03-16-2004, 03:49 AM
BBC Wrote:sOliyAn Wrote:ஆம்.. அதேநேரத்தில் புகலிடத்தில் தமிழர்கள் சந்தோசமாக உள்ளார்கள் என்கிறீர்களா?!
நான் அப்படி சொல்லவில்லை. ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களை விட எவ்வள்வோ மேல் தானே? அங்கே உயிருக்கு உத்தரவாதம் இல்லை, உணவு இல்லை, கல்வி இல்லை, நாளை என்ன நடக்குமோ என்று தெரியாது, வெளி உலக தொடர்பு இல்லை. இப்படி எத்தனை இல்லைகள்??? புகலிட தமிழர்களுக்கு இந்த அடிப்படை பிரைச்சனைகள் இல்லை தானே? எல்லாருமே உயிர் வாழ முடியாத சூழ்நிலையில் வந்தவர்கள் இல்லையே? பெரும்பாலானோர் பொருளாதார மேம்பாட்டுக்காக வந்தவர்கள் தானே?
sOliyAn Wrote:அப்படி கூறமுடியாது... இங்கே முகவரி இல்லை?! சுய அடையாளம் இல்லை?! குறிப்பிட்ட வயதுக்கு மேல் என்னவாகப்போகிறோம் என்பதற்கு விடை இல்லை?! ஆகக் குறைந்தது மனிதன்தானே என்ற பார்வை இல்லை.. அதைத் தடுக்கும் நிறக் கூறுபோடல்கள்!! அது அரிக்கும் சித்திரவதைகள்.. இப்படிப் பற்பலவற்றைக் கூறிக்கொண்டே போகலாம்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
BBC Wrote:சொந்த நாட்டில் உள்ள உரிமையை நீங்கள் புகலிடத்தில் எதிர்பார்க்க முடியாது, எந்த் நாட்டில் பாகுபாடு இல்லை என்று சொல்கின்றீர்கள்? அது கூடலாம் இல்லை குறையலாம். இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு மாணவர் ஊர் பள்ளி கூடத்தில் படித்து விட்டு தீடீர் என்று நகர பள்ளிக்கூடத்தில் சேர்ந்தால் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கும் நாள் செல்ல சரியாகிவிடும். ஊர் பள்ளிக்கூடத்தில் ஒரு 200 பேர் படித்திருப்பார்கள் மரம் மட்டையிலிருந்து அதிபர் வரை எல்லோருக்கும் தெரிந்து இருக்கும், நகர பள்ளிக்கூடத்தில் 2000 பேர் படிப்பார்கள். அங்கே அப்படி முடியுமா?
sOliyAn Wrote:நீங்கள் நிகழ்காலத்தைப்பற்றி கூறுகிறீர்கள்! ஆதாம் ஏவாளின் பாவம் மனித குலத்தையே பற்றிப் பிடித்ததாக பைபிள் கூறுவதைப்போல... புலம்பெயர்ந்த தமிழர்களின் சந்ததி ஒன்று இங்கே வாழப்போகிறதே... அதைப்பற்றி கூற விழைகிறேன்..
வேலை. கல்வி, வசதி, வாய்ப்புக்காக இடம் பெயர்ந்தால் இதை தவிர்க்கமுடியாது. இதையும் வடக்கு கிழக்கு தமிழர் படும் கஷ்டத்தையும் ஒப்பிட முடயாது. அவர்களுக்கு அடிப்படை உரிமைகளே கிடைக்கவில்லை. புகலிடத் தமிழர்களோட பிரைச்சனை சமூக உரிமை அந்தஸ்த்து. புலத்தில் ஒரு சந்ததி உருவாகத்தான் போகின்றது, அது தவிர்க்க முடியாதது. இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து மலேசியா, சிஙகப்பூரின் தமிழர்கள் வாழ்வில்லையா? இல்லை இங்கிலாந்திலிருந்து குடி பெயர்ந்து ஆஸ்ரேலியாவில் வெள்ளையர்கள் வாழவில்லையா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->