03-26-2004, 11:50 PM
<img src='http://www.vikatan.com/jv/2004/mar/28032004/p9.jpg' border='0' alt='user posted image'>
<b>இலங்கை மாணவி மயூரணி கொலை வழக்கை, சி.பி.ஐ. விசாரணைக்கு </b>மாற்றக்கோரி தாக்கல் ஆகியிருக்கும் மனு மீதான தீர்ப்பு மார்ச் 24&ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவிருக்கிறது.
இந்த வழக்கில் போலீஸ் செய்திருக்கும் குளறுபடிகள் உள்பட அனைத்து அம்சங்களும் தங்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதத்தில் இருப்பதால் வழக்கு நிச்சயமாக சி.பி.ஐ. கைக்கு மாறும் என்று உறுதிபடச் சொல்லிக் கொண் டிருக்கிறது மயூரணி தரப்பு.
ஆரம்பத்தில் இந்த வழக்கில் சோலைமலைத் தேவரும் அவரைச் சார்ந்த சிலரும் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டிருக்க.. சோலைமலைத்தேவரின் மகள் கனகாம்பாள் போட்ட ஒரு மனுவின் அடிப்படையில் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். அதில் சோலைமலைத் தேவர் உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டு, பால பிரசன்னா மட்டும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் மயூரணியின் அப்பா தியாகராஜா, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுபோட்டார். இதற்குப் பதிலளிக்க பலமுறை அவகாசம் கேட்டு, நீண்ட இழுத்தடிப்பு செய்த பிறகு விசாரணையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தியிருக்கிறோம் என்று பதில் தந்தது போலீஸ் தரப்பு.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த தியாகராஜாவின் வக்கீல் அனந்தபத்மநாபன், மதுரை போலீஸ் கமிஷனரின் நேரடி பார்வையில் மறு விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் சொல்லியிருந்தது. ஆனால், அதன்படி விசாரணை நடத்தப்படவில்லை என்று சொல்லி, அதற்கான ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறார்.
இதற்கிடையில் பிப்ரவரி மாத மத்தியில் சென்னை யில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக பேசிவிட்டுச் சென்ற தியாகராஜா, சி.பி.ஐ\யின் தென் பிராந்திய துணை இயக்குநர் சவானிக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தியாக ராஜாவை தொலைபேசி யில் தொடர்பு கொண்டு பேசிய சவானி, இந்த வழக்கின் போக்கை நாங்கள் ஏற்கெனவே கண்காணிக்கத் தொடங்கி விட்டோம். கோர்ட் உத்தரவிட்டால் விசாரணையில் இறங்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறாராம்.
வழக்கு சி.பி.ஐ. வசம் போவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படத் தொடங்கி இருப்பதால் வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அத்தனை பேரும் அரண்டு போய்தான் இருக்கிறார்கள்.
கடந்த வெள்ளியன்று சென்னைக்கு வந்திருந்த தியாகராஜாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, இந்த புண்ணிய பூமியில் படுகேவலங்கள் ஒண்டு மாதிரி ஒண்டு நடந்துகிட்டிருக்கு. வயித்த கட்டி வாயக்கட்டி ஒழுக்கமா படிச்சுகிட்டிருந்தவ என் மகள்.
<img src='http://www.vikatan.com/jv/2004/mar/28032004/p9a.jpg' border='0' alt='user posted image'>
பாலபிரசன்னா ஒரு ஓநாய்னு தெரிஞ்சிருந்தா என்னோட ஆட்டுக்குட்டிய நான் அங்க விட்டிருக்க மாட்டன். இந்த சம்பவத்துக்குப் பிற்பாடுதான் பாலபிரசன்னா எப்படிப்பட்டவண்டு எங்களுக்கு தெரியவந்தது. அவன் மேல இருக்குற வழக்கு சம்பந்தமா கோர்ட் டாக்குமெண்ட் ஒண்றையே போலீஸ§க்கு ஆதாரமா எடுத்துக் கொடுத்திருக்கேன்.
எங்கட புள்ளைய பலிகொண்டவங்க இருக்குற இந்த பூமியை மிதிக்கவே கூடாதுண்டு இருந்தன். இப்ப அலுவல் காரணமா இங்க வரவேண்டியதாப்போச்சு. தெய்வநீதி ஒண்டு இந்த உலகத்தில் இருக்குமென்டால் அந்த நீதி சீராக வேலை செய்கிறதென்டால் இந்த வழக்குல எங்களுக்கு முறையான தீர்ப்பு கிடைக்க வேணும் என்று நா தழுதழுக்க பேசினார்.
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
JuniorVigadan
<b>இலங்கை மாணவி மயூரணி கொலை வழக்கை, சி.பி.ஐ. விசாரணைக்கு </b>மாற்றக்கோரி தாக்கல் ஆகியிருக்கும் மனு மீதான தீர்ப்பு மார்ச் 24&ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவிருக்கிறது.
இந்த வழக்கில் போலீஸ் செய்திருக்கும் குளறுபடிகள் உள்பட அனைத்து அம்சங்களும் தங்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதத்தில் இருப்பதால் வழக்கு நிச்சயமாக சி.பி.ஐ. கைக்கு மாறும் என்று உறுதிபடச் சொல்லிக் கொண் டிருக்கிறது மயூரணி தரப்பு.
ஆரம்பத்தில் இந்த வழக்கில் சோலைமலைத் தேவரும் அவரைச் சார்ந்த சிலரும் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டிருக்க.. சோலைமலைத்தேவரின் மகள் கனகாம்பாள் போட்ட ஒரு மனுவின் அடிப்படையில் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். அதில் சோலைமலைத் தேவர் உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டு, பால பிரசன்னா மட்டும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் மயூரணியின் அப்பா தியாகராஜா, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுபோட்டார். இதற்குப் பதிலளிக்க பலமுறை அவகாசம் கேட்டு, நீண்ட இழுத்தடிப்பு செய்த பிறகு விசாரணையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தியிருக்கிறோம் என்று பதில் தந்தது போலீஸ் தரப்பு.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த தியாகராஜாவின் வக்கீல் அனந்தபத்மநாபன், மதுரை போலீஸ் கமிஷனரின் நேரடி பார்வையில் மறு விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் சொல்லியிருந்தது. ஆனால், அதன்படி விசாரணை நடத்தப்படவில்லை என்று சொல்லி, அதற்கான ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறார்.
இதற்கிடையில் பிப்ரவரி மாத மத்தியில் சென்னை யில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக பேசிவிட்டுச் சென்ற தியாகராஜா, சி.பி.ஐ\யின் தென் பிராந்திய துணை இயக்குநர் சவானிக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தியாக ராஜாவை தொலைபேசி யில் தொடர்பு கொண்டு பேசிய சவானி, இந்த வழக்கின் போக்கை நாங்கள் ஏற்கெனவே கண்காணிக்கத் தொடங்கி விட்டோம். கோர்ட் உத்தரவிட்டால் விசாரணையில் இறங்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறாராம்.
வழக்கு சி.பி.ஐ. வசம் போவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படத் தொடங்கி இருப்பதால் வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அத்தனை பேரும் அரண்டு போய்தான் இருக்கிறார்கள்.
கடந்த வெள்ளியன்று சென்னைக்கு வந்திருந்த தியாகராஜாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, இந்த புண்ணிய பூமியில் படுகேவலங்கள் ஒண்டு மாதிரி ஒண்டு நடந்துகிட்டிருக்கு. வயித்த கட்டி வாயக்கட்டி ஒழுக்கமா படிச்சுகிட்டிருந்தவ என் மகள்.
<img src='http://www.vikatan.com/jv/2004/mar/28032004/p9a.jpg' border='0' alt='user posted image'>
பாலபிரசன்னா ஒரு ஓநாய்னு தெரிஞ்சிருந்தா என்னோட ஆட்டுக்குட்டிய நான் அங்க விட்டிருக்க மாட்டன். இந்த சம்பவத்துக்குப் பிற்பாடுதான் பாலபிரசன்னா எப்படிப்பட்டவண்டு எங்களுக்கு தெரியவந்தது. அவன் மேல இருக்குற வழக்கு சம்பந்தமா கோர்ட் டாக்குமெண்ட் ஒண்றையே போலீஸ§க்கு ஆதாரமா எடுத்துக் கொடுத்திருக்கேன்.
எங்கட புள்ளைய பலிகொண்டவங்க இருக்குற இந்த பூமியை மிதிக்கவே கூடாதுண்டு இருந்தன். இப்ப அலுவல் காரணமா இங்க வரவேண்டியதாப்போச்சு. தெய்வநீதி ஒண்டு இந்த உலகத்தில் இருக்குமென்டால் அந்த நீதி சீராக வேலை செய்கிறதென்டால் இந்த வழக்குல எங்களுக்கு முறையான தீர்ப்பு கிடைக்க வேணும் என்று நா தழுதழுக்க பேசினார்.
குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
JuniorVigadan

