03-06-2004, 04:54 PM
சிறிய மார்பகம் என்ற பிரச்னையால் என்னுடைய காதலேதோல்வி அடைந்துவிட்டது!
சிறிய மார்பகம் என்ற பிரச்னையால் ஒரு கல்யாணமே நின்றதாக
குமுதம் சிநேகிதியில் (ஜனவரி இதழ்) படித்தேன். இந்தப் பிரச்னையால் என்னுடைய காதலும்-கூட தோல்வி அடைந்துவிட்டது! இதனை எழுத எனக்கு வெட்கமாக இருந்ததால் அப்போது நான் எழுதவில்லை.
ஆனால் அந்தக் கட்டுரையைப் படித்தவுடனே எனக்கும் எழுத வேண்டும் என்று தோன்றியது.
நானும் அவனும் உயிருக்குயிராக ஒருவரையருவர் நான்கு வருடங்கள் நேசித்தோம். இருவரும் தொட்டதில்லை. வெளியில் சுற்றியதில்லை. கடிதங்கள் மூலம் மட்டும் எங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வோம். போனில் வெகுநேரம் பேசுவோம். நேரில் பார்ப்போம்.
இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும்போது நட்பாகி, அது காதலாக மாறிப்போனது! புனிதமான காதலாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது.
நான் நல்ல சிவப்பாகவும் ஒல்லியாகவும் அழகாகவும் இருப்பேன். நீளமான கூந்தலும் எனக்கு உண்டு. பளிச்சென்ற என் தோற்றம் கண்டு நிறையப் பேர் என்னைக் காதலித்தார்கள்!
எனது காதலன் என்னை மிகவும் நேசிப்பதாக நினைத்து நானும் அவனைக் காதலித்தேன்.
அவன் அடிக்கடி எனக்கு எழுதும் கடிதங்-களில் "நிறைய சாப்பிடு.... குண்டாகு" என்று எழுதுவான். எனக்கு அது அப்போது புரியவில்லை.
திருமணம் நிச்சயமாகும் நேரம் ஒரு நாள்...
அப்போதுதான் முதன்முதலாய் இருவரும் தனியாக ஒரு இரவு சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. காதலித்த நான்கு வருடங்களாக எந்தத் தொடுதலும் இல்லாததாலும், திருமணம் நிச்சயமாகப் போகிறதே என்ற தைரியத்தாலும் இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம்! அவன் என்னுடன் உடலால் உறவு கொள்ள நினைத்தான். நான் அவனைக் கட்டுப்படுத்திவிட்டு "இப்போது வேண்டாம்...
திருமணத்திற்குப் பிறகு தான் நல்லது" என்று தடுத்துவிட்டேன். ஆனாலும் இருவரும் கட்டிப்பிடித்த நிலையில் படுத்திருந்தோம். அப்போது அவன் என் உடம்பைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டான்.
"என்ன, உனக்கு சதை இருக்க வேண்டிய இடத்தில் சதையே இல்லை. உன் மார்பு இதற்கு மேல் வளராதா?" என்று அவன் கேட்க, எனக்கு அசிங்க-மாகிவிட்டது! அதிர்ச்சியில் திகைத்துத் தடுமாறிவிட்டு, பின் கொஞ்சம் சுதாரித்துக்-கொண்டு "திருமணத்-திற்குப் பிறகு வளரும்" என்று சொன்னேன்.
எனக்கு இப்போது 29 வயது ஆகிறது. ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கை என்றால் என்னவென்று எனக்குப் புரிகிறது. அதுவும் அவன் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்ட பிறகுதான் புரிந்தது! அந்தக் குறிப்பிட்ட சம்பவத்துக்குப் பிறகு அவன் என்னிடம் பேசுவது இல்லை. எந்தத் தொடர்பும் இல்லை.
பிறகு மெல்ல விசாரித்தபோதுதான் தெரிந்தது. டீன் ஏஜ் வயதில், சிகப்பான, மார்பு பெரிதாக இருக்கும் ஒரு மாணவியை அவன் விரும்பு-கிறானாம். அவளை இன்னும் நான்கு வருடங்கள் காத்திருந்து திருமணமும் செய்துகொள்ளப் போகிறானாம். பள்ளியில் அவன் அந்தப் பெண்ணிற்கு பாடம் எடுக்கும் வாத்தியார்! நான் இதைக் கேள்விப்பட்டதுமே முதலில் வேதனையில் துடித்தேன். இருந்தும் மனதைத் தேற்றிக் கொண்டேன். நல்ல காலம், திருமணத்திற்கு முன்பே அவனின் சுயரூபம் தெரிந்ததே! முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண், 18 வயதானதும் அவனைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறதாம். <span style='color:#1200ff'><b>ஆண்களில் பலர்... ஏன், 99 சதவீதம் பேர், பெண்களின் மனதை அல்ல, பெண்களின் உடம்பை, சதையைத்தான் நேசிக்கிறார்கள்.
ஆனால் ஆண்கள் தொந்தி, தொப்பை, வழுக்கை, குள்ளம், ஒல்லி என்று எப்படி இருந்தாலும் பெண்கள் ஏற்றுக்-கொள்ள வேண்டுமாம். பெண்தான் சிவப்பாக, வெள்ளையாக, மார்பு பெரிதாக, கன்னம் குண்டாக, முடி நீளமாக, மொத்தத்தில் மிகவும் அழகாக இருக்க வேண்டும்!</b>
இவ்வளவுக்கும் நான் அவன் மனதைத்தான், அதாவது அவன் நல்லவன் என்று நினைத்துதான் அவனை நேசித்தேன். ஏனென்றால் அவன் உருவத்தில் பெரிய அழகு கிடையாது. கறுப்பு நிறம், சுமார்தான்! நிரந்தர வேலையும் இல்லாதவன். நேசித்தேன்... கடைசியில் அவன் எல்லோரையும் விட கேவலமாக, சாக்கடையாகப் போய்விட்டான்!
சினிமாவில் பெண் பார்க்கப் போகும்போது பெண்களின் உருவத்தை வைத்துக் கேவலப்படுத்துவது போல் வரும் சில சீன்களை எல்லாம் பார்த்துவிட்டு "ச்சேச்சே!.. உண்மையில் அதுபோல் எல்லாம் இல்லை" என்கிறார்கள் பலர். ஆனால், நிஜத்தில் இதுபோல் எத்தனையோ பெண்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நானே பெரிய உதாரணம் தானே!
<b>பெண் பார்க்க வருகிறவர்கள், குஷ்பு மாதிரி, மும்தாஜ் மாதிரி பெண்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன அஜீத்தா, கமலா?</b>முப்பத்தைந்து வயதில் பதினைந்து வயது பெண்ணாகப் பார்க்கிறார்கள்!
இப்போதெல்லாம் பாடம் சொல்லித் தரும் வாத்தியார்கள், தன்னிடம் படிக்கும் டீன்ஏஜ் பெண்களுடன் ஓடிப் போவதை அடிக்கடி பேப்பர்களில் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. எப் படித்தான் பெண்கள் முன்னேறினாலும் இதுபோன்ற தவறான ஆண்களால் பல பெண்கள் இப்படி வழுக்கி விழுந்து கொண டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை!</span>
நன்றி - குமுதம்
சிறிய மார்பகம் என்ற பிரச்னையால் ஒரு கல்யாணமே நின்றதாக
குமுதம் சிநேகிதியில் (ஜனவரி இதழ்) படித்தேன். இந்தப் பிரச்னையால் என்னுடைய காதலும்-கூட தோல்வி அடைந்துவிட்டது! இதனை எழுத எனக்கு வெட்கமாக இருந்ததால் அப்போது நான் எழுதவில்லை.
ஆனால் அந்தக் கட்டுரையைப் படித்தவுடனே எனக்கும் எழுத வேண்டும் என்று தோன்றியது.
நானும் அவனும் உயிருக்குயிராக ஒருவரையருவர் நான்கு வருடங்கள் நேசித்தோம். இருவரும் தொட்டதில்லை. வெளியில் சுற்றியதில்லை. கடிதங்கள் மூலம் மட்டும் எங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வோம். போனில் வெகுநேரம் பேசுவோம். நேரில் பார்ப்போம்.
இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும்போது நட்பாகி, அது காதலாக மாறிப்போனது! புனிதமான காதலாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது.
நான் நல்ல சிவப்பாகவும் ஒல்லியாகவும் அழகாகவும் இருப்பேன். நீளமான கூந்தலும் எனக்கு உண்டு. பளிச்சென்ற என் தோற்றம் கண்டு நிறையப் பேர் என்னைக் காதலித்தார்கள்!
எனது காதலன் என்னை மிகவும் நேசிப்பதாக நினைத்து நானும் அவனைக் காதலித்தேன்.
அவன் அடிக்கடி எனக்கு எழுதும் கடிதங்-களில் "நிறைய சாப்பிடு.... குண்டாகு" என்று எழுதுவான். எனக்கு அது அப்போது புரியவில்லை.
திருமணம் நிச்சயமாகும் நேரம் ஒரு நாள்...
அப்போதுதான் முதன்முதலாய் இருவரும் தனியாக ஒரு இரவு சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. காதலித்த நான்கு வருடங்களாக எந்தத் தொடுதலும் இல்லாததாலும், திருமணம் நிச்சயமாகப் போகிறதே என்ற தைரியத்தாலும் இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம்! அவன் என்னுடன் உடலால் உறவு கொள்ள நினைத்தான். நான் அவனைக் கட்டுப்படுத்திவிட்டு "இப்போது வேண்டாம்...
திருமணத்திற்குப் பிறகு தான் நல்லது" என்று தடுத்துவிட்டேன். ஆனாலும் இருவரும் கட்டிப்பிடித்த நிலையில் படுத்திருந்தோம். அப்போது அவன் என் உடம்பைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டான்.
"என்ன, உனக்கு சதை இருக்க வேண்டிய இடத்தில் சதையே இல்லை. உன் மார்பு இதற்கு மேல் வளராதா?" என்று அவன் கேட்க, எனக்கு அசிங்க-மாகிவிட்டது! அதிர்ச்சியில் திகைத்துத் தடுமாறிவிட்டு, பின் கொஞ்சம் சுதாரித்துக்-கொண்டு "திருமணத்-திற்குப் பிறகு வளரும்" என்று சொன்னேன்.
எனக்கு இப்போது 29 வயது ஆகிறது. ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கை என்றால் என்னவென்று எனக்குப் புரிகிறது. அதுவும் அவன் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்ட பிறகுதான் புரிந்தது! அந்தக் குறிப்பிட்ட சம்பவத்துக்குப் பிறகு அவன் என்னிடம் பேசுவது இல்லை. எந்தத் தொடர்பும் இல்லை.
பிறகு மெல்ல விசாரித்தபோதுதான் தெரிந்தது. டீன் ஏஜ் வயதில், சிகப்பான, மார்பு பெரிதாக இருக்கும் ஒரு மாணவியை அவன் விரும்பு-கிறானாம். அவளை இன்னும் நான்கு வருடங்கள் காத்திருந்து திருமணமும் செய்துகொள்ளப் போகிறானாம். பள்ளியில் அவன் அந்தப் பெண்ணிற்கு பாடம் எடுக்கும் வாத்தியார்! நான் இதைக் கேள்விப்பட்டதுமே முதலில் வேதனையில் துடித்தேன். இருந்தும் மனதைத் தேற்றிக் கொண்டேன். நல்ல காலம், திருமணத்திற்கு முன்பே அவனின் சுயரூபம் தெரிந்ததே! முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண், 18 வயதானதும் அவனைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறதாம். <span style='color:#1200ff'><b>ஆண்களில் பலர்... ஏன், 99 சதவீதம் பேர், பெண்களின் மனதை அல்ல, பெண்களின் உடம்பை, சதையைத்தான் நேசிக்கிறார்கள்.
ஆனால் ஆண்கள் தொந்தி, தொப்பை, வழுக்கை, குள்ளம், ஒல்லி என்று எப்படி இருந்தாலும் பெண்கள் ஏற்றுக்-கொள்ள வேண்டுமாம். பெண்தான் சிவப்பாக, வெள்ளையாக, மார்பு பெரிதாக, கன்னம் குண்டாக, முடி நீளமாக, மொத்தத்தில் மிகவும் அழகாக இருக்க வேண்டும்!</b>
இவ்வளவுக்கும் நான் அவன் மனதைத்தான், அதாவது அவன் நல்லவன் என்று நினைத்துதான் அவனை நேசித்தேன். ஏனென்றால் அவன் உருவத்தில் பெரிய அழகு கிடையாது. கறுப்பு நிறம், சுமார்தான்! நிரந்தர வேலையும் இல்லாதவன். நேசித்தேன்... கடைசியில் அவன் எல்லோரையும் விட கேவலமாக, சாக்கடையாகப் போய்விட்டான்!
சினிமாவில் பெண் பார்க்கப் போகும்போது பெண்களின் உருவத்தை வைத்துக் கேவலப்படுத்துவது போல் வரும் சில சீன்களை எல்லாம் பார்த்துவிட்டு "ச்சேச்சே!.. உண்மையில் அதுபோல் எல்லாம் இல்லை" என்கிறார்கள் பலர். ஆனால், நிஜத்தில் இதுபோல் எத்தனையோ பெண்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நானே பெரிய உதாரணம் தானே!
<b>பெண் பார்க்க வருகிறவர்கள், குஷ்பு மாதிரி, மும்தாஜ் மாதிரி பெண்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன அஜீத்தா, கமலா?</b>முப்பத்தைந்து வயதில் பதினைந்து வயது பெண்ணாகப் பார்க்கிறார்கள்!
இப்போதெல்லாம் பாடம் சொல்லித் தரும் வாத்தியார்கள், தன்னிடம் படிக்கும் டீன்ஏஜ் பெண்களுடன் ஓடிப் போவதை அடிக்கடி பேப்பர்களில் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. எப் படித்தான் பெண்கள் முன்னேறினாலும் இதுபோன்ற தவறான ஆண்களால் பல பெண்கள் இப்படி வழுக்கி விழுந்து கொண டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை!</span>
நன்றி - குமுதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

