03-16-2004, 08:23 PM
sOliyAn Wrote:புலம்பெயர் தமிழர்கள் வெறும் வசதிகளுக்காக வந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது... ஏதோ ஒரு விதத்தில் தமது வாழ்வைத் தீர்மானிக்க முன்னரே தமது குடும்பத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் இளம்பிராயத்தியே நகர நிர்ப்பந்தமானவர்கள் என்பதுதான் அடிப்படையான உண்மை.
அதன் பிறகு, ஒவ்வொருவர் ஒவ்வொரு போக்கில் தமது அறிவுக்கெட்டியவரையில் வாழ்க்கையை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முக்கிய வழிகாட்டிகளே அவர்கள்தான். அதிலே தவறுகளும் ஏற்படலாம். ஆனால், தாயக உறவுகளை நினைத்து தமது அல்லாடும் நிலையிலும் பங்களிக்கிறார்களே! அவர்களைக் கொச்சைப்படுத்தவோ.. குறைத்து மதிப்பிடவோ எவருக்கும் அருகதை இல்லை என்பதை நான் ஓங்கிச் சொல்ல விரும்புகிறேன்.
அவர்களில் ஒரு பகுதி இளம்பிராயத்திலேயே நகர நிர்பந்தமானவர்கள் என்பது உண்மைதான் அது எதற்காக நீங்கள் சொன்ன மாதிரியே குடும்பத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கத்துக்காக. இது பொருளாதார தேவைக்காக தானே? நான் கொச்சைப்படுத்த முயலவில்லை. வட கிழக்கில் அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தோட இதை ஒப்பிடவே முடியாது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

