04-21-2006, 12:50 PM
மீட்டுத் தருமா???
இந்திய மண்ணின் மானத்தைக் காக்க
கார்கிலுக்குப் புறப்பட்டான்
காவிரியாற்றுத் தஞ்சை மண் வீரன்
தடுத்தான் அவனது தம்பி
இனமான இளவேள்
அண்ணா! நீ புரியும் போர்
மீட்டுத் தருமா
நம் தமிழர் இழந்த
தேவிகுளம், பீர்மேடு,
வேங்கட மலை, கோலார் தங்கவயல்
கச்ச தீவு போன்றவற்றை
ஏன் நம்மின மக்களின்
காவிரியாற்று நீரையாவது
சிந்திக்கத் தொடங்கினான்
கார்கில் வீரன்.
-இளங்கோ (பிரித்தானியா)
நன்றி www.webeelam.com கவிதைகள்
இந்திய மண்ணின் மானத்தைக் காக்க
கார்கிலுக்குப் புறப்பட்டான்
காவிரியாற்றுத் தஞ்சை மண் வீரன்
தடுத்தான் அவனது தம்பி
இனமான இளவேள்
அண்ணா! நீ புரியும் போர்
மீட்டுத் தருமா
நம் தமிழர் இழந்த
தேவிகுளம், பீர்மேடு,
வேங்கட மலை, கோலார் தங்கவயல்
கச்ச தீவு போன்றவற்றை
ஏன் நம்மின மக்களின்
காவிரியாற்று நீரையாவது
சிந்திக்கத் தொடங்கினான்
கார்கில் வீரன்.
-இளங்கோ (பிரித்தானியா)
நன்றி www.webeelam.com கவிதைகள்

