02-18-2004, 04:41 PM
kuruvikal Wrote:யாழ்/yarl Wrote:சேர்ந்திருக்கும் போது இனக்கலவரங்கள் தூண்டப்படலாம்.நடக்கலாம்.
சிறுபான்மையினம் என ஒதுக்கப்படலாம்.அல்லது ஒதுக்கப்படுவதாக எண்ணம் கொள்ளலாம்.பின்னர் பிரிந்துபோகப்போவதாக அடம் பிடிக்கலாம்.
இப்போது தமிழர் சிங்களவர் பிரச்சனைபோல் நாளை கிளர்ச்சி உருவாகி இரு தரப்பிலும் மீண்டும் உயிர்கள் பலியாகலாம்.
அப்படி என்றால் தமிழர்களும் ஆதிக்க வெறியர்கள் என்கிறீர்களா.....?! ஏன் தமிழர்கள் பரந்த அதிகாரப்பரவலின் மூலம் அனைத்துச் சமூகத்தும் சம உரிமையை தமது பாரம்பரிய நிலத்தில் வழங்கும் மனநிலை அற்றவர்கள் என்கிறீர்களா....???!
யாழ் எழுதிய பதிலை படியங்க
kuruvikal Wrote:சரி அப்படித்தான் என்று கொண்டாலும் பிரிந்து போகும் இடங்களில் எல்லாம் தமிழர்கள் மீண்டும் சிறுபான்மை இனமாகி அல்லலுறும் போது அதற்குள் பிரிவினை என்பது ஏற்படாதா.....உயிரிழப்பு நிகழாதா....???!
நடக்கலாம். அதனை இப்போது சொல்லமுடியாது. அதற்காக தமிழர்கள் சிறுபான்மை இனமாக உள்ள் அனைத்து இடங்களிலும் சுயாட்சி கேக்க முடியுமா? தமிழர்கள் கொழும்பில் கூடத்தான் இருக்கின்றார்கள். நீங்கள் சொன்ன மாதிரி சுயாட்சி கிடைத்ததின் பின் அவங்களுக்கு பாதிப்பு ஏற்படாதா?
முஸ்லீம்கள் அவர்கள் பெரும்பான்மையா உள்ள தென் கிழக்கில்தான் தனி அலகு கேட்கிறார்கள் சிறுபான்மையா உள்ள யாழ்ப்பாணத்தில் அல்ல. அதை குடுப்பதால் நாம் ஒன்றும் குறைந்துவிட மாட்டோம்.
kuruvikal Wrote:சிங்களவர்கள் அன்றே அதிகாரங்களை எல்லா இனத்தவருடனும் சம அளவில் பங்கிட்டு வாழ்ந்திருந்தால் இலங்கையில் இனப்பிரச்சனை வந்திருக்குமா.....அப்போ தந்தை செல்வா போன்றோர் கேட்டதெல்லாம் சொன்னதெல்லாம்...வரலாறுகள் பொய்யா....?!
அன்றே அப்படி செய்திருந்தால் பிரைச்சனை வந்திருக்காது. உண்மைதான் அதற்கு என்ன செய்ய. அன்று அவர்கள் அதிகாரங்களை பங்கிட்டு வாழவில்லை என்பதற்காக இன்று நாம் முஸ்லீம்களுக்கு கொடுக்காமல் விட முடியாது. அப்பிடி செய்தால் அவங்க செய்த தப்பை நாமும் செய்கின்ற மாதி ஆயிரும்.
kuruvikal Wrote:ஏன் அன்றே முஸ்லீம்கள் பிரிவினை கோரிக்கை விடவில்லை....???!
அப்போ அந்தளவுக்கு கசப்புக்கள், காயங்கள் இல்லையே. ஏன் நாடு சுதந்திரம் அடையேக்க தமிழர்கள் பிரிவினை கோரிக்கை விடவில்லை ?
kuruvikal Wrote:அதேபோல் இன்னொன்றும் உண்மை.... சிங்களவர்கள் தமிழர்களை நம்பும் அளவிற்கு முஸ்லீம்களை நம்பவில்லை.....! ஏன்....???! நிச்சயம் தமிழர்கள் தனி அலகு கொடுக்க முன்வந்தாலும் சிங்களவர்கள் அதற்கு அனுமதியார்.....அப்படி ஒன்று நடந்தால்... சிங்கள தேசம் அதனால் இன்று போலல்லாது அதிகம் பாதிக்கப்படும் காரணம் வடக்குக்கிழக்கை விட தெற்கில் தான் முஸ்லீம்கள் அதிகம் வாழ்கின்றனர்.....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
சிங்களவர்கள் முஸ்லீம்களை நம்புவது நம்பாது அது அவர்கள் பிரைச்சனை. அவர்கள் தனி அலகு கொடுக்கட்டும் கொடுக்காமல் விடட்டும். ஆனா விடுதலை வேண்டும் என்று சொல்கின்ற இனம் அதே விடுதலை கேக்கின்ற இன்னொரு இனத்துக்கு மறுக்ககூடாது. அது நியாயம் இல்லை.
தமிழர்கள் தடையாக இருக்க வேண்டாம். சிங்களவர்கள் முடியாது என்று சொன்னால் அதை முஸ்லீம்கள் பார்த்துக்கொள்ளட்டும்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: