04-16-2004, 09:49 AM
கருணா கண்டுபிடிக்கும் வரை
எங்கிருந்தார்கள் கார்ள்ஸ் மாக்சின் பேரப்பிள்ளைகள்?
விடுதலைப் புலிகள் ஈட்டிய வெற்றியானதுஇ மட்டக்களப்புஇ அம்பாறை மக்களுக்கு எதிராக ஈட்டிய வெற்றியல்ல. மாறாக தனது சுய விருப்புக்காகவும்இஇருப்புக்காகவும் அப்பாவி இளைஞர்இ யுவதிகளின் வாழ்வை பணயம் வைத்து பிரதேச வாதத்தை சாட்டாக்கி கொண்ட கருணாவிற்கு எதிரான வெற்றியே என்பதை கிழக்கு மாகாண மக்கள் மட்டுமல்ல தமிழீழ மக்கள் அனைவருமே அறிவர்.
யாழ் மேலாதிக்க வாதமானது ஏதோ விடுதலைப் புலிகளால் உருவாக்கப் பட்ட ஒருவிடயம் போன்றும் அதை போன மாதம் தான் கருணா கண்டுபிடித்தார் போலவும் அறிக்கைகளும் கட்டுரைகளும் எழுதத் தலைப்பட்ட தேசம் போன்ற பத்திரிகைகளும்இ கார்ள்ஸ் மாக்சின் பேரப்பிள்ளைகளும் எங்கிருந்தார்கள்,? இவர்ளுக்கு இப்படி ஒரு பிரச்சனை எமது சமூகத்தில் இருந்தது கருணா கூறிய பின்னர் தான் தெரிய வந்ததா?
யாழ் மேலாதிக்க வாதம் என்பதுஇ சீதனம்இசாதிஇ சமயஇவர்க்க வேறுபாடுகள் போன்று காலாகாலமாக இருந்து வந்த ஒரு உள் முரண்பாடுதான் 1960 களில் வன்னியில் யாழகற்றி சங்கம் தொடங்கும் அளவிற்கு இந்தப் பிரச்சனை கூர்மை அடைந்திருந்ததை யாரும் மறுக்க முடியாது. விடுதலைப் போராட்டம் தொடங்கி 25 வருடங்களைத் தாண்டும் வரை டோள் எடுத்து சொகுசாக சாப்பிட்ட வண்ணம் தொழிலாளர் வர்க்கத்திற்கு விடியலைத் தேடிய இந்த மாக்சிய வாதிகள் தங்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு கருணா வரும்வரை காத்திருந்ததன் காரணம் என்னவோ?
கருணாவின் கருத்துக்ளோடு நாம் முற்றாக முரண்படவில்லை. அவர் தேர்ந்தெடுத்த காலம் அவரின் உள்நோக்கத்தை சந்தேகப்பட வைத்தது. பிரதேச வாதம் ஒரு இரவில் முடிந்துவிடும் பிரச்சனையுமல்ல கருணா தமிழீழப் போராட்டத்தின் தாற்பரியத்தை உணராதவரும் அல்ல. 17 வருடங்கள் பொறுத்திருந்தவருக்கு கடந்த மாதம் பொறுமை இழந்து மட்டக்களப்புஇ அம்பாறை மக்களின் அவலம் ஞாபகத்திற்கு வந்த போதுதான் இங்கிருக்கும் புத்திஜீவிகளுக்கும் ஞானம் பிறந்திருக்கிறது. இதுவரை காலமும் மேலாதிக்கத்தின் நகங்கள் அந்த மக்கள் மீது பதிந்திருந்தது இவர்களுக்கு தெரியாமல் போயிருந்ததா? இவர்களின் உள்நோக்கம் மேலாதிக்கதிதிற்கு எதிரானது அல்ல மாறாக கூத்ததாடியின் நிலையே. ஒருவகையில் இவர்கள் எல்லோருமே மேலாதிக்கத்தின் மறைமுக பங்காளிகள் கூட.
புரட்சிகர அமைப்புக்குள் சகபோராளிகளை கொன்று குவித்த போது துடிக்காத இரத்தமும் ஜனநாயகத் தேவையும் ரி.பி.சி போன்ற வானொலி நடத்துனர்களுக்கு திடீரென எங்கிருந்து வந்தது ஜனநாயகத்திற்கான அக்கறை?. கருணாவின் பின்வாங்கலானது இழப்புக்களை தவிர்பதாக இருக்கலாம் அல்லது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதாக இருக்கலாம். எது எப்படியோ பாரிய இழப்புக்கள் இன்றி தமிழர் தாயகம் மீண்டும் இணைந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கீழ் ஓரணியாக இயங்க அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் முன்வந்திருக்கும் வேளையில் தமிழீழப் போராட்டத்தைப் பலப்படுத்துவோம். உரிமையை வென்றெடுப்போம்.
ஈழபுூமி வெளியீட்டகம் (13ஃ04ஃ2004)-2
எங்கிருந்தார்கள் கார்ள்ஸ் மாக்சின் பேரப்பிள்ளைகள்?
விடுதலைப் புலிகள் ஈட்டிய வெற்றியானதுஇ மட்டக்களப்புஇ அம்பாறை மக்களுக்கு எதிராக ஈட்டிய வெற்றியல்ல. மாறாக தனது சுய விருப்புக்காகவும்இஇருப்புக்காகவும் அப்பாவி இளைஞர்இ யுவதிகளின் வாழ்வை பணயம் வைத்து பிரதேச வாதத்தை சாட்டாக்கி கொண்ட கருணாவிற்கு எதிரான வெற்றியே என்பதை கிழக்கு மாகாண மக்கள் மட்டுமல்ல தமிழீழ மக்கள் அனைவருமே அறிவர்.
யாழ் மேலாதிக்க வாதமானது ஏதோ விடுதலைப் புலிகளால் உருவாக்கப் பட்ட ஒருவிடயம் போன்றும் அதை போன மாதம் தான் கருணா கண்டுபிடித்தார் போலவும் அறிக்கைகளும் கட்டுரைகளும் எழுதத் தலைப்பட்ட தேசம் போன்ற பத்திரிகைகளும்இ கார்ள்ஸ் மாக்சின் பேரப்பிள்ளைகளும் எங்கிருந்தார்கள்,? இவர்ளுக்கு இப்படி ஒரு பிரச்சனை எமது சமூகத்தில் இருந்தது கருணா கூறிய பின்னர் தான் தெரிய வந்ததா?
யாழ் மேலாதிக்க வாதம் என்பதுஇ சீதனம்இசாதிஇ சமயஇவர்க்க வேறுபாடுகள் போன்று காலாகாலமாக இருந்து வந்த ஒரு உள் முரண்பாடுதான் 1960 களில் வன்னியில் யாழகற்றி சங்கம் தொடங்கும் அளவிற்கு இந்தப் பிரச்சனை கூர்மை அடைந்திருந்ததை யாரும் மறுக்க முடியாது. விடுதலைப் போராட்டம் தொடங்கி 25 வருடங்களைத் தாண்டும் வரை டோள் எடுத்து சொகுசாக சாப்பிட்ட வண்ணம் தொழிலாளர் வர்க்கத்திற்கு விடியலைத் தேடிய இந்த மாக்சிய வாதிகள் தங்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு கருணா வரும்வரை காத்திருந்ததன் காரணம் என்னவோ?
கருணாவின் கருத்துக்ளோடு நாம் முற்றாக முரண்படவில்லை. அவர் தேர்ந்தெடுத்த காலம் அவரின் உள்நோக்கத்தை சந்தேகப்பட வைத்தது. பிரதேச வாதம் ஒரு இரவில் முடிந்துவிடும் பிரச்சனையுமல்ல கருணா தமிழீழப் போராட்டத்தின் தாற்பரியத்தை உணராதவரும் அல்ல. 17 வருடங்கள் பொறுத்திருந்தவருக்கு கடந்த மாதம் பொறுமை இழந்து மட்டக்களப்புஇ அம்பாறை மக்களின் அவலம் ஞாபகத்திற்கு வந்த போதுதான் இங்கிருக்கும் புத்திஜீவிகளுக்கும் ஞானம் பிறந்திருக்கிறது. இதுவரை காலமும் மேலாதிக்கத்தின் நகங்கள் அந்த மக்கள் மீது பதிந்திருந்தது இவர்களுக்கு தெரியாமல் போயிருந்ததா? இவர்களின் உள்நோக்கம் மேலாதிக்கதிதிற்கு எதிரானது அல்ல மாறாக கூத்ததாடியின் நிலையே. ஒருவகையில் இவர்கள் எல்லோருமே மேலாதிக்கத்தின் மறைமுக பங்காளிகள் கூட.
புரட்சிகர அமைப்புக்குள் சகபோராளிகளை கொன்று குவித்த போது துடிக்காத இரத்தமும் ஜனநாயகத் தேவையும் ரி.பி.சி போன்ற வானொலி நடத்துனர்களுக்கு திடீரென எங்கிருந்து வந்தது ஜனநாயகத்திற்கான அக்கறை?. கருணாவின் பின்வாங்கலானது இழப்புக்களை தவிர்பதாக இருக்கலாம் அல்லது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதாக இருக்கலாம். எது எப்படியோ பாரிய இழப்புக்கள் இன்றி தமிழர் தாயகம் மீண்டும் இணைந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கீழ் ஓரணியாக இயங்க அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் முன்வந்திருக்கும் வேளையில் தமிழீழப் போராட்டத்தைப் பலப்படுத்துவோம். உரிமையை வென்றெடுப்போம்.
ஈழபுூமி வெளியீட்டகம் (13ஃ04ஃ2004)-2

