03-12-2004, 02:28 PM
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->நன்றி நளாயினி அக்கா
முதலில் பெண்ணியவாதிகள் என்ற போர்வையில் கண்டதையும் பேசி கண்டதையும் எழுதி சமூகத்தின் மத்தியில் தங்களின் அந்தஸ்தை மட்டுமே கருத்தில் கொள்ளுபவர்கள் மீது அடங்கா ஆத்திரம் ஏற்படக் காரணமாக இருந்த இரு பெண்ணியவாதிகள்(இவர்கள் பெண்ணியத்தை மறந்துவிட்டனர் வாதம் மட்டும் இருக்கிறது) ஒருவர் ராதிகா குமாரசுவாமி மற்றவர் மகேஸ்வரி வேலாயுதம்
ராதிகா குமாரசுவாமி விடுதலைப் புலிகளின் பெண்போராளிகள் பற்றி எழுதியவற்றி நீங்கள் வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் திருமதி பாலசிங்கமும் தனது நூலில் அவருக்குத் தகுந்த பதிலடிகள் கொடுத்திருக்கிறார்
மற்றவரான மகேஸ்வரி வேலாயுதம் ஒரு மனித உரிமை வாதியும் கூட பெண்கள் அடக்குமுறைகள் என்று மேடைகளில் முழங்குபவர் இன்று EPRLF எச்ச சொச்சங்களான EPDP உடன் தேர்தலில் நிற்கிறார் இந்திய இராணுவ காலத்தில் இவர்கள் தமிழ்ப் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளை மகேஸ்வரி மறந்திருக்கலாம் தமிழ்ப் பெண்கள் மறப்பார்களா?
ஒட்டுமொத்தமாக நான் எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை இவர்களை விட இலங்கையில் ஏன் யாழ்ப்பணத்தில் கூட பலர் இருக்கிறார்கள் பெயர்கள் கூறுவது அழகல்ல என நினைக்கிறேன் பல்கலைக்கழக மாணவிகளை வெளிநாட்டுக் கண்ணிவெடி நிபுணருடன் தொடர்புபடுத்தியவர் கூட ஒரு பெண்ணியவாதி?தான் இப்படிப்பட்ட விசங்கள் சேர்வதால் ஒட்டுமொத்த பால்குடமும் விசமாகத் தான் மாறும்
எமது சமூகக் கட்டமைப்பில் புரையோடிப்போயிருக்கும் சீதன முறையை ஒழிப்பதற்காக சனசமூக நிலையங்கள் தோறும் பிரச்சாரம் செய்தோம் அன்று நாம் சந்தித்தவர்களில் சீதனத் தடுப்புச் சட்டத்தை எதித்தவர்கள் அரைவாசிப்பேர் பெண்கள்
என்ன காரணம் சமுதாய விழிப்பின்மை எமக்கு நிகராக கல்வி கற்ற போதும் பல்கலைக்கழகம் வந்த போதும் அவர்கள் மத்தியில் உளவியல் தாக்கம் எப்போதும் இருந்து கொண்டே வருகிறது இதற்கு ஆண்களும் காரணம் தான் ஆனாலும் வெறுமனே ஆண்களை மட்டும் குற்றம் சாட்டி உங்கள் விரலை நேட்டிப் பாருங்கள் உங்கள் கையில் மூன்று விரல்கள் உங்களை நோக்கி நீளும்
பெரும்பாலான தாய்மார்கள் எங்களைக் கேட்டது நாங்கள் என்ன விரும்பியா சீதனம் வாங்குகின்றோம் எமது பென் பிள்ளைகளுக்குக் கொடுக்கவேண்டும் அதனால் ஆண்பிள்ளைகளுக்கு சீதனம் வாங்குகின்றோம் எப்படிப்பட்ட தர்க்கம் பாருங்கள்
இங்கே ஆண் விலை கொடுத்து வாங்கப் படுகிறான் அதனால் அவனுக்கு என்ன உரிமை என்று சில பெண்ணியலாளர்கள் தர்க்கிக்கின்றார்கள் உண்மையைச் சொன்னால் அந்த ஆண் ஒரு பெண்ணுக்காக இன்னொரு பெண்ணிடம் விற்கப் படுகிறான் வாஙுவதும் பெண் விற்பதும் பெண் விற்கப்படுவதும் பெண்ணிற்காக ஆனால் குற்றம் சுமப்பது ஆண்
மனதிலே சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை வைத்துக் கொண்டு தாய் தங்கை பாசத்துக்காக கோழை மாதிரி இன்னொரு பெண்ணிடம் தன்னை அடகு வைக்க வேண்டிய நிலையில் ஆணிருக்க மொத்தக் குற்றச் சாட்டுகளையும் அவன் மேல் போட்டுவிடுகிறோம்
ஏன் சீதனக் கொடுமையால் முதிர்கன்னிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களைத்தான் உங்களுக்குத் தெரியுமா அதே அக்கா தங்கைக்காக வாலிப வயதைத் தொலைத்துவிட்டு வெளிநாடுகளில் வேலை செய்யும் 35 40 வயது வாலிபர்களை
நாம் பார்த்ததில்லையா
அதுதான் நான் சொன்னேன் வெறுமனே ஆணாதிக்கம் ஆண்வர்கம் என்று எமது சகோதரன் அப்பா கணவன் மீது பழியைப் போடாமல் பிரச்சனையின் அடிப்படையைப் புரிந்து கொள்ளவேண்டும் இரு கை தட்டித் தான் ஓசை எழும்பும் இது நல்லதற்கும் எடுக்கலாம் கெட்டதற்கும் எடுக்கலாம் பெண்ணடிமை என்ற விசத்தில் ஆணின் பங்கு மட்டுமல்ல பெண்ணின் பங்கும் உண்டு
உணமையில் யாழ் மண்ணில் இருக்கும் தாய்மாரின் துணிவும் தியாகமும் பாராட்டப் படவேண்டியதே கடந்த சில மாதங்களாக நகரில் போராளிகளை இராணுவம் தடுத்தி நிறுத்தியபோது துணிவுடன் அணிதிரண்டு மறியல்கள் போராட்டமென இறங்கி அவர்களை உடனுக்குடன் விடுதலை செய்த பெருமை தாய்க்குலத்தையே சாரும்
யாழ் மண்ணில் பெண்விடுதலைக் கருத்துகளை வெறுமனே மேடை போட்டுப் பேசி பிரச்சனையைத் தீர்துவிட முடியாது அதே போன்று எவ்வளவு தான் பெண்விடுதலை பற்றிய கருத்துகளை எழுதினாலும் எத்தனை பேர் ரமணிச்சந்திரனையும்,லஷ்மியையும் விட்டுவிட்டு அவற்றை வாசிப்பார்கள் என நினைக்கிறீர்கள்
வெறுமனே சுலோகங்களைத் தாங்கிப் பேரணி நடத்தி மேடை போட்டு மத்தளத்தையும் தாளத்தையும் தட்டி அடக்காதே அடக்காதே பென்ணினத்தை அடக்காதே கொடு கொடு பெண்ணுக்கு உரிமை கொடு என்று உச்சஸ்தாயியில் கத்தி உருவேற்றினால் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் பெண்ணின் மனநிலை எப்படியிருக்கும் \"ஆகா காலங்காலமாக எம்மை இந்த ஆணினம் அடக்கி வந்திருக்கிறது தெரியாமற் போய்விட்டதே\" என உணர்ச்சிப் பிளம்பாய் வீட்டுக்குப் போவாள் வீட்டில் வேலையால் வந்து தேத்தண்ணி தாப்பா என்று கேட்கும் கணவன் பிள்ளை சோறு போட்டுத்தா என்று கேட்கும் தகப்பன் எல்லோரும் தம்மை அடக்கியாளும் ஆணினமாகத் தெரிவர் விளைவு?
இவற்றைக் கிராம மட்டங்களாகச் சென்று அங்கே அவர்களுடன் பேசி நடப்பு விடயங்களைக் கலந்தாலோசித்து மெது மெதுவாக உளவியல் பலத்தைக் கொடுக்கவேண்டும் கிராம மட்டத்தில் படித்துவிட்டு தொழில் செய்ய விரும்பாமல் அல்லது விருப்பமில்லாமல் நிறையப் பெண்கள் இருக்கிறார்கள் [size=18]அவர்களுக்குக் கருத்தரங்குகள் நடத்தி அவர்களைத் தெளிவு படுத்தவேண்டும் இதனைச் செய்ய இங்குள்ள பெண்ணிலைவாதிகள் வருவார்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஒழுங்கு படுத்துங்கள் நான் வர ரெடி.
முதலில் பெண்ணியவாதிகள் என்ற போர்வையில் கண்டதையும் பேசி கண்டதையும் எழுதி சமூகத்தின் மத்தியில் தங்களின் அந்தஸ்தை மட்டுமே கருத்தில் கொள்ளுபவர்கள் மீது அடங்கா ஆத்திரம் ஏற்படக் காரணமாக இருந்த இரு பெண்ணியவாதிகள்(இவர்கள் பெண்ணியத்தை மறந்துவிட்டனர் வாதம் மட்டும் இருக்கிறது) ஒருவர் ராதிகா குமாரசுவாமி மற்றவர் மகேஸ்வரி வேலாயுதம்
ராதிகா குமாரசுவாமி விடுதலைப் புலிகளின் பெண்போராளிகள் பற்றி எழுதியவற்றி நீங்கள் வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் திருமதி பாலசிங்கமும் தனது நூலில் அவருக்குத் தகுந்த பதிலடிகள் கொடுத்திருக்கிறார்
மற்றவரான மகேஸ்வரி வேலாயுதம் ஒரு மனித உரிமை வாதியும் கூட பெண்கள் அடக்குமுறைகள் என்று மேடைகளில் முழங்குபவர் இன்று EPRLF எச்ச சொச்சங்களான EPDP உடன் தேர்தலில் நிற்கிறார் இந்திய இராணுவ காலத்தில் இவர்கள் தமிழ்ப் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளை மகேஸ்வரி மறந்திருக்கலாம் தமிழ்ப் பெண்கள் மறப்பார்களா?
ஒட்டுமொத்தமாக நான் எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை இவர்களை விட இலங்கையில் ஏன் யாழ்ப்பணத்தில் கூட பலர் இருக்கிறார்கள் பெயர்கள் கூறுவது அழகல்ல என நினைக்கிறேன் பல்கலைக்கழக மாணவிகளை வெளிநாட்டுக் கண்ணிவெடி நிபுணருடன் தொடர்புபடுத்தியவர் கூட ஒரு பெண்ணியவாதி?தான் இப்படிப்பட்ட விசங்கள் சேர்வதால் ஒட்டுமொத்த பால்குடமும் விசமாகத் தான் மாறும்
எமது சமூகக் கட்டமைப்பில் புரையோடிப்போயிருக்கும் சீதன முறையை ஒழிப்பதற்காக சனசமூக நிலையங்கள் தோறும் பிரச்சாரம் செய்தோம் அன்று நாம் சந்தித்தவர்களில் சீதனத் தடுப்புச் சட்டத்தை எதித்தவர்கள் அரைவாசிப்பேர் பெண்கள்
என்ன காரணம் சமுதாய விழிப்பின்மை எமக்கு நிகராக கல்வி கற்ற போதும் பல்கலைக்கழகம் வந்த போதும் அவர்கள் மத்தியில் உளவியல் தாக்கம் எப்போதும் இருந்து கொண்டே வருகிறது இதற்கு ஆண்களும் காரணம் தான் ஆனாலும் வெறுமனே ஆண்களை மட்டும் குற்றம் சாட்டி உங்கள் விரலை நேட்டிப் பாருங்கள் உங்கள் கையில் மூன்று விரல்கள் உங்களை நோக்கி நீளும்
பெரும்பாலான தாய்மார்கள் எங்களைக் கேட்டது நாங்கள் என்ன விரும்பியா சீதனம் வாங்குகின்றோம் எமது பென் பிள்ளைகளுக்குக் கொடுக்கவேண்டும் அதனால் ஆண்பிள்ளைகளுக்கு சீதனம் வாங்குகின்றோம் எப்படிப்பட்ட தர்க்கம் பாருங்கள்
இங்கே ஆண் விலை கொடுத்து வாங்கப் படுகிறான் அதனால் அவனுக்கு என்ன உரிமை என்று சில பெண்ணியலாளர்கள் தர்க்கிக்கின்றார்கள் உண்மையைச் சொன்னால் அந்த ஆண் ஒரு பெண்ணுக்காக இன்னொரு பெண்ணிடம் விற்கப் படுகிறான் வாஙுவதும் பெண் விற்பதும் பெண் விற்கப்படுவதும் பெண்ணிற்காக ஆனால் குற்றம் சுமப்பது ஆண்
மனதிலே சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை வைத்துக் கொண்டு தாய் தங்கை பாசத்துக்காக கோழை மாதிரி இன்னொரு பெண்ணிடம் தன்னை அடகு வைக்க வேண்டிய நிலையில் ஆணிருக்க மொத்தக் குற்றச் சாட்டுகளையும் அவன் மேல் போட்டுவிடுகிறோம்
ஏன் சீதனக் கொடுமையால் முதிர்கன்னிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களைத்தான் உங்களுக்குத் தெரியுமா அதே அக்கா தங்கைக்காக வாலிப வயதைத் தொலைத்துவிட்டு வெளிநாடுகளில் வேலை செய்யும் 35 40 வயது வாலிபர்களை
நாம் பார்த்ததில்லையா
அதுதான் நான் சொன்னேன் வெறுமனே ஆணாதிக்கம் ஆண்வர்கம் என்று எமது சகோதரன் அப்பா கணவன் மீது பழியைப் போடாமல் பிரச்சனையின் அடிப்படையைப் புரிந்து கொள்ளவேண்டும் இரு கை தட்டித் தான் ஓசை எழும்பும் இது நல்லதற்கும் எடுக்கலாம் கெட்டதற்கும் எடுக்கலாம் பெண்ணடிமை என்ற விசத்தில் ஆணின் பங்கு மட்டுமல்ல பெண்ணின் பங்கும் உண்டு
உணமையில் யாழ் மண்ணில் இருக்கும் தாய்மாரின் துணிவும் தியாகமும் பாராட்டப் படவேண்டியதே கடந்த சில மாதங்களாக நகரில் போராளிகளை இராணுவம் தடுத்தி நிறுத்தியபோது துணிவுடன் அணிதிரண்டு மறியல்கள் போராட்டமென இறங்கி அவர்களை உடனுக்குடன் விடுதலை செய்த பெருமை தாய்க்குலத்தையே சாரும்
யாழ் மண்ணில் பெண்விடுதலைக் கருத்துகளை வெறுமனே மேடை போட்டுப் பேசி பிரச்சனையைத் தீர்துவிட முடியாது அதே போன்று எவ்வளவு தான் பெண்விடுதலை பற்றிய கருத்துகளை எழுதினாலும் எத்தனை பேர் ரமணிச்சந்திரனையும்,லஷ்மியையும் விட்டுவிட்டு அவற்றை வாசிப்பார்கள் என நினைக்கிறீர்கள்
வெறுமனே சுலோகங்களைத் தாங்கிப் பேரணி நடத்தி மேடை போட்டு மத்தளத்தையும் தாளத்தையும் தட்டி அடக்காதே அடக்காதே பென்ணினத்தை அடக்காதே கொடு கொடு பெண்ணுக்கு உரிமை கொடு என்று உச்சஸ்தாயியில் கத்தி உருவேற்றினால் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் பெண்ணின் மனநிலை எப்படியிருக்கும் \"ஆகா காலங்காலமாக எம்மை இந்த ஆணினம் அடக்கி வந்திருக்கிறது தெரியாமற் போய்விட்டதே\" என உணர்ச்சிப் பிளம்பாய் வீட்டுக்குப் போவாள் வீட்டில் வேலையால் வந்து தேத்தண்ணி தாப்பா என்று கேட்கும் கணவன் பிள்ளை சோறு போட்டுத்தா என்று கேட்கும் தகப்பன் எல்லோரும் தம்மை அடக்கியாளும் ஆணினமாகத் தெரிவர் விளைவு?
இவற்றைக் கிராம மட்டங்களாகச் சென்று அங்கே அவர்களுடன் பேசி நடப்பு விடயங்களைக் கலந்தாலோசித்து மெது மெதுவாக உளவியல் பலத்தைக் கொடுக்கவேண்டும் கிராம மட்டத்தில் படித்துவிட்டு தொழில் செய்ய விரும்பாமல் அல்லது விருப்பமில்லாமல் நிறையப் பெண்கள் இருக்கிறார்கள் [size=18]அவர்களுக்குக் கருத்தரங்குகள் நடத்தி அவர்களைத் தெளிவு படுத்தவேண்டும் இதனைச் செய்ய இங்குள்ள பெண்ணிலைவாதிகள் வருவார்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஒழுங்கு படுத்துங்கள் நான் வர ரெடி.
[b]Nalayiny Thamaraichselvan

