்திப்பார். பெரும்பாலும் சந்திப்புக்களை தவிர்த்துவரும் புலிகள் தலைவர் பிரபாகரன் மின்னாமல் முழங்காமல் - தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலையக தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். அதாவது 24 மாதங்களின் பின்னர் உள்ளுர் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து விடுதலை போராட்டத்திற்கு, தமிழ் தேசியத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மேற்கொள்ளவேண்டிய அரசியல் வியூகங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருக்கிறார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 ஆம் ஆண்டு ஐ_லை மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு இடப்படும் வாக்குகள் புறம்பான ஒரு தனிநாடு வேண்டுமா? ஒற்றையாட்சியின் கீழ் தொடர்ந்து வாழவேண்டுமா என்பதை நிர்ணயிப்பதாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகளாகக் கணிக்கப்படும். இந்த நாட்டில் வாழும் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழிடங்களை கொண்ட பகுதிகளை புவியியல் hPதியில் உள்ளடக்கிய சுதந்திரமான நிலைமையுடைய உலகியல் சார்ந்த சோசலிஷ தமிழீழ அரசை நிறுவும் அதிகாரத்தை தமிழ் மக்களிடமிருந்து கோருகிறது எனக் குறிப்பிட்டு 421, 486 வாக்குகளைப் பெற்றது.
மக்கள் ஆணையைப் பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அதனை நிறைவேற்ற முற்பட்டதோ இல்லையோ அதற்காக 27 வருடங்களாக போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் நடந்து முடிந்த தேர்தலில் புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள், தமிழ் தேசியம், தமிழ்த்தாயகம், இடைக்கால தன்னாட்சி அதிகார சபை என்பவற்றிற்கான மக்கள் ஆணையைப் பெற்ற தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்திருக்கிறார்.
இவர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் இரா. சம்பந்தன் மட்டுமே 1977 ஆம் ஆண்டு தேர்தலிலும் தமிழீழத்திற்கான மக்கள் ஆணையை பெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். இதனைவிட அத்தேர்தலில் பரப்புரையில் ஈடுபட்ட ஈழவேந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்களும் நடந்து முடிந்த மக்கள் ஆணையை தேர்தலின் மூலம் தெரிவானவர்களாவர்.
மேலும் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து ஆயுதமேந்தி போராடிய சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் போன்றவர்களும், ஏனைய புதுமுக எம். பிக்களும் கலந்து கொண்ட இச் சந்திப்பில் புலிகள் தலைவர் வே.பிரபாகரன், தேர்தலில் நீங்கள் சமர்ப்பித்த விஞ்ஞாபனத்தின் மூலம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்களுடன் இணைந்து பாடுபடுங்கள் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதேவேளை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் கருணா குழுவினரின் பேயாட்டம் தொடர்பாக எந்தவித உணர்வலைகளையும் நேரடியாக வெளிப்படுத்தாத புலிகள் தலைவர், இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் அதை வெளிப்படுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட இருண்ட காலத்தை அங்குள்ள போராளிகளும் பொதுமக்களும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். நான் பக்கபலமாக மட்டும் செயற்பட்டேன்.
வாகரை பிரதேசம் மீட்டக்கப்பட்டவுடன் போராளிகளைக் கொடுத்த பெற்றோர்கள் மீனகம் தளத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இது மக்களின் தேசியப் பற்றையே சுட்டிக்காட்டுகிறது.
ஒருவனுக்கு வீட்டுப்பற்று, பிரதேசப்பற்று, தேசியப்பற்று என்பன இருக்கவேண்டும். அதுவே பிரதேச வெறியாக இருக்கக்கூடாது. பிரதேசப்பற்று இல்லாது, தேசியப்பற்று ஏற்படாது.
போராட்ட இயக்கங்களில் உட்ப10சல்கள் ஏற்படுவது உண்டு. அதனை விடுதலை இயக்கமும், மக்களும் இனங்கண்டு தீர்த்திருக்கிறார்கள்.
கருணாவின் விவகாரம் பெரிதாக்கப்படாது சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது, என்று கூறிய பிரபா 22 தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மட்டக்களப்புக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி மக்கள் ஆணையைப் பெற்றபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முளைவிட்டு அரும்பிய நிலையிலேயே இருந்தது. தமிழ் மக்களிடம் இராணுவபலம் இருக்கவில்லை. ஆனால், இப்போது தமிழரசுக் கட்சி, மக்கள் ஆணையைப் பெற்றிருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் மக்கள் ஆயுத சமபலத்துடன் நின்றே தமது இருப்பை சர்வதேசத்திற்கு உணர்த்தியிருக்கிறார்கள். அப்போது தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையே கட்சியை வழிநடத்தியது. ஆனால், இப்போது நிலைமைவேறு. தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்று அவர்களின் வழிநடத்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிக்ஞை எடுத்துள்ளார்கள்.
இந்த அடிப்படையியே புலிகள் தலைவர் வே. பிரபாகரன் மக்கள் கொடுத்த வாக்குறுதிகளை பற்றுறுதியோடு செயற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் ஆரம்பித்து கடந்துபோன 27 வருடங்களில் 2001ஆம் ஆண்டுக்கான முன்னர் நடந்த போராட்டமும் தமிழர்களின் நாடாளுமன்ற அரசியலும் சமாந்தரப் பாதையில் செல்லவில்லை. கடந்த மூன்று வருடங்களாக அதற்கான சூழல் துளிர்விட்டு வருகிறது. பதின்மூன்றாவது நாடாளுமன்ற தேர்தல் அதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக இனிமேல் வெறும் நாடாளுமன்ற கதிரைக்கான அரசியல் நடத்தமுடியாது. மக்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் அளித்த வாக்குகளின் செயற்பாட்டு அரசியலையே நடத்த வேண்டுமென்பதை புலிகள் தலைவரின் சந்திப்பு, தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணர்த்தியிருக்கிறது என நம்பலாம்.
மேலும் இலங்கை தமிழரசுக் கட்சி மூலம் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர் புதுமுகங்களாவர். எனவே பழைய அரசியல்வாதிகள் மட்டும் தீர்மானங்களில் தனித்து ஆளுமை செலுத்தும் நிலை ஏற்படும் வாய்ப்பு குறைவு.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஆற்றல் மிக்க தலைமைத்துவம் வழங்கும் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் நாடாளுமன்ற அரசியலிலும் புதிய வீரியத்தை, விடுதலைப் போராட்டத்திற்கு மேலும் பலம் சேர்க்கக்கூடிய ஆளுமையை உருவாக்க விரும்புவதையே இந்தச் சந்திப்பு மூலம் பிரதிபலித்துள்ளார்.
தமிழ் மக்கள் இராணுவ பலத்தின் மூலம்மட்டுமன்றி, நாடாளுமன்ற அரசியல் பலத்தின் மூலம் தென்னக அரசியலில் சவால்களை ஏற்படுத்தும் சக்தியாக மாறி வருகின்றார்கள். அதற்கான வழிநடத்தல்களை புலிகள் வழங்குவார்கள் என்பதையும் அண்மைய சந்திப்பு உணர்த்தியிருக்கிறது.
அதேவேளை, மலையக மக்கள் முன்னணித் தலைவருடனான சந்திப்பின் போது, புலிகள் தலைவர் தெரிவித்துள்ள ஆலோசனையும் குறிப்பிடத்தக்கதாகும். கட்சி வேறுபாடுகளின்றி அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணையும் ஒன்றியம் அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். பதின்மூன்றாவது நாடாளுமன்றத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 22 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 10 உறுப்பினர்களும் மலையக மக்கள் முன்னணி சார்பில் இருவருமாக 34 உறுப்பினர்கள் தமிழர்கள். இவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடியவர்களாக உள்ளனர். இவர்களைவிட ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐக்கிய மக்கள சுதந்திர முன்னணி தேசிய பட்டியலின் மூலம் லக்ஷ்மன் கதிர்காமர், இராமலிங்கம் சந்திரசேகரன் (Nஐ.வி.பி) ஆகியோர் உள்ளனர். 36 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 33 உறுப்பினர்களை ஒன்றியமாக பொதுஐன பிரச்சினைகளை கையாள இணைக்க முடியும். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டுமென்ற கருத்து கடந்த ஓரிரு வருடங்களாக கருக்கட்டியிருந்தாலும் நடைமுறைப்படுத்த பிள்ளையார் சுழி போடப்படவில்லை. தற்போது புலிகள் தலைவர் அதற்கான அடித்தளத்தை வேண்டுகோளாக இட்டுள்ளார்.
விடுதலைப் போராட்டத்தில் பலம்பெற்று தடம்பதித்த தமிழ்மக்கள் போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்துவார்கள். அதற்கான அடித்தளம் புலிகள் தலைமையால் இடப்பட்டுள்ளது. சபாநாயகர் தெரிவின்போது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அரசியல் தமிழ் மக்களைப் பொறுத்தவரை கதிரைச் சுகத்திற்காக அல்ல. விடுதலைப் போராட்டத்தின் இன்னொரு வியூகமாக அமையும் என்பதை மூன்றாவது நாடாளுமன்றம் உணர்த்தத்தான் போகிறது.
G.நடேசன்-வீரகேசரி
Monday, 26 April 2004
--------------------------------------------------------------------------------
தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கடந்த செவ்வாயன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, மேல்மாகாண தமிழ் மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மூன்று கட்டங்களாக சந்தித்திருக்கிறார். பொதுத் தேர்தல் இடம்பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து நடந்த முதலாவது சந்திப்பு மட்டுமல்ல கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சமாதான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பின்னர் தமிழ் அரசியற் தலைவர்களை புலிகள் தலைவர் சந்தித்திருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனையவர்களை மிகமிக அவசியம் எனக் கருதும் பட்சத்திலேயே தலைவர் சந்திப்பார். பெரும்பாலும் சந்திப்புக்களை தவிர்த்துவரும் புலிகள் தலைவர் பிரபாகரன் மின்னாமல் முழங்காமல் - தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலையக தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். அதாவது 24 மாதங்களின் பின்னர் உள்ளுர் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து விடுதலை போராட்டத்திற்கு, தமிழ் தேசியத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மேற்கொள்ளவேண்டிய அரசியல் வியூகங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருக்கிறார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 ஆம் ஆண்டு ஐ_லை மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு இடப்படும் வாக்குகள் புறம்பான ஒரு தனிநாடு வேண்டுமா? ஒற்றையாட்சியின் கீழ் தொடர்ந்து வாழவேண்டுமா என்பதை நிர்ணயிப்பதாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகளாகக் கணிக்கப்படும். இந்த நாட்டில் வாழும் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழிடங்களை கொண்ட பகுதிகளை புவியியல் hPதியில் உள்ளடக்கிய சுதந்திரமான நிலைமையுடைய உலகியல் சார்ந்த சோசலிஷ தமிழீழ அரசை நிறுவும் அதிகாரத்தை தமிழ் மக்களிடமிருந்து கோருகிறது எனக் குறிப்பிட்டு 421, 486 வாக்குகளைப் பெற்றது.
மக்கள் ஆணையைப் பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அதனை நிறைவேற்ற முற்பட்டதோ இல்லையோ அதற்காக 27 வருடங்களாக போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் நடந்து முடிந்த தேர்தலில் புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள், தமிழ் தேசியம், தமிழ்த்தாயகம், இடைக்கால தன்னாட்சி அதிகார சபை என்பவற்றிற்கான மக்கள் ஆணையைப் பெற்ற தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்திருக்கிறார்.
இவர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் இரா. சம்பந்தன் மட்டுமே 1977 ஆம் ஆண்டு தேர்தலிலும் தமிழீழத்திற்கான மக்கள் ஆணையை பெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். இதனைவிட அத்தேர்தலில் பரப்புரையில் ஈடுபட்ட ஈழவேந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்களும் நடந்து முடிந்த மக்கள் ஆணையை தேர்தலின் மூலம் தெரிவானவர்களாவர்.
மேலும் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து ஆயுதமேந்தி போராடிய சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் போன்றவர்களும், ஏனைய புதுமுக எம். பிக்களும் கலந்து கொண்ட இச் சந்திப்பில் புலிகள் தலைவர் வே.பிரபாகரன், தேர்தலில் நீங்கள் சமர்ப்பித்த விஞ்ஞாபனத்தின் மூலம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்களுடன் இணைந்து பாடுபடுங்கள் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதேவேளை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் கருணா குழுவினரின் பேயாட்டம் தொடர்பாக எந்தவித உணர்வலைகளையும் நேரடியாக வெளிப்படுத்தாத புலிகள் தலைவர், இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் அதை வெளிப்படுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட இருண்ட காலத்தை அங்குள்ள போராளிகளும் பொதுமக்களும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். நான் பக்கபலமாக மட்டும் செயற்பட்டேன்.
வாகரை பிரதேசம் மீட்டக்கப்பட்டவுடன் போராளிகளைக் கொடுத்த பெற்றோர்கள் மீனகம் தளத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இது மக்களின் தேசியப் பற்றையே சுட்டிக்காட்டுகிறது.
ஒருவனுக்கு வீட்டுப்பற்று, பிரதேசப்பற்று, தேசியப்பற்று என்பன இருக்கவேண்டும். அதுவே பிரதேச வெறியாக இருக்கக்கூடாது. பிரதேசப்பற்று இல்லாது, தேசியப்பற்று ஏற்படாது.
போராட்ட இயக்கங்களில் உட்ப10சல்கள் ஏற்படுவது உண்டு. அதனை விடுதலை இயக்கமும், மக்களும் இனங்கண்டு தீர்த்திருக்கிறார்கள்.
கருணாவின் விவகாரம் பெரிதாக்கப்படாது சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது, என்று கூறிய பிரபா 22 தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மட்டக்களப்புக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி மக்கள் ஆணையைப் பெற்றபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முளைவிட்டு அரும்பிய நிலையிலேயே இருந்தது. தமிழ் மக்களிடம் இராணுவபலம் இருக்கவில்லை. ஆனால், இப்போது தமிழரசுக் கட்சி, மக்கள் ஆணையைப் பெற்றிருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் மக்கள் ஆயுத சமபலத்துடன் நின்றே தமது இருப்பை சர்வதேசத்திற்கு உணர்த்தியிருக்கிறார்கள். அப்போது தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையே கட்சியை வழிநடத்தியது. ஆனால், இப்போது நிலைமைவேறு. தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்று அவர்களின் வழிநடத்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிக்ஞை எடுத்துள்ளார்கள்.
இந்த அடிப்படையியே புலிகள் தலைவர் வே. பிரபாகரன் மக்கள் கொடுத்த வாக்குறுதிகளை பற்றுறுதியோடு செயற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் ஆரம்பித்து கடந்துபோன 27 வருடங்களில் 2001ஆம் ஆண்டுக்கான முன்னர் நடந்த போராட்டமும் தமிழர்களின் நாடாளுமன்ற அரசியலும் சமாந்தரப் பாதையில் செல்லவில்லை. கடந்த மூன்று வருடங்களாக அதற்கான சூழல் துளிர்விட்டு வருகிறது. பதின்மூன்றாவது நாடாளுமன்ற தேர்தல் அதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக இனிமேல் வெறும் நாடாளுமன்ற கதிரைக்கான அரசியல் நடத்தமுடியாது. மக்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் அளித்த வாக்குகளின் செயற்பாட்டு அரசியலையே நடத்த வேண்டுமென்பதை புலிகள் தலைவரின் சந்திப்பு, தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணர்த்தியிருக்கிறது என நம்பலாம்.
மேலும் இலங்கை தமிழரசுக் கட்சி மூலம் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர் புதுமுகங்களாவர். எனவே பழைய அரசியல்வாதிகள் மட்டும் தீர்மானங்களில் தனித்து ஆளுமை செலுத்தும் நிலை ஏற்படும் வாய்ப்பு குறைவு.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஆற்றல் மிக்க தலைமைத்துவம் வழங்கும் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் நாடாளுமன்ற அரசியலிலும் புதிய வீரியத்தை, விடுதலைப் போராட்டத்திற்கு மேலும் பலம் சேர்க்கக்கூடிய ஆளுமையை உருவாக்க விரும்புவதையே இந்தச் சந்திப்பு மூலம் பிரதிபலித்துள்ளார்.
தமிழ் மக்கள் இராணுவ பலத்தின் மூலம்மட்டுமன்றி, நாடாளுமன்ற அரசியல் பலத்தின் மூலம் தென்னக அரசியலில் சவால்களை ஏற்படுத்தும் சக்தியாக மாறி வருகின்றார்கள். அதற்கான வழிநடத்தல்களை புலிகள் வழங்குவார்கள் என்பதையும் அண்மைய சந்திப்பு உணர்த்தியிருக்கிறது.
அதேவேளை, மலையக மக்கள் முன்னணித் தலைவருடனான சந்திப்பின் போது, புலிகள் தலைவர் தெரிவித்துள்ள ஆலோசனையும் குறிப்பிடத்தக்கதாகும். கட்சி வேறுபாடுகளின்றி அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணையும் ஒன்றியம் அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். பதின்மூன்றாவது நாடாளுமன்றத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 22 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 10 உறுப்பினர்களும் மலையக மக்கள் முன்னணி சார்பில் இருவருமாக 34 உறுப்பினர்கள் தமிழர்கள். இவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடியவர்களாக உள்ளனர். இவர்களைவிட ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐக்கிய மக்கள சுதந்திர முன்னணி தேசிய பட்டியலின் மூலம் லக்ஷ்மன் கதிர்காமர், இராமலிங்கம் சந்திரசேகரன் (Nஐ.வி.பி) ஆகியோர் உள்ளனர். 36 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 33 உறுப்பினர்களை ஒன்றியமாக பொதுஐன பிரச்சினைகளை கையாள இணைக்க முடியும். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டுமென்ற கருத்து கடந்த ஓரிரு வருடங்களாக கருக்கட்டியிருந்தாலும் நடைமுறைப்படுத்த பிள்ளையார் சுழி போடப்படவில்லை. தற்போது புலிகள் தலைவர் அதற்கான அடித்தளத்தை வேண்டுகோளாக இட்டுள்ளார்.
விடுதலைப் போராட்டத்தில் பலம்பெற்று தடம்பதித்த தமிழ்மக்கள் போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்துவார்கள். அதற்கான அடித்தளம் புலிகள் தலைமையால் இடப்பட்டுள்ளது. சபாநாயகர் தெரிவின்போது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அரசியல் தமிழ் மக்களைப் பொறுத்தவரை கதிரைச் சுகத்திற்காக அல்ல. விடுதலைப் போராட்டத்தின் இன்னொரு வியூகமாக அமையும் என்பதை மூன்றாவது நாடாளுமன்றம் உணர்த்தத்தான் போகிறது.
G.நடேசன்-வீரகேசரி

