02-27-2004, 04:56 AM
பிபிசி எழுதியது:
வசிசுதா எழுதியது:
Quote:குறிப்பு - இந்த கட்டுரைல வர்ர உடங்கட்டை ஏறுவது மாதிரியான விடயங்களை நான் ஏத்துக்கலை....ஏன் பிபிசி அந்த உடங்கட்டை நிகழ்வை நீக்கினீர்கள். உங்களுக்கு பிடித்ததோ இல்லையோ, அது வரலாற்றில் நிகழ்ந்த உண்மை, அது இலக்கியத்தில் பதிவாகியுள்ளது, அதை ஏன் நீங்கள் இருட்டடிப்பு செய்ய வேண்டும்? அப்ப நீங்களும் நடுவின்மையாக தணிக்கை செய்வீர்கள் போலும்!
Quote: ...உடங்கட்டை ஏறுவது பெண்கள் மேல் திணிக்கப்பட்ட பிற்போக்கான விடயம...யார் திணித்தது? ஒன்றை நினைவில் வையுங்கள், கடந்த இரு பத்தாண்டுகட்கு முன்னரும், விதவைப் பெணகளை கூடுதலாக துன்புறுத்தியது பெண்கள் தாம், (ஆரத்தி எடுக்க அழைப்பதில்லை, நன்நிகழ்வுகளில் சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கிவைத்தல், நிறப் புடவை கட்டினால் எள்ளுதல் போன்ற செயல்களால்). இதற்காக நான் பெண்களைக் குறை கூறவில்லை. இது ஒரு குமுகாயச் (சமுதாயப்) சிக்கல், இதில் இருபாலினரும் தான் தவறு இழைக்கின்றனர். சிந்தித்துப் பாருங்கள், ஒரு மாந்தன் அவன் வாழ்வில் தவறு இழைக்கிறான், நாமெல்லம் தவறு இழைப்பது மாந்தனின் இயல்பு என்பதை ஒத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட தவறு இழைக்கும் மாந்தர் குழுக்களால் அமையும் குமுகாயமும் தவறு இழைக்கத்தானே செய்யும். நமது மூதாதையர் குமுகாயத்தை, அவர்களை விடக் கூடக் காலம் இருக்கும், ஆதலால் கூடச் சிந்தனை செய்த நாம்குறை கூறுதல் நடுவுநிலை அற்றது.
வசிசுதா எழுதியது:
Quote:குருவியைக் கேட்டால் இல்லை இப்பவும் உடன்கட்டை ஏறுவது இருக்கவேண்டும் என்று சொல்லுவார். அப்படித்தானே குருவி?நாராயண, நாராயண...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
-

