03-19-2004, 08:44 AM
ஈழவர் திரை விருந்து
<b><span style='font-size:22pt;line-height:100%'>அஜீவனின் அழியாத கவிதை</b></span>
குறும்பட விமர்சனம்
<img src='http://www.yarl.com/forum/files/th1.jpg' border='0' alt='user posted image'>
25 நிமிடங்கள் கொண்ட அஜீவனின் அழியாத கவிதை படத்தின் முக்கிய பாத்திரமான புலம் பெயர்ந்த தந்தையாக ஏ.ரகுநாதன் நடித்தார். தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்த ஒரு தந்தை எதிர்நோக்கும் பிரச்சனைதான் இந்த அழியாத கவிதை. கதை நகர்த்தப்பட்ட விதத்தில் யதார்த்தம் தெரியவில்லை. இலண்டன் வந்த நாளிலே அவர் தனியாக சட்டத்தரணியிடம் செல்கிறார். கடற்கரைக்குச் செல்கிறார். வீட்டக் கதவு தட்டும் போது அவரே திறந்து பதிலளிக்கிறார். இன்னொரு காட்சியில் கற்பனையில் பாடல் ஒலிப்பதாக தோன்றியது. ஆயினும் ஒரு வெள்ளைக்காரர் வந்து கதவைத் தட்டிக் கூச்சல் போடுகிறார். ஒலித்த பாடல் கதவைத் திறப்பதற்கு முன்னரே திடீரென நின்றது. காட்சிகள் தொடர்புபடுத்தப்படவில்லை. அழியாத கவிதை தொழில் நுட்பம் சிறப்பாகவே அமைந்தது. ஆனால் நிழல் யுத்தம் ஏற்படுத்திய தாக்கத்தை அஜீவன் அழியாத கவிதையில் கோட்டை விட்டு விட்டார்.
(விமர்சனத்தை அனுப்பிய சுதாகருக்கு நன்றி)
<b><span style='font-size:22pt;line-height:100%'>அஜீவனின் அழியாத கவிதை</b></span>
குறும்பட விமர்சனம்
<img src='http://www.yarl.com/forum/files/th1.jpg' border='0' alt='user posted image'>
25 நிமிடங்கள் கொண்ட அஜீவனின் அழியாத கவிதை படத்தின் முக்கிய பாத்திரமான புலம் பெயர்ந்த தந்தையாக ஏ.ரகுநாதன் நடித்தார். தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்த ஒரு தந்தை எதிர்நோக்கும் பிரச்சனைதான் இந்த அழியாத கவிதை. கதை நகர்த்தப்பட்ட விதத்தில் யதார்த்தம் தெரியவில்லை. இலண்டன் வந்த நாளிலே அவர் தனியாக சட்டத்தரணியிடம் செல்கிறார். கடற்கரைக்குச் செல்கிறார். வீட்டக் கதவு தட்டும் போது அவரே திறந்து பதிலளிக்கிறார். இன்னொரு காட்சியில் கற்பனையில் பாடல் ஒலிப்பதாக தோன்றியது. ஆயினும் ஒரு வெள்ளைக்காரர் வந்து கதவைத் தட்டிக் கூச்சல் போடுகிறார். ஒலித்த பாடல் கதவைத் திறப்பதற்கு முன்னரே திடீரென நின்றது. காட்சிகள் தொடர்புபடுத்தப்படவில்லை. அழியாத கவிதை தொழில் நுட்பம் சிறப்பாகவே அமைந்தது. ஆனால் நிழல் யுத்தம் ஏற்படுத்திய தாக்கத்தை அஜீவன் அழியாத கவிதையில் கோட்டை விட்டு விட்டார்.
(விமர்சனத்தை அனுப்பிய சுதாகருக்கு நன்றி)

