Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆதங்கம்
#5
இது பரணி அண்ணனின் ஆதங்கம் மட்டுமல்ல எனது மனதைப் பிழியும் உண்மையும் தான்

எதிர்பார்த்து வந்த படிப்பு,
எதிர்பாராமல் கிடைத்த வசதிகள்,
பல்வேறு நாகரீகங்கள்,
பலநூறு பழக்கவழக்கங்கள்.
இத்தனையும் கிடைத்தும்,
மனம்
ஏதோ ஒன்றுக்காக...
அலை மோதுகின்றதே!
ஏன்?

காலை வேளையில்,
"மச்சான் எழும்படா...
கல்லூரிக்குப் போகவேணும்".
திருப்பள்ளியெழுச்சியாய்
நண்பன் குரல்.
இதையே....
அம்மா சொன்னால்,
எவ்வளவு நன்றாகவிருக்கும்.

இருள் நிறையும் நேரம்
"மச்சான் சாப்பிட்டாயா?..
கோப்பையில் தேத்தண்ணி இருக்கு..
குடிச்சிட்டுப் படு"
நண்பனின் விசாரிப்பு.
இதையே....
தங்கை சொன்னால்
எப்படியிருக்கும்

பொங்கலுக்கும் தீபாளிக்கும்
இங்கு மட்டும்.
என்ன குறைச்சல்?
இங்கென்ன
கோவிலில்லையா?
கும்பிடுவதற்கு,
சாமியில்லையா?
மனம் மட்டுமேன்
ஆலமரத்தடிப் பிள்ளையாருக்கு
அடம்பிடிக்கிறது?

"என்ன இருந்தாலும்
என்ரை ஊர் மாதிரி வராது"
அடிக்கடி நான் சொல்ல..
அலட்டாமல் நண்பன்.
எனக்குத் தெரியும்,
அவன் கண்கள்
இப்போது
உப்புக் கண்ணீர்
ஊற்றாகும்.

என்ன குறை
இந்த நாட்டில்?
உனவில்லையா?
உடையில்லையா?
ஊர் சுற்ற..
நட்பில்லையா?
இருந்துமேன்
தெருப் புழுதிக்கும்
தேங்காய்ப் பிட்டுக்கும்
ஊமையாய்
அழுகிறேன்?

எதற்காக கவலை
அம்மாவிற்கா,
தங்கைகளுக்கா?
நான் உழைப்பதே
அவர்களுக்காகத் தானே.
அதுதானே கிழமைக்கொருதரம்
தொலைபேசியில்
குரல் கேட்கிறேன்.
நண்பர்கள்???
இங்கேயும் உள்ளனரே.

பின் எதற்காம்
இந்த ஏக்கம்...
அங்கலாய்ப்பு...
என் மீது எனக்கே
இனம் புரியாக் கோபம்.?
ஒவ்வொரு விடுமுறையிலும்
அழகழகாய் எடுத்து வந்து
அடுக்கி வைத்து ரசிக்கும்
புகைப் படங்களிலுள்ள
என்னூருக்கா?
\" \"
Reply


Messages In This Thread
ஆதங்கம் - by Mathan - 03-01-2004, 06:04 PM
[No subject] - by Paranee - 03-01-2004, 06:11 PM
[No subject] - by Mathan - 03-01-2004, 06:17 PM
[No subject] - by yarlmohan - 03-01-2004, 09:14 PM
[No subject] - by Eelavan - 03-02-2004, 08:42 AM
[No subject] - by sWEEtmICHe - 03-02-2004, 10:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)