03-26-2004, 09:32 AM
sOliyAn Wrote:ஏற்கெனவே ஒரு தொடர் ஒரு அத்தியாயத்தோட நிற்குதென நினைக்கிறேன்.. இதுவாவது முழுமையாக வருமா? வாழ்த்துக்கள்! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=14]நானே எழுதி, நானே பார்க்கும்படியான, தொடர் ஒன்றைத் தொடர்வதில் யாருக்கும் லாபமில்லை சோழியன்? நான் அந்த தொடருக்காக, முறையான தரவுகளைத் தேடி படிப்போருக்கு விளங்கும்படி எழுத வெகு நேரத்தைச் செலவிட வேண்டும்.அதை யாரும் விளங்கியதென்றோ, விளங்கவில்லை என்றோ கருத்துக்கள் வரவில்லை.
ஒன்று, இவை படிப்போருக்கு தெரிந்த விடயமாக இருக்கலாம். அல்லது தேவையற்ற விடயமாக இருக்கலாம். வாசகர்கள் விரும்பாத ஒரு விடயத்தை எழுதுவதில் யாருக்கு லாபம்?
உதாரணத்துக்கு, விகடனில் வந்த <b>மாத்தி யோசி </b>என்ற ஒரு கட்டுரையின், ஒரு சில பகுதிகளை தந்தால், என் நிலை புரியுமென நம்புகிறேன். இதோ:-
[size=14]எல்.கே.ஜி. சிறுவன் ஒருவன் நம்மிடம் மழை எப்படிப் பெய்கிறது? என்று கேட்டால், ஆகாயத்தில் தேங்கி இருக்கும் தண்ணீர் பொத்துக்கொண்டு மழையாகப் பெய்கிறது என்றோ, பெரிய யானை ஒன்று மேலிருந்து தண்ணீரைக் கொட்டுகிறது என்றோ சொன்னால், மறுகேள்வி கேட்காமல் நமது பதிலை அப்படியே ஏற்பான்.
இதையே பத்தாம் வகுப்பு மாணவனிடம்சொன்னால் சிரிப்பான்! காரணம், அவனுக்கு இன்னும் சரியான விளக்கம்தேவையாய் இருக்கிறது! கடல்நீர், ஆவியாகி, மேலே சென்று மழையாகப் பொழிகிறது என்றால் ஒப்புக்கொள்வான்.
ஆனால், ஒரு பட்டதாரி மாணவனுக்கு இந்த விளக்கம் போதாது. அதுவே, ஆராய்ச்சி மாணவனாக இருந்தால்பட்டதாரி மாணவனுக்குச் சொன்னவிளக்கமும் போதுமானதாக இராது!
அறிவின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்ப, விளக்கங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. ஆயினும், நிதர்சனமான மழைமட்டும் மாறவில்லை!
மாறுதலுக்குட்பட்ட, மேலும் மேலும் வளருகிற தன்மை கொண்ட அறிவுக்கு எப்படி நிலையான விளக்கம் தரமுடியும்?! (நன்றி:கவிஞர் பெருமாள்ராசு)
[size=14]நான் யாருக்கு? எந்த நிலையில் உள்ளவருக்கு? எழுதுகிறேன் என்று கூட தெரியாத போது, <b>கட்டுரையை நிறுத்தியதில் தவறுண்டா?</b>
AJeevan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->