04-20-2006, 09:27 PM
Quote:ஆனால் இந்த விழா தீய சக்திகள் வேறொரு வடிவில் தமிழர்கள் மத்தியில் ஊடுருவுவதற்கான தொடக்க விழா என்பதே உண்மை. இந்த விழாவை நடத்துபவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் வெளியுலகத்தை பொறுத்தவரை அப்பாவிகள். ஆனால் இந்த "அப்பாவிகளை" இயக்குகின்ற பாவிகள் பலரும் அறிந்தவர்கள். "டென்மார்க் விவகாரங்களின் பின்னணி" என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தவர்களாகிய மதி, வதனன் மற்றும் அவர்களை சார்ந்தவர்களே இந்த விழாவின் பின்னணியில் இருக்கின்றார்கள். இந்த மதி, வதனன் போன்றவர்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏற்கனவே பலமுறை ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்ட விடயம் அது.
இந்த விழாவை நடத்துவதாக சொல்லிக் கொள்பவர்கள் சில இணையத் தளங்களை நடத்துகிறார்கள். இந்த இணையத் தளங்கள் பதிந்து கொடுத்தவர்கள் மதி, வதனன் ஆகியோரின் "தமிழ் ஜனநாயக அமைப்பின்" ஒருங்கிணைப்பாளரே. அது மட்டுமன்றி இந்த விழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு மதி சென்று வந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்ட டென்மார்க் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் விழா மேடையில் இவர்களோ, அல்லது இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களோ தோன்றுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இவைகளை விட வேறு பல ஆதாரங்களும் உண்டு.
எங்கள் இனமே எதிரிகளுக்கு துணை போறதை நினைச்சா கவலையாக இருக்கு.

