Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை தர முடியுமா?
#25
ஆரியர் கொடுமை - மகா வம்ச காலம்
(யுகசாரதியின் ஈழத்தாய் சபதத்திலிருந்து)

விசயனென்றொரு முரடன் - தான்
விரும்பியபடி அவன் நாட்டினிலே
தசையினில் ஆசைகொண்டே - இளந்
தளிர்களைக் கசக்கிப் பின் தரையெறிந்தான்
வசை வருமெனப் பயந்தே - அந்த
வம்பனை அவனது தோழருடன்
திசையறியாக் கடலில் - என்றும்
திரும்பி வராவண்ணம் மரக்கலத்தில்

தந்தை அரசனவன் - உயர்
தர்மத்தைக் காத்திட அனுப்பிவைத்தார்
விந்தையில் விந்தையடா - எங்கள்
வினைப்பயனோ இல்லை விதியதுவோ
முந்தையர் கொடுமைகளோ - அந்த
மூர்க்கனைச் சுழற்புயல் கொணர்ந்தெமது
செந்தமிழ் ஈழத்திலே - கரை
சேர்த்ததடா மறை வேர்த்ததடா

மண்டலத்தரசியவள் - உயர்
மறத்தினள் ராவணன் வழியில் வந்தாள்
வண்டமிழ்ப் பொற் 'குவை நீ"- எனும்
வாயினி லினிக்கிற பெயருடையாள்
புண்டரிகத் தெழிலாள் - அந்தப்
புலையனைப் புணர்ந்திட ஆசை கொண்டாள்
பண்டைய பெருமையெல்லாம் - அந்தப்
பாவியினால் எமக் கழிந்ததுவே

ஆயிரமாயிரமாய் - இளம்
அனிச்சைகள் தனை முகர்ந் தெறிந்தவனை
நாயினை அவள் புணர்ந்தாள் - நாம்
நாடிழந்தே நடுத்தெருவில் நின்றோம்
தேயத்து வன்னியர் நாம் - தலை
திருப்பிய புறமெங்கும் அன்னியர்கள்
பேயெனச் சிரித்து நின்றார் - எங்கள்
பெருமையெல்லாம் அன்று எரித்து நின்றார்

துட்டனைப் புணர்ந்ததனால் - அவள்
துயரினை அதன் பின்னர் சுமந்ததுவும்
கெட்டவன் எமதரசைத் - தன்றன்
கீழ்க் கொண்டு வந்திட முயன்றதுவும்
பட்டத்து அரசியென - ஒரு
பாண்டிய மங்கையை மணந்ததுவும்
பொட்டெனத் தமிழ் நிலங்கள் - அந்தப்
புலையனின் கை வசமானதுவும்


நாட்டினை இழந்ததனால் - வெறும்
நடைப்பிணமாகிய தமிழரினம்
காட்டினி லுறைந்ததுவும் - தீவின்
கரைகளில் ஒதுங்கியே வாழ்ந்ததுவும்
வேட்டுவரானதுவும் - சிலர்
வெஞ்சினமுற்றுக் குவை நீ தனை
ஈட்டியில் முடித்ததுவும் - எங்கள்
ஈழத்தை இந்தியத் தமிழர்களாம்

பாண்டிய மன்னர்களும் - பலம்
பொருந்திய புலிக் கொடிச் சோழர்களும்
ஆண்டதும் விதிவலியால் - தமிழ்
அன்னையைத் தவிக்கவிட்டவர் நிலமே
மீண்டதும் பழைய கதை - பின்னர்
மேற்குலகத்தினர் எமைப்பிடித்தே
வேண்டிய பொருள் பறித்தார் - சுவை
மேவிய தமிழுக்கும் குழி பறித்தார்

[/b]
S. K. RAJAH
Reply


Messages In This Thread
[No subject] - by iruvizhi - 10-09-2005, 12:56 PM
[No subject] - by Birundan - 10-09-2005, 01:49 PM
[No subject] - by KULAKADDAN - 10-09-2005, 01:53 PM
[No subject] - by தூயவன் - 10-09-2005, 03:05 PM
[No subject] - by Jude - 10-09-2005, 10:30 PM
[No subject] - by iruvizhi - 10-10-2005, 10:37 AM
[No subject] - by Thala - 10-10-2005, 10:40 AM
[No subject] - by Birundan - 10-10-2005, 11:55 AM
[No subject] - by Mathuran - 10-29-2005, 07:19 PM
[No subject] - by Vasampu - 10-29-2005, 11:02 PM
[No subject] - by kurukaalapoovan - 10-29-2005, 11:43 PM
[No subject] - by kuruvikal - 10-30-2005, 07:11 AM
[No subject] - by AJeevan - 10-30-2005, 09:49 AM
[No subject] - by Mathuran - 10-30-2005, 09:59 AM
[No subject] - by Vasampu - 10-30-2005, 01:05 PM
[No subject] - by Birundan - 10-30-2005, 01:28 PM
[No subject] - by kurukaalapoovan - 10-31-2005, 06:40 PM
[No subject] - by Aravinthan - 04-19-2006, 06:13 AM
[No subject] - by அருவி - 04-19-2006, 06:30 AM
[No subject] - by அருவி - 04-19-2006, 06:34 AM
[No subject] - by Thala - 04-19-2006, 09:19 AM
[No subject] - by Thala - 04-19-2006, 09:20 AM
[No subject] - by alika - 04-19-2006, 10:21 AM
[No subject] - by karu - 04-19-2006, 10:25 AM
[No subject] - by Mathuran - 04-19-2006, 11:08 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:36 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:39 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:41 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:44 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)