03-11-2004, 10:26 PM
Eelavan Wrote:நளாயினி அக்கா நான் பெண்கள் பற்றிய எனது பார்வையை ஏற்கனவே தெளிவு படுத்தி விட்டேன் இப்போது கேட்கும் கேள்விகள் இடக்கு முடக்காக இருக்கின்றன என்னை ஒரு பெண்ணியவாதியாக காட்டிக் கொள்வதிலும் பார்க்க தாய்க்கு மகனாக துணைக்கு துணைவனாக மற்றவர்களுக்கு உற்ற நண்பனாக இருக்க விரும்புகிறேன்ஆண் வர்க்க பிரதிநிதி எல்லாம் கிடையாது. ஆண் என்றும் எதிரியே அல்ல.அப்பா அண்ணா தம்பி கணவன் மகன் நண்பன் என எம்மைச்சுூழ ஆண்கள் தான். ஒரு போதும் ஆணை தரம் தாழ்த்தி நினைத்தது கிடையாது-. பெண்களை தாழ்த்திறபோது மட்டும் உச்சியில் கோவம் வரும் அவ்வளவு தான்.அது எனது தந்தையாக இருந்தால் கூட .பெண்களயின் திறமைகள் அனைத்தையும் அங்குலம் அங்குலமாக அபகரித்தக்கொண்டனர். இதற்கு உதாரணமாக காட்டியதே வாகன சாரதி மற்றும் உணவு விடுதி முதலாளி. தொழிலாளி.
இதனை நீங்கள் கேட்பது இது பற்றிய விவாதத்தை வளர்த்துச் செல்வதற்கென்றால் நானும் தயார்[size=18] இல்லாதவிடத்து என்னையும் நீங்கள் சொல்லும் ஆண் வர்க்கப் பிரதிநிதியாய் மட்டும் நினைத்து இது கேட்கப்பட்டதாயின் மன்னித்துவிடுங்கள்
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்ற பாரதி வாக்குத் தான் எனது வாக்கும்
வாகன சாரதியாக இருக்கிறபோது இன்னொருவர் சகலதையும் அவதானித்து சொல்லிக்கொண்டே இருப்பாரானால் சாரதி இருக்ரகயில் இருப்பவர் ஸ்ரேறிங் கிளச் இரண்டையும மாற்ற க் கூடியதாக இருப்பார். காலப்போக்கில் வாகன சாரதியாக தனித்து இயங்கமுடியாது போய்விடும்.அவருக்கு எப்போதுமே ஒருவர் அருகில் இருந்து சொல்லவேண்டிய கட்டாய நிலை தோன்றும்.காலப்போக்கில் வாகன சாரதியாக இருப்பதையே மறந்து போய் விடுவார். வாகன சாரதியாக கணவனையே விட்டிடலாம் என காலப்போக்கில் நினைத்து விடுவார். இதே நிலை தான் அன்றில் இருந்து பெண்ணிற்கு நிகழ்ந்து கொண்டு வருகிறது. குழந்தைகளாக இருக்கிறபோது ஆறு மாதத்தில் இரந்து 8 மாதத்திற்குள் பல் முழைக்கிறது அது ஆண்குழந்தையாக இருந்தால் எனஇன பெண் குழந்தையாக இருந்தால் என்ன இப்படியே சகல வளற்சியையும் கூறலாம். அப்படி சுயமான சிந்தனைசெயலை கொடுத்து வரும் பெற்றோர் காலப்போக்கில் ஆண் குழந்தைகளின் செயல் திறனில் கைவைக்காது எந்த தடையும் விதிக்காது பெண் குழந்தையை மட்டும் துள்ளாதே ஓடாதே பாயாதே அங்கை போகாதே இங்கை போகாதே சிரியாதே அழாதே என சகலதிற்குமே தடை. காலம் காலமாக எமது சமூகத்தால் காவிவரப்படுகிறது இத்தகைய பெண்ணிற்கான எழுதப்படாத சட்டங்கள். காலப்போக்கில் இன்னொருவரின் துணையின்றி தனித்த செயல்படமுடியாத நிலை தானாக தோன்றுகிறது. இதனால் தான் பெண் எமது சமூகத்தில் சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டது எனலாம்.இந்த சார்ந்த வாழும் நிலை பொருளாதார நிலை நாடி அல்லாது உடல் உள சிந்தனைச்செயல் திறன் பலமின்றியுமே.(இத்தகையதொரு நிலைக்கு காரணம் சிறுவயதில் இருந்து பெற்றோரால் அவளைச் சுூழ உள்ள சுற்றத்தால் அவளிற்கு மட்டுமே பாதுகாப்பு என்ற போர்வையில் வழங்கப்பட்ட அடிமட்ட கட்டுப்பாடுகளால் எழுந்தவையே. இன்னொருவர் கட்டளைகளை வழங்குகிறபோதே பல எமது பெண்களால் செயல்பட முடிகிறது இது உண்மை.( திருமணமான பெண்கள்) இதற்கு உதாரணமாக இன்னொன்றையும் கூறலாம். சேவல் கோழி வளற்கிறோம். அதனை காணியுள் திரிந்து சுற்றி வளர்க்கின்ற கோழிக்கும் கூட்டிலே அடைத்து வற்கின்ற கோழிக்குமான வித்தியாசம். கூட்டிலே அடைத்து வளற்கின்ற கோழியை நீங்கள் கூட்டைத்திறந்து விட்டாலும் ஓடி ஆடி உணவு சேகரிக்க மாட்டாது. அதற்கு நீங்கள் உணவு போட்டால் தான் அது உண்ணும். கூட்டில் வளற்த கோழியை நீங்கள் அடித்து கலைத்தால் கூட ஓடாது .ஆனால் காலப்போக்கில் அதனை கூட்டில் அடையாது வளற்து பாருங்கள் தானாக இரைதேட கற்றுக்கொள்கிறது.
சரி விடயத்திற்கு வருகிறேன். இப்படியாக பெண்கள் காலம் காலமாக வளற்கப்பட்டு வருகிறார்கள்.தைரியத்தையும் எந்த சிக்கல் என்றாலும் துணிந்து முடிவுகளை எடுக்க கூடியவர்களாகவும் வளற்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ( பல ஆண்கள் எனது மனைவிக்கு கடைக்கு போய் வரவே தெரியாது எதற்கும் நான் தான் வேணும் என அலுத்தக்கொள்வோரை பாற்கிறபோது பாவமாக இருக்கும் எனக்கு.கடைசி அந்த ஆண்களாவது தனது மனைவியை மெது மெதுவாக துணிவை ஊட்டி சகலவிதத்திலும் ஆணுக்கு உதவி செய்யக் கூடிய வழியில் மாற்றி அமைக்க தெரியாது இருப்பது வேதனை தான்.
[b]Nalayiny Thamaraichselvan

