03-28-2004, 07:05 AM
அண்மையில் லண்டனிலிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு.
எடுத்தவர் எனக்குத் தெரிந்த நண்பர்தான்.
<span style='color:brown'>\"அண்ண என்ட நண்பனுக்கு ஒரு படம் செய்ய விருப்பம்.\"
\"நல்ல விசயம் செய்யுங்கள்\" என்றேன்.
\"நானும் அதில நடிக்க வேணுமெண்டு சொல்லுறார். உங்களைப் பத்தி அவரிடம் சொன்னன்.\"
\"சரி\"
\"ஓரு ரெண்டு மூண்டு கட்டுக்கு கதை எழுதி வச்சிருக்கிறார். சுப்பர் கதைகளாம்.\"
\"இப்ப எடுக்கப் போற படத்திட கதை என்னவாம்?\"
\"அதை அவர் சொல்லயில்ல.\"
சரி நான் உங்களுக்கு என்ன செய்யவேணும்?
\"அதுதான்,......... கதை வசனம் டைரக்சன் மெயின் ரோலும் அவர் பண்ண இருக்கிறாராம். கமராவுக்கு ஒருத்தர் வேணுமென்றார்.\"
\"அவர் ஏதாவது படம் பண்ணியிருக்கிறாரே?"
\"இல்லயண்ண.\"
\"அப்ப எப்படியப்பா?\"
\"அவரட கதைய ஆராலேயும் செய்யேலாதாம். அது அவருக்கு மட்டும்தான் முடியுமாம்?...........எனக்காக ஏலாதெண்டு மட்டும் சொல்லாதேங்கோ...........\"
\"சரி பிரச்சனையில்ல. அவரே எல்லாம் செய்யட்டும். கதையை ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ தம்பி. முடிஞ்சா என்னோட பேசச் சொல்லுங்கோ.\"
என்று சொல்லி விட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்துக் கொண்டோம்.
அடுத்த நாள் அதே நண்பர் தொடர்பு கொண்டார்.
\"கதையை கேட்டீங்களா தம்பி?\"
\"யாருக்கும் அவர் கதை சொல்ல மாட்டாராம்.
நீங்கள் கமரா செய்தாலும் காட்சி எடுக்கும் போதுதான் சொல்வாராம்.\" என்றார்.
\"உங்கட ரோலையாவது கேட்டீங்களா தம்பி?\" என்றேன்.
மறு முனையில் அமைதி தாண்டவமாடியது...........</span>
[align=center:6e0057058f]
[/align:6e0057058f]AJeevan

