04-19-2006, 05:02 AM
[size=18]கனடாவில் புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் எதிர்ப்பு
[16 - ஆப்ரில் - 2006] தினக்குரல்
விடுதலைப் புலிகளை கனடாவின் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்ப்பது என்ற அந்த நாட்டின் புதிய அரசாங்கத்தின் முடிவினை கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வரவேற்கவில்லை.
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் மக்கே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வைக் காண்பதற்காக அந்த நாடு உதவத் தயார் என்பதை வலியுறுத்தியுள்ளார். கனடா அரசாங்கம் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிப்பது தமிழ் சமூகத்தினர் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.
மொன்ரியோலில் வாழும் முன்னாள் ஊர்காவற்றுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி.நவரட்ணம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளையும் உடன்படிக்கைகளையும் மேற்கொள்வது பயனற்றது என்கிறார். சமஷ்டி கட்சியின் உயிருடன் உள்ள ஒரேயொரு ஸ்தாபகரான 96 வயது நவரட்ணம், தமிழ் மக்களின் ஆரம்ப கால போராட்டங்கள் எவ்வாறு அகிம்சை வழியில் அமைந்திருந்தன என்பதை சுட்டிக்காட்டுகின்றார். அகிம்சை வழியில் நாம் போராடினோம். எமது போராட்டத்தை மேற்கொண்டோம். அது பலனளிக்கவில்லை என்கிறார் அவர்.
பண்டாரநாயக்கவிற்குப் பின்னர் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஒவ்வொரு வாக்குறுதியையும் கை விட்டுள்ளனர் எனும் அவர் முழுமையான பிரிவினையே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உண்மையான நிரந்தரமான தீர்வைக் கொண்டு வரும் என்கிறார். சமஷ்டி பலனளிக்காது என குறிப்பிடும் அவர் தமிழர்களின் தலைவிதியை சிங்கள அரசியல்வாதிகளின் கைகளில் விட்டுவிட முடியாது எனவும் தெரிவிக்கின்றார்.
இலங்கை அரசாங்கம் எமக்கு எதனையும் தரப்போவதில்லை. போராடுவதே வழி என்கிறார் கனடாவில் 25 வருட காலமாக வாழ்ந்து வரும் தமிழர் ஒருவர்.
கடல்கோளின் போது விடுதலைப் புலிகள் இருந்திருக்கா விட்டால் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உதவியிராது எனவும் அவர் தெரிவிக்கின்றார். இலங்கை அரசாங்கம் நான்காக பிளவுபட்டுள்ளது. அவர்கள் ஏற்றுக் கொண்டதை நடைமுறைப்படுத்துவதில்லை. அவர்கள் பௌத்த மதகுருமார்களை மாத்திரம் செவிமடுப்பார்கள் விடுதலைப் புலிகள் எப்போதும் உறுதியாகவுள்ளார்கள் என அவர் தெரிவித்தார். ஜெனீவா பேச்சுவார்த்தைகளிலும் அவர் நம்பிக்கை வெளியிடவில்லை. கனடாவின் பெரும்பாலான தமிழ் மக்களின் உணர்வு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே காணப்படுகின்றது.
[16 - ஆப்ரில் - 2006] தினக்குரல்
விடுதலைப் புலிகளை கனடாவின் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்ப்பது என்ற அந்த நாட்டின் புதிய அரசாங்கத்தின் முடிவினை கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வரவேற்கவில்லை.
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் மக்கே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வைக் காண்பதற்காக அந்த நாடு உதவத் தயார் என்பதை வலியுறுத்தியுள்ளார். கனடா அரசாங்கம் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிப்பது தமிழ் சமூகத்தினர் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.
மொன்ரியோலில் வாழும் முன்னாள் ஊர்காவற்றுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி.நவரட்ணம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளையும் உடன்படிக்கைகளையும் மேற்கொள்வது பயனற்றது என்கிறார். சமஷ்டி கட்சியின் உயிருடன் உள்ள ஒரேயொரு ஸ்தாபகரான 96 வயது நவரட்ணம், தமிழ் மக்களின் ஆரம்ப கால போராட்டங்கள் எவ்வாறு அகிம்சை வழியில் அமைந்திருந்தன என்பதை சுட்டிக்காட்டுகின்றார். அகிம்சை வழியில் நாம் போராடினோம். எமது போராட்டத்தை மேற்கொண்டோம். அது பலனளிக்கவில்லை என்கிறார் அவர்.
பண்டாரநாயக்கவிற்குப் பின்னர் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஒவ்வொரு வாக்குறுதியையும் கை விட்டுள்ளனர் எனும் அவர் முழுமையான பிரிவினையே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உண்மையான நிரந்தரமான தீர்வைக் கொண்டு வரும் என்கிறார். சமஷ்டி பலனளிக்காது என குறிப்பிடும் அவர் தமிழர்களின் தலைவிதியை சிங்கள அரசியல்வாதிகளின் கைகளில் விட்டுவிட முடியாது எனவும் தெரிவிக்கின்றார்.
இலங்கை அரசாங்கம் எமக்கு எதனையும் தரப்போவதில்லை. போராடுவதே வழி என்கிறார் கனடாவில் 25 வருட காலமாக வாழ்ந்து வரும் தமிழர் ஒருவர்.
கடல்கோளின் போது விடுதலைப் புலிகள் இருந்திருக்கா விட்டால் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உதவியிராது எனவும் அவர் தெரிவிக்கின்றார். இலங்கை அரசாங்கம் நான்காக பிளவுபட்டுள்ளது. அவர்கள் ஏற்றுக் கொண்டதை நடைமுறைப்படுத்துவதில்லை. அவர்கள் பௌத்த மதகுருமார்களை மாத்திரம் செவிமடுப்பார்கள் விடுதலைப் புலிகள் எப்போதும் உறுதியாகவுள்ளார்கள் என அவர் தெரிவித்தார். ஜெனீவா பேச்சுவார்த்தைகளிலும் அவர் நம்பிக்கை வெளியிடவில்லை. கனடாவின் பெரும்பாலான தமிழ் மக்களின் உணர்வு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே காணப்படுகின்றது.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

