02-19-2004, 10:09 PM
Eelavan Wrote:பாராட்டுக்கள் B.B.C குட்டிக்கதைக்கு
ஆனால் கதையை இப்படி திருத்தி எழுதுங்கள்.
தந்தை இறக்கும் தறுவாயில் கடைக்குட்டி பால்குடி பெரியண்ணாவின் மடியிலும் சின்னண்ணணின் தோளிலும் தொங்கிக்கொண்டிருந்தான் சரியாக தவளக்கூட தெரியாது
இந்த வேளையில் நிலத்தில் எப்படி அவனுக்கு பங்கு ஒதுக்கலாம அப்பா யோசித்தார் பெரியவனும் சின்னவனும் வளர்ந்துவிட்டார்கள் அவர்களுக்கு பங்கு கொடுப்பது நியாயம் கடைக்குட்டி எனது பிள்ளை என்றாலும் நிலத்தை வைத்து எதுவும் செய்யமாட்டான் எனவே நிலத்தை பெரியவனிடமும் சின்னவனிடமும் ஒப்படைத்து விட்டு கடைக்குட்டியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக கண்ணை மூடிவிட்டார்
ரொம்ப லேட்டா பதில் சொல்லுறேன் மன்னிக்கணும் பொஸ். கடைக்குட்டி பால்குடின்னு நீங்க சொன்னா சின்ன அண்ணனுக்கு கடைகுட்டிய விட ரொம்ப வயசு கிடையாது. பெரியண்ணன் ஒருத்தர் தான் பெரியவர்.
அப்பா சொத்தை பெரியவன் கிட்ட தான் குடுத்துட்டு போனார்.
Eelavan Wrote:சின்னவருக்கு ஒரே தலையிடி கடைக்குட்டிதனே அடிக்கவும் முடியவில்லை வைத்திருக்கவும் முடியவில்லை கடசியில் பொறுக்கமுடியாமல் வீட்டை விட்டுப் போகும் படி கடைக்குட்டிக்கு சொன்னார் அத்துடன் இந்த வீட்டில் இருப்பதெல்லம் எனது சொத்து எதையும் நீ எடுக்க கூடாது எல்லாம் நான் கஸ்டப்பட்டு சம்பாதித்தவை
அதுல கடைக்குட்டி சம்பாதித்ததும் இருந்தது. 24 மணி நேரத்தில போனதால எடுக்கலை. எடுக்கவும் விடலை.
அந்த காணீயில கடைகுட்டிக்கும் பங்கு இருந்தது.
[quote=Eelavan]
இந்த சின்னவரின் காணியில் தென் கிழக்கு மூலையில் சின்னதாக பாத்தி கட்டி கடைக்குட்டி மிளகாய் வளர்த்து வந்தார் அதே போன்று மேற்கு கரையோரம் சின்னவர் தம்பி விவசாயம் செய்யவும் அனுமதித்திருந்தார் அதே போன்று பெரியவரின் காணிக்குள் கடைக்குட்டியின் மிளகாய்த் தோட்டங்களும் வயல்களும் இருந்தன அவை அளவிலும் பெரியவை இதெல்லாம் இருவரும் விபரம் தெரிந்த காலத்திலிருந்தே நடந்து வருபவை
வீட்டை விட்டு வெளியேரிய கடைக்குட்டி தான் இதுவரை காலமும் சின்னவருக்கெதிராக மறைமுகமாக செய்த வேலைகளை மறைமுகமாக செய்ய ஆரம்பித்தார் தான் இதுவரை செய்த மிளகாய்த்தோட்டம் தவிர காய்கறித்தோட்டம் அது இது என்று போட்டு தென்கிழக்கு மூலையை ஆக்கிரமித்துகொண்டார் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் கடைக்குட்டி தோட்டம் செய்ய சகல உத்வியும் வழங்கியதோடு தனது காணி எல்லையை சின்னவரிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார் கடைக்குட்டியும் சின்னவரிடம் இருந்த கோபத்தை சின்னவர் வளர்க்கும் நாய் கோழி முதலியவற்றை அழித்து தீர்த்துக்கொண்டார்
அந்த காணீயில கடைகுட்டிக்கும் பங்கு இருந்தது. சின்னவரும் கடைக்குட்டியோட நாய் கோழி முதலியவற்றை அழித்தார்.
[quote=Eelavan]
சின்னவருக்கு இவ்வளவு காணியும் போகக்கூடது என்ற நோக்கத்துடன் பெரியவரும் அவனும் அபா பிள்ளை தானே அவனுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் தானே என்று ஊர் பெரிய மனிதர்களிடம் நீலிக்கண்ணீர் வடித்தார் உண்மையில் சின்னவருக்கு கிடைக்க இருப்பதோ 1/3 பங்குதான் அதிலும் கடைக்குட்டி பங்கு கேட்டால் தனக்கு என்ன மிச்சம் என்பது சின்னவரின் ஆதங்கம் வேண்டுமானால் பெரியண்ணன் வைத்திருக்கும் பெரிய காணியில் பங்கு கேட்கட்டுமேன் அவன் செய்து வரும் பெரிய தோட்டங்கள் அங்குதானே இருக்கின்றன இது சின்னவர் வாதம்
பெரியவர் பார்த்தார் சின்னவனிடமிருந்தே காணிகளை ஆக்கிரமித்த எனக்கு இந்த கடைக்குட்டி எம்மாத்திரம் அதனால் கடைக்குட்டி கேட்பதெல்லாவற்றுக்கும் தலையாட்டியவாறே சின்னவரின் காணியில் பங்கு பிடுங்கி கடைக்குட்டிக்கு கொடுப்பதில் குறியாக இருக்கிறார் கடைக்குட்டி வாங்குவதை வாங்கட்டும் அப்புறம் அவனிடமிருந்து நாம் எல்லாவற்றையும் தான் பறித்துக்கொள்ளலாம் என்பது பெரியவர் திட்டம்
இது தெரியாத கடைக்குட்டி தனக்கு சொந்தமில்லாவிட்டாலும் தான் தோட்டம் செய்த காரணத்துக்காக தனக்கு தென்கிழக்கு மூலையை பிரித்து தரவேண்டும் என நிற்கிறார்
சரி எங்கே வாசகர்களே உன்கள் கருத்தை சொல்லுங்கள்.
சின்னவர் தம்பி செய்த அனியாயங்களை மன்னித்து பழகியபடி அரவணைக்க தயார் ஆனால் இவர் போக மாட்டேன் என்கிறார் இது நியாயமா?
அப்படித்தான் அவனும் பிள்ளைதானே அவனுக்கும் அப்பா சொத்தில் பங்கு உள்ளதுதானே என்று நியாயம் தான் ஆனால் அதனை பெரியவர் வைத்திருக்கும் பெரிய காணியில் கேட்கவேண்டியதுதானே ஏன் ஏற்கனவே துண்டாடப்பட்டிருக்கும் சின்னவர் காணியில் கேட்பான்?
நியாயப்படி பெரியவர் சின்னவர் பங்கு பிரிக்கும் இடத்தில் இவருக்கு இடமும் இல்லை அவசியமும் இல்லை இது யார் யார் அப்பா பிள்ளை என்ற பிரிப்பு இல்லை இது சின்னவனுக்கு எந்தெந்த காணிகள் சேரவேண்டுமென பெரியவர்கள் பிரிக்கும் பங்கு கடைக்குட்டி கைகட்டி வேடிக்கை பார்க்கலாம் அல்லது இதைவிட்டால் தனக்கு காணி கிடைக்காது என்று தெரிந்தால் பெரியவரின் காணியில் தனது பெரிய தோட்டம் இருக்கும் இடமாக பார்த்து அது தனக்கு வேண்டுமென்று பெரியவரிடம் கேட்கட்டும் சண்டை பிடிக்கட்டும் பெரியவருடன் சண்டைபிடிக்க பயமாக இருந்தால் அவர் தருவதை வாங்கிக்கொண்டு இருக்கட்டும் அது சின்னவர் கவலை இல்லை அவன் பங்கு கேடட்டும் அவனுக்கு உரிமை இருக்கு இல்லை எல்லாம் இவரது கவலை இல்லை தனது காணியில் பங்கு கேட்டால் தரமுடியாது இது சின்னவர் வாதம்
பெரியவர் வைச்சிருக்குறதிலயும் கடைக்குட்டியோட காணி இருக்கு, சின்னவர் வைச்சிருக்கிறதிலையும் கடைக்குட்டியோட காணி இருக்கு.
இப்போ சின்னவருக்கு காணி பிரிக்கிறதால அதுல இருக்கிற பங்கை கேக்கிறார்.

