04-24-2006, 10:34 PM
rajathiraja Wrote:<b>நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லை !!</b>
தமிழ் நாட்டில் எண்ணற்ற ஈழ மக்கள் அடைகலம் தேடியும், கல்வி கற்பதற்க்காவும் வசிகின்றனர். அவர்கள் எல்லாரும் எண்ண இது போல காவல் துறையிடம் அவஸ்தை படுகிறார்களா?
தமிழகம் எனக்கு 2 வருட பரீட்ச்சியமான நாடு...!
நான் இங்கு பொய் சொல்லி யாரையும் ஏமாற்ற வேண்டும் என்று அவசியம் கிடையாது....!! எனது அனுபவம் மற்றையோரிடம் பகிர்கின்றேன்... தமிழகத்தில் ENDLF எனும் அமைப்பின் செயற்பாடும் அவர்களின் சொகுசு வாழ்க்கைக்கான உதவியும் அரசு வழங்குவது உண்மைதான்... அதை பார்த்து எல்லா ஈழத்தவரையும் அரசு வாழவைக்கிறது என்று நீங்கள் இங்கு சொல்வதும் எங்களுக்கு நன்கு தெரியும்...
தமிழகத்தில் தங்க பொலீஸ் பதிவுக்காகவும்... சட்டரீதியாக வீடு வாடகைக்கு எடுக்க படும் பாடும் உங்களுக்கு தெரிய நியாயம் இல்லைத்தான்... பணம் கையாள வங்கிகணக்கு ஆரம்பிக்க படும்பாடுகள், வெளிநாட்டில் இருந்து வங்கிக்கு பணம் அனுப்பினால்... வங்கி முகாமையாளரால் எடுத்து வட்டிக்கு விடப்படும் கொடுமை அனுபவித்தவன் நான்... கேட்டால் புலி எண்று போலீசில் பிடிச்சு கொடுப்பேன் என்று மிரட்டல்களும் அங்கு சாதாரணம்...
நீங்கள் சொல்லும் வசதியாக வாழும் ஈழத்தவர் எல்லாருமே... ஒருவகையில் இந்திய புலநாய்வுத்துறையுடன் தொடர்புடையவகளும் அவர்களின் நண்பர்கள், உறவினர் மட்டுமே....
பின்னாளில் நானும் நன்றாகத்தான் இருந்தேன்... :wink:
::

