03-15-2004, 11:46 AM
பிரதேசவாதம் இன்று கிளம்பிய ஒன்றல்ல அது எம்மிடையே மட்டுமன்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உண்டு
உதாரணமாக நாம் இலங்கைக்குள் தான் தமிழர் சிங்களவர் அல்லது யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்,வன்னியர் வெளியில் போனால் இலங்கையர்,இந்தியர்,பாகிஸ்தானி
அதே போன்று ஐரோப்பியக் கண்டத்துள் சென்றோம் என்றால் நாம் எல்லோருமே ஆசிய நாட்டவர்
இப்படி உலகம் பூராவும் இனத்தை மட்டுமல்ல பிரதேசத்தையும் அடிப்படையாக வைத்த பாகுபாடு உண்டு
ஆனால் அது பிரதேச ரீதியான ஒற்றுமையாக இருந்தால் பரவாயில்லை பிரதேச "வாதம்" என்ற ரீதியில் இரு பிரதேச மக்களுக்கிடையில் துவேஷத்தை, பகையை ,மனவேற்றுமையை வளர்ப்பதற்கு பயன் படுத்தப் படும்போது தவிர்க்கப்பட அல்லது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது
பொய்யும் வாய்மையிடத்து புரை தீர்ந்து நன்மை பயக்குமெனின் என்ற கூற்றுக்கு அமைய மக்களை இப்படி பாகுபடுத்துவது விரும்பத்தகாததெனினும் அதுவே மக்களுக்கிடையில் புரிந்துணர்வையும் ஒன்று படுதலையும் உருவாக்குமெனில் ஏற்றுக்கொள்ளலாம்
உதாரணமாக நாம் இலங்கைக்குள் தான் தமிழர் சிங்களவர் அல்லது யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்,வன்னியர் வெளியில் போனால் இலங்கையர்,இந்தியர்,பாகிஸ்தானி
அதே போன்று ஐரோப்பியக் கண்டத்துள் சென்றோம் என்றால் நாம் எல்லோருமே ஆசிய நாட்டவர்
இப்படி உலகம் பூராவும் இனத்தை மட்டுமல்ல பிரதேசத்தையும் அடிப்படையாக வைத்த பாகுபாடு உண்டு
ஆனால் அது பிரதேச ரீதியான ஒற்றுமையாக இருந்தால் பரவாயில்லை பிரதேச "வாதம்" என்ற ரீதியில் இரு பிரதேச மக்களுக்கிடையில் துவேஷத்தை, பகையை ,மனவேற்றுமையை வளர்ப்பதற்கு பயன் படுத்தப் படும்போது தவிர்க்கப்பட அல்லது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது
பொய்யும் வாய்மையிடத்து புரை தீர்ந்து நன்மை பயக்குமெனின் என்ற கூற்றுக்கு அமைய மக்களை இப்படி பாகுபடுத்துவது விரும்பத்தகாததெனினும் அதுவே மக்களுக்கிடையில் புரிந்துணர்வையும் ஒன்று படுதலையும் உருவாக்குமெனில் ஏற்றுக்கொள்ளலாம்
\" \"

