02-25-2004, 08:01 PM
இது என்னோட கருத்து இல்ல, படிச்சதை இங்கை சுட்டு போட்டிருக்கேன். இதுபத்தி உங்க கருத்தை எழுதுங்க, - BBC
<b>எங்கள் தமிழ் மொழி!</b>
உலகின் எல்லா நாடுகளிலும் இப்போது தமிழர்கள் வாழ்கின்றார்கள். முன்பெல்லாம் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடாக தமிழகத்தை அடுத்து இலங்கையையும், மலேசியா சிங்கப்பூரையுமே நாம் உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்பொழுது உலகின் எல்லா மூலைகளிலும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு காரணங்களுக்காகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வெவ்வேறு நாடுகளில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சூழ்நிலை. இப்படி புலம்பெயர்ந்து செல்லும் போது, இருக்கின்ற நாட்டின் தேவைக்கேற்ப புதிய மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
இது தவிர்க்கப்படமுடியாத ஒன்றே. ஆகினும் தமிழ் மக்கள் தாய் மொழியை மறந்து விடாமல் தங்களது அடுத்த சந்ததியினருக்கும் இம்மொழியின் பயன்பாடு இருக்க வேண்டும் என்பதில் பல முயற்சிகள் எடுத்து வருவதைக் காணமுடிகின்றது; இது பாராட்டப்படக் கூடிய ஒரு விஷயம்.
ஒரு மொழி என்பது வளர்ச்சியடையக் கூடிய சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும். புழக்கத்தில் இருக்கின்ற ஒரு மொழிதான வளர்ச்சி காண்கின்ற ஒரு மொழியாக, பல்லாண்டுகள் இருக்க முடியும். தொழில்நுட்பம் துரிதமாக வளர்ச்சி கண்டுவருகின்ற இவ்வேளையில் நாளுக்கு நாள் பல புதிய தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அறிவியல் தமிழ், கணினித் தமிழ் போன்ற கருத்துக்கள் வரவேற்கப்பட்டு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க பல புதிய சொற்கள் பிறந்துகொண்டிருக்கின்றன. இவை மட்டுமின்றி பல்வேறு காரணங்களினாலும் பல புதிய சொற்கள் தமிழ் மொழியில் புகுத்தப்படுகின்ற நிலையைக் காணமுடிகின்றது. பெரும்பாலும் இவை பேச்சு மொழி என்று முத்திரை குத்தப்பட்டு ஆராய்ச்சி நோக்கில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் விடப்பட்டு விடுகின்றன.
மொழியில், குறிப்பாக தமிழ் மொழியில் பிற மொழிக் கலப்பு என்ற பிரச்சனைகள் நெடுங்காலமாகவே இருக்கின்ற ஒன்று. காலங்காலமாக பல்வேறு இனத்தவரின், மொழியினரின் தொடர்பும் கலப்பும் ஏற்பட்டதன் விளைவாக இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சொற்களில் பல பிறமொழிச்சொற்கள் கலந்திருப்பதை மொழியியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிலை இன்றைக்கும் தொடர்கின்றது; அதுவும் குறிப்பாக புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் பல அன்னிய மொழிச் சொற்களின் 'தமிழ் படுத்தப்பட்ட' தமிழ் சொற்களைக் கேட்க முடிகின்றது. மலேசிய தமிழர்கள் பேசும் போது மலாய் சொற்களின் தாக்கங்கள் சேர்ந்திருப்பதை நன்றாக உணரமுடியும். அதேபோல ஜெர்மனியில் வாழ்கின்ற தமிழர்கள் பேசும் போது தமிழோடு கலந்த தமிழ் படுத்தப்பட்ட ஜெர்மானிய வார்த்தைகளையும் காணமுடியும்.
அந்த வகையில், இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் தமிழ் மொழியில் உள்ள வேறுபாடுகளையும் மறந்து விட முடியாது. பொதுவாக தமிழகத்தில் பேசப்படுகின்ற தமிழ் வார்த்தைகளிலிருந்து இலங்கைத் தமிழர்களின் பேச்சுத் தமிழ் வித்தியாசப்படுகின்றது.
உதாரணமாக இந்த வாக்கியம்.[பேச்சு மொழி]
1. நான் கடைக்குப் போனேன். - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]
கடைக்குப் போனேன் நான். - [இலங்கைத் தமிழர் பேசும் வகை]
2. எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் தங்கியிருப்பீர்கள்? - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]
எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் நிற்பீர்கள்? - [இலங்கைத் தமிழர் பேசும் வகை]
3. நீ அகிலாவிடம் பேசினாயா? - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]
நீ அகிலாவிடம் கதைச்சியா? - [இலங்கைத் தமிழர் பேசும் வகை]
இப்படி பலப் பல வித்தியாசங்களை இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் காணமுடிகின்றது.
இலங்கைத் தமிழ் நண்பர்களோடு உறையாடும் போது நான் கவனித்த மேலும் சில சொற்களின் பட்டியல்:
இலங்கைத் தமிழ் - விளக்கம்
-----------------------------------
புதினம் - செய்தி
கொழுவுதல் - மாட்டிவைத்தல் அல்லது இணைத்தல்
சத்தி - வாந்தி
தலையிடி - தலைவலி
அரியண்டம் - பிரச்சனை
மச்சாள் - மாமனின் மகள், தம்பியின் மனைவி
தேசிக்காய் - எலுமிச்சை
மச்சம் - இறைச்சி வகைகள்
துவாய் - துண்டு
நொடி - விடுகதை
பொழுதுபட - மாலை
அவா - அவர்கள்
கெலில் - ஆசை
கெதியா - அவசரமாக, சீக்கிரமாக
ஆறுதலா - மெதுவாக
நித்திரை - தூக்கம்
கிட - படு
இனத்தாட்கள் - சொந்தக்காரர்கள்
வந்தவ - வந்திருக்கின்றனர்
சீவிக்கலாம் - வாழலாம்
கிட்டடியிலே - அண்மையில், சில நாட்களுக்கு முன்னர்
கண்டுட்டன் - பார்த்துட்டேன்
தமையன் - அண்ணன்
நாரி - முதுகு
திறமா - நன்றாக
காவிக் கொண்டு - தூக்கிக் கொண்டு
காணும் - போதும்
காணாது - பத்தாது
மேலே உள்ள சொற்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் அன்றாட உபயோகத்தில் இருக்கின்ற சொற்கள்தாம். இவற்றில் பல சொற்களை நாம் பொதுவாக அறிந்திருந்தாலும் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் பல சொற்கள் கேட்பதற்குப் புதிய சொற்களாகத் தோன்றினாலும், நன்கு ஆராய்ந்து பழைய தமிழ் இலக்கிய நூற்களை வாசிக்கும் போது அங்கு கிடைக்கக் கூடிய சொற்களாகவே இவை இருக்கின்றன. இந்தப் பழம் சொற்கள் தமிழகம், மற்றும் மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் வழக்கத்தில் இல்லாமலேயே போய்விட்டன என்பது மறுக்கப்பட முடியாத ஒரு உண்மை.
நன்றி - சுபாஷிணி
<b>எங்கள் தமிழ் மொழி!</b>
உலகின் எல்லா நாடுகளிலும் இப்போது தமிழர்கள் வாழ்கின்றார்கள். முன்பெல்லாம் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடாக தமிழகத்தை அடுத்து இலங்கையையும், மலேசியா சிங்கப்பூரையுமே நாம் உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்பொழுது உலகின் எல்லா மூலைகளிலும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு காரணங்களுக்காகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வெவ்வேறு நாடுகளில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சூழ்நிலை. இப்படி புலம்பெயர்ந்து செல்லும் போது, இருக்கின்ற நாட்டின் தேவைக்கேற்ப புதிய மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
இது தவிர்க்கப்படமுடியாத ஒன்றே. ஆகினும் தமிழ் மக்கள் தாய் மொழியை மறந்து விடாமல் தங்களது அடுத்த சந்ததியினருக்கும் இம்மொழியின் பயன்பாடு இருக்க வேண்டும் என்பதில் பல முயற்சிகள் எடுத்து வருவதைக் காணமுடிகின்றது; இது பாராட்டப்படக் கூடிய ஒரு விஷயம்.
ஒரு மொழி என்பது வளர்ச்சியடையக் கூடிய சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும். புழக்கத்தில் இருக்கின்ற ஒரு மொழிதான வளர்ச்சி காண்கின்ற ஒரு மொழியாக, பல்லாண்டுகள் இருக்க முடியும். தொழில்நுட்பம் துரிதமாக வளர்ச்சி கண்டுவருகின்ற இவ்வேளையில் நாளுக்கு நாள் பல புதிய தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அறிவியல் தமிழ், கணினித் தமிழ் போன்ற கருத்துக்கள் வரவேற்கப்பட்டு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க பல புதிய சொற்கள் பிறந்துகொண்டிருக்கின்றன. இவை மட்டுமின்றி பல்வேறு காரணங்களினாலும் பல புதிய சொற்கள் தமிழ் மொழியில் புகுத்தப்படுகின்ற நிலையைக் காணமுடிகின்றது. பெரும்பாலும் இவை பேச்சு மொழி என்று முத்திரை குத்தப்பட்டு ஆராய்ச்சி நோக்கில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் விடப்பட்டு விடுகின்றன.
மொழியில், குறிப்பாக தமிழ் மொழியில் பிற மொழிக் கலப்பு என்ற பிரச்சனைகள் நெடுங்காலமாகவே இருக்கின்ற ஒன்று. காலங்காலமாக பல்வேறு இனத்தவரின், மொழியினரின் தொடர்பும் கலப்பும் ஏற்பட்டதன் விளைவாக இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சொற்களில் பல பிறமொழிச்சொற்கள் கலந்திருப்பதை மொழியியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிலை இன்றைக்கும் தொடர்கின்றது; அதுவும் குறிப்பாக புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் பல அன்னிய மொழிச் சொற்களின் 'தமிழ் படுத்தப்பட்ட' தமிழ் சொற்களைக் கேட்க முடிகின்றது. மலேசிய தமிழர்கள் பேசும் போது மலாய் சொற்களின் தாக்கங்கள் சேர்ந்திருப்பதை நன்றாக உணரமுடியும். அதேபோல ஜெர்மனியில் வாழ்கின்ற தமிழர்கள் பேசும் போது தமிழோடு கலந்த தமிழ் படுத்தப்பட்ட ஜெர்மானிய வார்த்தைகளையும் காணமுடியும்.
அந்த வகையில், இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் தமிழ் மொழியில் உள்ள வேறுபாடுகளையும் மறந்து விட முடியாது. பொதுவாக தமிழகத்தில் பேசப்படுகின்ற தமிழ் வார்த்தைகளிலிருந்து இலங்கைத் தமிழர்களின் பேச்சுத் தமிழ் வித்தியாசப்படுகின்றது.
உதாரணமாக இந்த வாக்கியம்.[பேச்சு மொழி]
1. நான் கடைக்குப் போனேன். - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]
கடைக்குப் போனேன் நான். - [இலங்கைத் தமிழர் பேசும் வகை]
2. எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் தங்கியிருப்பீர்கள்? - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]
எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் நிற்பீர்கள்? - [இலங்கைத் தமிழர் பேசும் வகை]
3. நீ அகிலாவிடம் பேசினாயா? - [தமிழ் நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை]
நீ அகிலாவிடம் கதைச்சியா? - [இலங்கைத் தமிழர் பேசும் வகை]
இப்படி பலப் பல வித்தியாசங்களை இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் காணமுடிகின்றது.
இலங்கைத் தமிழ் நண்பர்களோடு உறையாடும் போது நான் கவனித்த மேலும் சில சொற்களின் பட்டியல்:
இலங்கைத் தமிழ் - விளக்கம்
-----------------------------------
புதினம் - செய்தி
கொழுவுதல் - மாட்டிவைத்தல் அல்லது இணைத்தல்
சத்தி - வாந்தி
தலையிடி - தலைவலி
அரியண்டம் - பிரச்சனை
மச்சாள் - மாமனின் மகள், தம்பியின் மனைவி
தேசிக்காய் - எலுமிச்சை
மச்சம் - இறைச்சி வகைகள்
துவாய் - துண்டு
நொடி - விடுகதை
பொழுதுபட - மாலை
அவா - அவர்கள்
கெலில் - ஆசை
கெதியா - அவசரமாக, சீக்கிரமாக
ஆறுதலா - மெதுவாக
நித்திரை - தூக்கம்
கிட - படு
இனத்தாட்கள் - சொந்தக்காரர்கள்
வந்தவ - வந்திருக்கின்றனர்
சீவிக்கலாம் - வாழலாம்
கிட்டடியிலே - அண்மையில், சில நாட்களுக்கு முன்னர்
கண்டுட்டன் - பார்த்துட்டேன்
தமையன் - அண்ணன்
நாரி - முதுகு
திறமா - நன்றாக
காவிக் கொண்டு - தூக்கிக் கொண்டு
காணும் - போதும்
காணாது - பத்தாது
மேலே உள்ள சொற்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் அன்றாட உபயோகத்தில் இருக்கின்ற சொற்கள்தாம். இவற்றில் பல சொற்களை நாம் பொதுவாக அறிந்திருந்தாலும் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் பல சொற்கள் கேட்பதற்குப் புதிய சொற்களாகத் தோன்றினாலும், நன்கு ஆராய்ந்து பழைய தமிழ் இலக்கிய நூற்களை வாசிக்கும் போது அங்கு கிடைக்கக் கூடிய சொற்களாகவே இவை இருக்கின்றன. இந்தப் பழம் சொற்கள் தமிழகம், மற்றும் மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் வழக்கத்தில் இல்லாமலேயே போய்விட்டன என்பது மறுக்கப்பட முடியாத ஒரு உண்மை.
நன்றி - சுபாஷிணி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

