03-27-2004, 03:39 AM
சுடும்வரையில் நெருப்பு...
அன்போ, கோவமோ
உள்ளத்து உணர்வுகளை
ஒளிகாமல் காட்டிவிட்டால்...
சிறுபிள்ளைப் புத்தி என்பீர்
'சிடுமூஞ்சி' இவன் என்பீர்...
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை,
பக்குவமாய்ச் சொன்னாலும்...
உதவாது வாதம் என்பீர்..
'ஊதாரி' இவன் என்பீர்...!
தென்றல் அது மாடிக்குச் சொந்தம்...
தீ மட்டும் தெரு கோடிக்குச் சொந்தமா? - இனியாவது
திருந்தச் சொன்னால்...
திரும்பாதே பக்கம் என்பீர்,
'தீவிரவாதி' இவன் என்பீர்!
பருத்தியும் பழுக்கும் - இலவம்
பஞ்சியும் பழுக்கும்!
பசிபோக்குமா இவையாவும் !
பணம் பார்த்துப் பழகாதே - நல்ல
குணம் பார்த்துப் பழகு என்றால்....
மெத்த படித்த திமிரா என்பீர்...
'மேதாவி' இவன் என்பீர்!
பிள்ளையார் பால் குடிக்கிறாரா? - அட
பித்தனே - இங்கே
பிறந்த குழந்தைப் பாலுக்கழுகிறதே...- மனம்
பரிதவித்துச் சொல்லிவிட்டால்...
பார்த்துக் கொள்வார் கடவுள் என்பீர்...
'பைத்தியமோ' இவன் என்பீர்!
தன்மானம் இழக்கும் செயல்
தாங்கிக்கொள்ள முடியாது!
தயங்காமல் கேட்டுவிட்டால்...
'தலைகீழ்' நடப்பான் என்பீர்,
'தலைகனம்' இவனுக்கென்பீர்!
கை நீட்டி தாலி அறுப்பான்!
கண் முன்னே கழுத்தும் அறுப்பான்!
கோணலாக புத்தி கொண்டு - பல
கொடுமைகளைச் செய்திருப்பான் !
கொதித்தெழுந்துக் கேட்டுவிட்டால்...
கொஞ்சம் கூட பொறுமை இல்லை...
'கோவக்காரன்' இவன் என்பீர் !
அள்ளி அள்ளி கொட்டிடுவீர்
அத்தனையும் உண்டியலில்!
அநாதை இல்லங்கள் அநாதையாய் இங்குண்டு!
அடுத்தவேளை உணவிற்கு ஆளாய் பறந்திருக்கும்
ஆட்கள் இங்கே கோடி உண்டு!
மனம்கலங்கிச் சொல்லி விட்டால்...
மாரியாத்தா குத்தம் என்பீர்,
'மடையனே ' இவன் என்பீர் !
உதவாததை எடுத்துச் சொல்லி - மக்களுக்கு
உதவும் வகைச் சொல்லிவிட்டால்...
ஒட்டு மொத்தப் பெயராக
'நாத்திகன்' இவன் எப்பீர்...
நட்பே ஆகாதென்பீர்...!
நாட்டுக்கு நல்லது நினைப்போன்
நாத்திகன் என்றிட்டால் ...
போடா போ...!
இருந்து விட்டுப் போகிறேன்
நான்..
'நாத்திகனாகவே'
நன்றி - மணவழகன்
அன்போ, கோவமோ
உள்ளத்து உணர்வுகளை
ஒளிகாமல் காட்டிவிட்டால்...
சிறுபிள்ளைப் புத்தி என்பீர்
'சிடுமூஞ்சி' இவன் என்பீர்...
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை,
பக்குவமாய்ச் சொன்னாலும்...
உதவாது வாதம் என்பீர்..
'ஊதாரி' இவன் என்பீர்...!
தென்றல் அது மாடிக்குச் சொந்தம்...
தீ மட்டும் தெரு கோடிக்குச் சொந்தமா? - இனியாவது
திருந்தச் சொன்னால்...
திரும்பாதே பக்கம் என்பீர்,
'தீவிரவாதி' இவன் என்பீர்!
பருத்தியும் பழுக்கும் - இலவம்
பஞ்சியும் பழுக்கும்!
பசிபோக்குமா இவையாவும் !
பணம் பார்த்துப் பழகாதே - நல்ல
குணம் பார்த்துப் பழகு என்றால்....
மெத்த படித்த திமிரா என்பீர்...
'மேதாவி' இவன் என்பீர்!
பிள்ளையார் பால் குடிக்கிறாரா? - அட
பித்தனே - இங்கே
பிறந்த குழந்தைப் பாலுக்கழுகிறதே...- மனம்
பரிதவித்துச் சொல்லிவிட்டால்...
பார்த்துக் கொள்வார் கடவுள் என்பீர்...
'பைத்தியமோ' இவன் என்பீர்!
தன்மானம் இழக்கும் செயல்
தாங்கிக்கொள்ள முடியாது!
தயங்காமல் கேட்டுவிட்டால்...
'தலைகீழ்' நடப்பான் என்பீர்,
'தலைகனம்' இவனுக்கென்பீர்!
கை நீட்டி தாலி அறுப்பான்!
கண் முன்னே கழுத்தும் அறுப்பான்!
கோணலாக புத்தி கொண்டு - பல
கொடுமைகளைச் செய்திருப்பான் !
கொதித்தெழுந்துக் கேட்டுவிட்டால்...
கொஞ்சம் கூட பொறுமை இல்லை...
'கோவக்காரன்' இவன் என்பீர் !
அள்ளி அள்ளி கொட்டிடுவீர்
அத்தனையும் உண்டியலில்!
அநாதை இல்லங்கள் அநாதையாய் இங்குண்டு!
அடுத்தவேளை உணவிற்கு ஆளாய் பறந்திருக்கும்
ஆட்கள் இங்கே கோடி உண்டு!
மனம்கலங்கிச் சொல்லி விட்டால்...
மாரியாத்தா குத்தம் என்பீர்,
'மடையனே ' இவன் என்பீர் !
உதவாததை எடுத்துச் சொல்லி - மக்களுக்கு
உதவும் வகைச் சொல்லிவிட்டால்...
ஒட்டு மொத்தப் பெயராக
'நாத்திகன்' இவன் எப்பீர்...
நட்பே ஆகாதென்பீர்...!
நாட்டுக்கு நல்லது நினைப்போன்
நாத்திகன் என்றிட்டால் ...
போடா போ...!
இருந்து விட்டுப் போகிறேன்
நான்..
'நாத்திகனாகவே'
நன்றி - மணவழகன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

