04-26-2004, 02:44 PM
[align=center:5c1d153f30]<b><span style='font-size:30pt;line-height:100%'>குட்டி </b></span>
<img src='http://www.thatstamil.com/images/kutty/kutty200.jpg' border='0' alt='user posted image'>
திரை விமர்சனம்[/align:5c1d153f30]
[size=14]மும்தாஜ் டான்ஸ் இல்லை, அனல் பறக்கும் சண்டைகள் இல்லை, வெளிநாட்டு லொகேஷன் இல்லை, கிராபிக்ஸ் இல்லை. இத்தனையும் இல்லாமல் ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் ரமேஷ் அருணச்சாச்சலமும், ஜானகி விஸ்வநாதனும். கதை பிரபல பெண் எழுத்தாளர் சிவசங்கரியின் கைவண்ணத்தில் உருவானதாகும்.
சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பிரச்சினையை மென்மையாக அதே சமயம் முகத்தில் அடித்தாற் போல சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் குட்டி படத்தில்.
குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை எத்தனையோ படங்களில், பலவிதங்களில் கூறி விட்டார்கள். ஆனால் இதில் அப்பட்டமாய் முகத்தில் அடித்த மாதிரி சொல்கிறார்கள்.
படத்தில் முடிவு என்ற ஒன்றைக் கூறாமல், அந்த முடிவை நம்மையே யோசிக்க வைத்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது இதயம் கனத்துவிடுகிறது.
சின்னக் கிராமத்தில் பானைகள், பொம்மைகள் செய்து வரும் ஒரு குயவர் குடும்பம். 2 வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத அந்தக் குடும்பத்தின் சுட்டிப் பெண் கண்ணம்மா.
அப்பாவின் செல்ல மகள். தனது மகளைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற தீராத ஆசை அப்பாவுக்கு. ஆனால் பள்ளி ரொம்ப தூரத்தில் இருப்பதால் ஒரு சைக்கிள் வாங்கி அவளை கூட்டிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் சைக்கிள் வாங்குவது பணமின்மையால் தள்ளிப் போகிறது திட்டம்.
இந்த நேரத்தில் சந்தைக்குப் போன அப்பா ஊர் திரும்பும் வழியில் லாரிமோதி இறக்கிறார். தலைவனை இழந்து அந்தக் குடும்பம் வறுமையில் தத்தளிக்கிறது.
இந் நேரத்தில் தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளியின் வீட்டுக்கு வேலைக்கு ஆள் வேண்டும் என்பதால் கண்ணம்மாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கண்ணம்மாவின் அம்மாவிடம் கேட்கிறார்.
நிறைய யோசனைகளுக்குப் பிறகு கண்ணம்மாவை அனுப்பி வைக்கிறார் அம்மா.
பட்டணத்திற்கு வருகிறாள் கண்ணம்மா. கண்களில் ஆச்சரியமும் பயமும் தாண்டவமாட அவள் பார்க்கும், சந்திக்கும் ஒவ்வொரு விஷயமும் அவளை பரவசப்படுத்துவதற்குப் பதில் அச்சமூட்டுகின்றன.
கண்ணம்மா வேலைக்கு சேர்ந்த வீட்டின் முதலாளியும், அவரது மனைவியும் கண்ணம்மாவை தங்களது குழந்தைகளுக்கு சமமாக பார்க்கிறார்கள். ஆனால் இது முதலாளியின் தாய்க்குப் பிடிக்கவில்லை. வழக்கமான வில்லத்தனத்தைக் காட்டுகிறார்.
குழந்தையைப் பார்க்கும் வேலை என்று முதலில் சொல்லப்பட்டாலும் கூட, பல வேலைகளையும் செய்யும் நிலைக்கு ஆளாகிறாள் கண்ணம்மா. அவளது உணர்வுகள் அங்கு மறுக்கப்படுகின்றன. அடிமை நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.
ஒரு கட்டத்தில் கண்ணம்மாவின் நிலையைப் பார்த்து அந்த முதலாளியும் அவரது மனைவியும் கூட வருத்தப்பட ஆரம்பிக்கின்றனர். தங்களது வசதிக்காக, ஒரு குட்டிப் பெண்ணின் உணர்வுகளையும், உரிமைகளையும், கல்வியையும் தாங்கள் பறித்து விட்டதாக அவர்கள் உணர்ந்து வருத்தப்படுகிறார்கள்.
கண்ணம்மாவுக்கு தனது கிராமத்து சுதந்திரம் ஞாபகம் வருகிறது. தனிமையில் அழுகிறாள். பெட்டிக்கடைக்கார நாடாரிடம் தன்னை எப்படியாவது தனது கிராமத்துக்கு அனுப்பி வைக்குமாறு கதறுகிறாள். நாடாரின் கண்களில் ரத்தம் கசிகிறது.
அவளை எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைத்துவிட முடிவு செய்கிறார். ஆனால் அதற்குள் கண்ணம்மாவின் தலையெழுத்து எப்படி மாறுகிறது என்று கூறும்போது நம்மை பதற வைத்திருக்கிறார்கள்.
சமூகத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைதான் கதையின் கரு என்றாலும் கூட டாகுமெண்டரி போல அதைக் கூறாமல் இதுதான் நிஜம், பாருங்கள், பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள், தீர்வு என்ன என்பதை யோசியுங்கள் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
படத்தில் இரண்டு ஹீரோக்கள். ஒன்று கண்ணம்மாவாக வரும் பேபி ஸ்வேதா. வெகு இயல்பான நடிப்பு. கண்களில் அத்தனை உணர்ச்சிகளையும் அவள் காட்டும்போது கண்கள் கலங்காமல் இருப்பது இயலாத காரியம்.
துடிப்புடன் நடித்திருக்கிறாள் ஸ்வேதா. பக்கத்து வீட்டில் வேலைக்காரப் பெண்ணிடம் அந்த வீட்டுக்காரரின் மகன் செய்யும் பாலியல் பலாத்காரத்தைப் பார்க்கும்போது கண்களில் மிரட்சியைக் காட்டுகிறாள்.
விவேக்கிடம் அழுதுகொண்டே தனது வீட்டு முகவரியை அப்பாவித்தனமாக, எங்க கிராமத்துல மலை இருக்கும், சுற்றிலும் மரம் இருக்கும் என்று கூறும்போது விவேக் மட்டுமல்லாது நாமும்தான் கலங்கிப் போகிறோம்.
அடுத்த ஹீரோ இசைஞானி இளையராஜா. இசை சரியாக இல்லாவிட்டால் வெறும் டாகுமெண்டரியாகிப் போய் விடும் என்பதால் முழு அக்கறை எடுத்து படத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.
இந்தப் படத்தின் கதையை கேட்ட உடனேயே இசையமைக்க காசு வேண்டாம் என்று கூறிவிட்டு இலவசமாகவே இசை அமைத்துத் தந்திருக்கிறார் இசைஞானி. தங்கர் பச்சான் தன்பங்குக்கு கேமராவில் ஓவியம் வரைந்திருக்கிறார்.
கிராமத்துக் கண்ணம்மாவின் அப்பாவாக நாசர், அம்மாவாக ஈஸ்வரி ராவ். அசல் கிராமத்துக் காரர்களாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
பெண்ணை இப்படி விளையாட்டுப் பிள்ளையாக வளர்க்கிறாரே கணவர் என்று ஆதங்கப்படும்போதெல்லாம் அப்ளாஸ் வாங்குகிறார் ஈஸ்வரி ராவ். பெண்ணைப் படிக்க வைக்க வேண்டுமே என்று கவலைப்படும்போதெல்லாம் நம்மையும் கலங்க வைக்கிறார் நாசர். பண்பட்ட நடிப்பில் இருவரும் அசத்துகிறார்கள்.
பட்டணத்து முதலாளியாக ரமேஷ் அரவிந்த், அவரது கல்லூரி ஆசிரியை மனைவியாக கௌசல்யா. நிறைவான ரோல்கள். கண்ணம்மாவை கஷ்டப்படுத்துகிறோமோ என்று கவலைப்பட்டு அவர்கள் பேசும்போது நிஜத்தில் இப்படி அத்தனை பேரும் இருந்து விட்டால் குழந்தைத் தொழிலாளர்களே இல்லாமல் போய் விடுவார்களே என்ற நப்பாசை வருகிறது. அருமையான நடிப்பு.
வில்லியாக எம்.என்.ராஜம். ரமேஷ் அரவிந்தின் அம்மாவாக வரும் அவர் கண்ணம்மாவை குட்டி என்று பெயரிட்டு கிண்டல் செய்கிறார்.
எல்லோரையும் விட நம்மை அசத்துபவர் விவேக். வழக்கமான கேலி, கிண்டல் எதுவும் இல்லாமல் மளிகைக் கடை நாடாராக வந்து கலக்கியிருக்கிறார் விவேக்.
புறக்கணிக்கப்படும் அல்லது கவனிக்காமல் விடப்படும் ஒவ்வொரு சிறுமியும் எப்படி சீரழிந்து போகிறாள் என்பதை இதை விட 'நச்' என்று கூற முடியாது.
படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வருபவர்களின் கண்களில் கண்ணீர். குட்டி ஜெயித்துவிட்டாள்.
<img src='http://www.thatstamil.com/images/kutty/kutty-nasar200.jpg' border='0' alt='user posted image'>
நன்றி: thatstamil.com
எப்படியான படங்கள் சமூகத்திலுள்ள பிரச்சனைகளை வெளிக் கொணர முடியும் என்பதற்கான தென்னிந்திய தமிழ் சினிமா வரலாற்றில் விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களில் குட்டியும் ஒன்று..................
AJeevan
<img src='http://www.thatstamil.com/images/kutty/kutty200.jpg' border='0' alt='user posted image'>
திரை விமர்சனம்[/align:5c1d153f30]
[size=14]மும்தாஜ் டான்ஸ் இல்லை, அனல் பறக்கும் சண்டைகள் இல்லை, வெளிநாட்டு லொகேஷன் இல்லை, கிராபிக்ஸ் இல்லை. இத்தனையும் இல்லாமல் ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் ரமேஷ் அருணச்சாச்சலமும், ஜானகி விஸ்வநாதனும். கதை பிரபல பெண் எழுத்தாளர் சிவசங்கரியின் கைவண்ணத்தில் உருவானதாகும்.
சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பிரச்சினையை மென்மையாக அதே சமயம் முகத்தில் அடித்தாற் போல சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் குட்டி படத்தில்.
குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை எத்தனையோ படங்களில், பலவிதங்களில் கூறி விட்டார்கள். ஆனால் இதில் அப்பட்டமாய் முகத்தில் அடித்த மாதிரி சொல்கிறார்கள்.
படத்தில் முடிவு என்ற ஒன்றைக் கூறாமல், அந்த முடிவை நம்மையே யோசிக்க வைத்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது இதயம் கனத்துவிடுகிறது.
சின்னக் கிராமத்தில் பானைகள், பொம்மைகள் செய்து வரும் ஒரு குயவர் குடும்பம். 2 வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத அந்தக் குடும்பத்தின் சுட்டிப் பெண் கண்ணம்மா.
அப்பாவின் செல்ல மகள். தனது மகளைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற தீராத ஆசை அப்பாவுக்கு. ஆனால் பள்ளி ரொம்ப தூரத்தில் இருப்பதால் ஒரு சைக்கிள் வாங்கி அவளை கூட்டிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் சைக்கிள் வாங்குவது பணமின்மையால் தள்ளிப் போகிறது திட்டம்.
இந்த நேரத்தில் சந்தைக்குப் போன அப்பா ஊர் திரும்பும் வழியில் லாரிமோதி இறக்கிறார். தலைவனை இழந்து அந்தக் குடும்பம் வறுமையில் தத்தளிக்கிறது.
இந் நேரத்தில் தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளியின் வீட்டுக்கு வேலைக்கு ஆள் வேண்டும் என்பதால் கண்ணம்மாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கண்ணம்மாவின் அம்மாவிடம் கேட்கிறார்.
நிறைய யோசனைகளுக்குப் பிறகு கண்ணம்மாவை அனுப்பி வைக்கிறார் அம்மா.
பட்டணத்திற்கு வருகிறாள் கண்ணம்மா. கண்களில் ஆச்சரியமும் பயமும் தாண்டவமாட அவள் பார்க்கும், சந்திக்கும் ஒவ்வொரு விஷயமும் அவளை பரவசப்படுத்துவதற்குப் பதில் அச்சமூட்டுகின்றன.
கண்ணம்மா வேலைக்கு சேர்ந்த வீட்டின் முதலாளியும், அவரது மனைவியும் கண்ணம்மாவை தங்களது குழந்தைகளுக்கு சமமாக பார்க்கிறார்கள். ஆனால் இது முதலாளியின் தாய்க்குப் பிடிக்கவில்லை. வழக்கமான வில்லத்தனத்தைக் காட்டுகிறார்.
குழந்தையைப் பார்க்கும் வேலை என்று முதலில் சொல்லப்பட்டாலும் கூட, பல வேலைகளையும் செய்யும் நிலைக்கு ஆளாகிறாள் கண்ணம்மா. அவளது உணர்வுகள் அங்கு மறுக்கப்படுகின்றன. அடிமை நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.
ஒரு கட்டத்தில் கண்ணம்மாவின் நிலையைப் பார்த்து அந்த முதலாளியும் அவரது மனைவியும் கூட வருத்தப்பட ஆரம்பிக்கின்றனர். தங்களது வசதிக்காக, ஒரு குட்டிப் பெண்ணின் உணர்வுகளையும், உரிமைகளையும், கல்வியையும் தாங்கள் பறித்து விட்டதாக அவர்கள் உணர்ந்து வருத்தப்படுகிறார்கள்.
கண்ணம்மாவுக்கு தனது கிராமத்து சுதந்திரம் ஞாபகம் வருகிறது. தனிமையில் அழுகிறாள். பெட்டிக்கடைக்கார நாடாரிடம் தன்னை எப்படியாவது தனது கிராமத்துக்கு அனுப்பி வைக்குமாறு கதறுகிறாள். நாடாரின் கண்களில் ரத்தம் கசிகிறது.
அவளை எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைத்துவிட முடிவு செய்கிறார். ஆனால் அதற்குள் கண்ணம்மாவின் தலையெழுத்து எப்படி மாறுகிறது என்று கூறும்போது நம்மை பதற வைத்திருக்கிறார்கள்.
சமூகத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைதான் கதையின் கரு என்றாலும் கூட டாகுமெண்டரி போல அதைக் கூறாமல் இதுதான் நிஜம், பாருங்கள், பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள், தீர்வு என்ன என்பதை யோசியுங்கள் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
படத்தில் இரண்டு ஹீரோக்கள். ஒன்று கண்ணம்மாவாக வரும் பேபி ஸ்வேதா. வெகு இயல்பான நடிப்பு. கண்களில் அத்தனை உணர்ச்சிகளையும் அவள் காட்டும்போது கண்கள் கலங்காமல் இருப்பது இயலாத காரியம்.
துடிப்புடன் நடித்திருக்கிறாள் ஸ்வேதா. பக்கத்து வீட்டில் வேலைக்காரப் பெண்ணிடம் அந்த வீட்டுக்காரரின் மகன் செய்யும் பாலியல் பலாத்காரத்தைப் பார்க்கும்போது கண்களில் மிரட்சியைக் காட்டுகிறாள்.
விவேக்கிடம் அழுதுகொண்டே தனது வீட்டு முகவரியை அப்பாவித்தனமாக, எங்க கிராமத்துல மலை இருக்கும், சுற்றிலும் மரம் இருக்கும் என்று கூறும்போது விவேக் மட்டுமல்லாது நாமும்தான் கலங்கிப் போகிறோம்.
அடுத்த ஹீரோ இசைஞானி இளையராஜா. இசை சரியாக இல்லாவிட்டால் வெறும் டாகுமெண்டரியாகிப் போய் விடும் என்பதால் முழு அக்கறை எடுத்து படத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.
இந்தப் படத்தின் கதையை கேட்ட உடனேயே இசையமைக்க காசு வேண்டாம் என்று கூறிவிட்டு இலவசமாகவே இசை அமைத்துத் தந்திருக்கிறார் இசைஞானி. தங்கர் பச்சான் தன்பங்குக்கு கேமராவில் ஓவியம் வரைந்திருக்கிறார்.
கிராமத்துக் கண்ணம்மாவின் அப்பாவாக நாசர், அம்மாவாக ஈஸ்வரி ராவ். அசல் கிராமத்துக் காரர்களாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
பெண்ணை இப்படி விளையாட்டுப் பிள்ளையாக வளர்க்கிறாரே கணவர் என்று ஆதங்கப்படும்போதெல்லாம் அப்ளாஸ் வாங்குகிறார் ஈஸ்வரி ராவ். பெண்ணைப் படிக்க வைக்க வேண்டுமே என்று கவலைப்படும்போதெல்லாம் நம்மையும் கலங்க வைக்கிறார் நாசர். பண்பட்ட நடிப்பில் இருவரும் அசத்துகிறார்கள்.
பட்டணத்து முதலாளியாக ரமேஷ் அரவிந்த், அவரது கல்லூரி ஆசிரியை மனைவியாக கௌசல்யா. நிறைவான ரோல்கள். கண்ணம்மாவை கஷ்டப்படுத்துகிறோமோ என்று கவலைப்பட்டு அவர்கள் பேசும்போது நிஜத்தில் இப்படி அத்தனை பேரும் இருந்து விட்டால் குழந்தைத் தொழிலாளர்களே இல்லாமல் போய் விடுவார்களே என்ற நப்பாசை வருகிறது. அருமையான நடிப்பு.
வில்லியாக எம்.என்.ராஜம். ரமேஷ் அரவிந்தின் அம்மாவாக வரும் அவர் கண்ணம்மாவை குட்டி என்று பெயரிட்டு கிண்டல் செய்கிறார்.
எல்லோரையும் விட நம்மை அசத்துபவர் விவேக். வழக்கமான கேலி, கிண்டல் எதுவும் இல்லாமல் மளிகைக் கடை நாடாராக வந்து கலக்கியிருக்கிறார் விவேக்.
புறக்கணிக்கப்படும் அல்லது கவனிக்காமல் விடப்படும் ஒவ்வொரு சிறுமியும் எப்படி சீரழிந்து போகிறாள் என்பதை இதை விட 'நச்' என்று கூற முடியாது.
படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வருபவர்களின் கண்களில் கண்ணீர். குட்டி ஜெயித்துவிட்டாள்.
<img src='http://www.thatstamil.com/images/kutty/kutty-nasar200.jpg' border='0' alt='user posted image'>
நன்றி: thatstamil.com
எப்படியான படங்கள் சமூகத்திலுள்ள பிரச்சனைகளை வெளிக் கொணர முடியும் என்பதற்கான தென்னிந்திய தமிழ் சினிமா வரலாற்றில் விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களில் குட்டியும் ஒன்று..................
AJeevan

