06-26-2003, 07:18 AM
சிறிலங்காத் தலைநகரில் தெகிவளைப் பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல் 28 தமிழ் இளைஞர்கள் கைது.கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வன்னியை சேர்ந்தவர்களாம்.ஒருவர் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் வைத்திருந்ததற்காகவிம் கைது செய்யப்பட்டுள்ளாராம். சிறிலங்கா பொலிஸ் CID தெகிவளைப் பொறுப்பாளர் அவருக்கு செய்திவழங்கும் தமிழ் ஒற்றன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அறிவித்து அடுத்ததினமே இச் சுற்றிவளைப்பு நடந்துள்ளது! சூட்டுச் சம்பவத்தின் பின் கைது செய்யப்பட்ட அவ் ஒற்றன் கொடுத்த தகவலின் அடிப்படையில் புலிகள் தொடர்பான புதிய சொத்துவிபரங்கள் செயற்பாடுகள் கிடைத்துள்ளதை அடுத்து சிறிலங்காவின் பாதுகாப்புக் கருதி கொழுப்ம்பில் பொலிஸ் இராணூவக் காவலரன்கள் அமைத்துச் சோதித்தல் வீடு வீடாக இராச் சோதனை இடுதல் வீதிகளின் ரோந்து சென்று சோதனை செய்தல் இப்படி இன்னோர் என்ன சோதனைகள் பழைய படி சந்திரிக்கா அம்மாவின் சொற்படி பொலிஸ்மா அதிபர் ஆனந்தராஜாவின் பணிபுரைகளுக்கு ஏற்ப நடந்தேறவுள்ளதாம்! அத்துடன் சோதனை நடவடிக்கைகள் தெகிவளை கல்கிசை மொறட்டுவ வத்தளை வெள்ளவத்தை கொட்டகேன பகுதிகளை மையம் கொண்டே செயற்படுத்தப்படுமாம்.ஏனெனில் அங்குதானாம் புலிகள் குவிந்து கிடக்கிறார்கள்....இப்ப விளங்குதே ஆர் புலிகள் எண்டது..அங்க இருக்கிற தமிழர்தான்....என்னமா அம்மா கேம் காட்டுறா.....?!
தகவல்கள்..தினக்குரல்,உதயன்,வீர கேசரி!
தகவல்கள்..தினக்குரல்,உதயன்,வீர கேசரி!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

