04-02-2004, 01:52 PM
Eelavan Wrote:இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் அவர்களுக்கு தேர்தல் முடிவு இப்போதே தெரிந்துவிட்டது இல்லையில்லை அது வேட்புமனு தாக்கல் செய்த அன்றே அவர்களுக்குத் தெரியும்
தோல்வி நிச்சயமானவுடன் இதுவல்ல இன்னும் சொல்வார்கள் சொந்த மக்கள் மீதே நம்பிக்கையின்றி சிங்களவர் முஸ்லிம்கள் தான் தேர்தலைக் கண்காணிக்க வரவேண்டும் என்று மூக்கால் அழுதார்கள் இதுவே சிங்களப்பகுதியாக இருந்தால் ஒரு சிங்களவனைக் கண்காணிப்பது தமிழனா என்று இன்னேரம் கலவரமே ஆரம்பித்திருக்கும்
அப்படியிருக்க இவர்கள் வருந்தி அழைத்த அதே கண்காணிப்பாளர்களே அசம்பாவிதம் எதுவுமில்லை என்று கருத்துக் கூறியபின்னும் தேர்தல் ஒழுங்காக நடைபெறவில்லை என்று கூப்பாடு போடுகிறார்கள் அப்பிடியென்றால் என்ன சொல்கிறார்கள் தமது கட்சியில் 9 பேரும் பாராளுமன்றம் போனால்தான் அது சட்டப்படியான தேர்தல் என்றா? அப்பிடியானால் 95 ம் ஆண்டில் நடந்த வெட்கக்கேடு தான் உண்மையான தேர்தலா?
95ம் ஆண்டு தேர்தலை நாம் ஒப்பிடவேண்டியதில்லை. அது ஒரு நாலுபேர் வாக்களித்து நாற்பதுபேர் பாராளுமன்றம் போன கதை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

