03-23-2004, 12:50 AM
sOliyAn Wrote:வீட்டிலையும் கிழக்குக் கோடீல பிரச்சினையாமே?! மிஞ்சுமா?!
வீடுக்கு நிறைய சீட் கிடைத்தாலும் அதை வைத்து இந்த நிலைமையில ஒண்ணும் பண்ணமுடியாது. நிறைய வாக்கு கிடைத்தால் அவர்கள் சொன்ன ஏகப்பிரதிநிதிகள் கோரிக்கையை மக்கள் ஏத்துட்டாங்க என்று சொல்ல உதவலாம். ஆனால் இப்ப ஏகப் பிரதிநிதிகளே இரண்டா இருக்கு.
வீரகேசரியில எழுதி இருந்த மாதிரி தமிழ் கூட்டமைப்புதான் ஆட்சியை தீர்மானிக்கிற மாதிரி மத்த இரண்டு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காட்டி கூட்டமைப்புக்கு கஷ்டம் தான். பழைய நிலைமை என்றால் அது நல்லது பேரம் பேசும்தன்மையும் ஆட்சியை தீர்மானிக்கிற உரிமையையும் குடுத்திருக்கும். ஆனால் இப்ப இருக்கிற நிலைமையில கூட்டமைப்பு ஆட்சியை தீர்மானிக்கிற நிலைமை வந்தா அது வடக்கு கிழக்கு என்று உடையலாம். உடையாம இருக்கிறது ஏதாவது ஒரு பெரும்பான்மை கட்சிக்கு அரசமைக்கிற பலம் கிடைக்கிறது தான் வழி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

