04-13-2006, 06:48 AM
அரசிற்கும் புலிகளிற்கும் கனடாவில் பேச்சு நடத்த முயற்சி? சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்குமிடையேயான பேச்சுவார்த்தையை கனடாவில் நடாத்துவதற்கு கனடாவின் தற்போதைய அரசு முயற்சி எடுத்து வருவதாகத் தெரியவருகிறது.
விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டது துரதிர்ஸ்டவசமானது எனவும், இது கனடாவின் இலங்கை இனப்பிரச்சினைக்கான சமாதான முயற்சிகள் தொடர்பான நடுநிலையைப் பாதிக்கும் எனவும் ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகைக்கு செவ்வி வழங்கியிருந்த குயின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சறின் எய்கின் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கனடிய வெளிவிவாகர அமைச்சர் பீற்றர் மைக்கே, அக் கருத்தை மறுதலித்ததுடன் கனடா பேச்சுவார்த்தையில் காத்திரமான பங்கு வகிப்பது குறித்து நோர்வேஜிய அரசுடன் தான் கலந்துரையாடியதாகவும், கனடாவில் பேச்சுவார்த்தைகளை நடாத்துவது குறித்த விடயத்தை அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைத் தீவின் சமாதான முயற்சிகளில் அக்கறையுள்ள கனடிய அரசியல் முக்கிஸ்தர் ஒருவர் இது குறித்து தனிப்பட்ட ரீதியில் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறான முயற்சியை வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்வதானது வரவேற்கத்தக்க விடயம் எனவும், இது ஒரு மிகச் சிறந்த முயற்சி எனவும் தெரிவித்தார்.
கனடாவின் இவ்விருப்பானது நோர்வேயினால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள இரு தரப்பிற்கும் தெரியப்படுத்தப்பட்டு அவர்களின் ஒத்தாசை பெறப்பட்டாலே இது சாத்தியமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் 39 ஆவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இணைக்கப்பட்டுள்ள போதிலும், அதனுடன் தொடர்புடைய அமைப்புக்கள் அல்லது அதன் முன்னணி அமைப்புக்கள் தொடர்ச்சியாகச் செயற்படுவதற்கு எந்தவிதத் தடையுமில்லை என்பதுடன், அவ்வாறு விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்கள் மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புக்களிற்கு உதவிகள் வழங்குவது, பங்களிப்பது என்பனவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் கனேடிய ஊடகங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பான விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட அக்கறை காரணமான சிறிலங்கா அரசின் இனவாத மற்றும் சமாதான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தமிழர்களிற்கு ஒரு தேசம் இலங்கைத் தீவில் இருப்பது தொடர்பான விடயங்களை அறிவதில் கனடிய ஊடகங்கள் தற்போது ஆர்வம் காட்டுகின்றன.
இதேவேளை இவ்வாறு விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தேசியக் கொடியேற்றல் உள்ளிட்ட சகல நிகழ்வுகளும் அனுமதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய தமிழ்ப் பிரமுகர் ஒருவர், சிறிலங்கா குறித்த உண்மை நிலையை மேற்குலக நாடுகள் உணர வைப்பதன் மூலம் எமது மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண அவற்றைப் பங்களிக்க வைக்க முடியும் எனத் தெரிவித்தார்.
- புதினம்
விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டது துரதிர்ஸ்டவசமானது எனவும், இது கனடாவின் இலங்கை இனப்பிரச்சினைக்கான சமாதான முயற்சிகள் தொடர்பான நடுநிலையைப் பாதிக்கும் எனவும் ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகைக்கு செவ்வி வழங்கியிருந்த குயின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சறின் எய்கின் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கனடிய வெளிவிவாகர அமைச்சர் பீற்றர் மைக்கே, அக் கருத்தை மறுதலித்ததுடன் கனடா பேச்சுவார்த்தையில் காத்திரமான பங்கு வகிப்பது குறித்து நோர்வேஜிய அரசுடன் தான் கலந்துரையாடியதாகவும், கனடாவில் பேச்சுவார்த்தைகளை நடாத்துவது குறித்த விடயத்தை அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைத் தீவின் சமாதான முயற்சிகளில் அக்கறையுள்ள கனடிய அரசியல் முக்கிஸ்தர் ஒருவர் இது குறித்து தனிப்பட்ட ரீதியில் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறான முயற்சியை வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்வதானது வரவேற்கத்தக்க விடயம் எனவும், இது ஒரு மிகச் சிறந்த முயற்சி எனவும் தெரிவித்தார்.
கனடாவின் இவ்விருப்பானது நோர்வேயினால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள இரு தரப்பிற்கும் தெரியப்படுத்தப்பட்டு அவர்களின் ஒத்தாசை பெறப்பட்டாலே இது சாத்தியமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் 39 ஆவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இணைக்கப்பட்டுள்ள போதிலும், அதனுடன் தொடர்புடைய அமைப்புக்கள் அல்லது அதன் முன்னணி அமைப்புக்கள் தொடர்ச்சியாகச் செயற்படுவதற்கு எந்தவிதத் தடையுமில்லை என்பதுடன், அவ்வாறு விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்கள் மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புக்களிற்கு உதவிகள் வழங்குவது, பங்களிப்பது என்பனவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் கனேடிய ஊடகங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பான விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட அக்கறை காரணமான சிறிலங்கா அரசின் இனவாத மற்றும் சமாதான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தமிழர்களிற்கு ஒரு தேசம் இலங்கைத் தீவில் இருப்பது தொடர்பான விடயங்களை அறிவதில் கனடிய ஊடகங்கள் தற்போது ஆர்வம் காட்டுகின்றன.
இதேவேளை இவ்வாறு விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தேசியக் கொடியேற்றல் உள்ளிட்ட சகல நிகழ்வுகளும் அனுமதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய தமிழ்ப் பிரமுகர் ஒருவர், சிறிலங்கா குறித்த உண்மை நிலையை மேற்குலக நாடுகள் உணர வைப்பதன் மூலம் எமது மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண அவற்றைப் பங்களிக்க வைக்க முடியும் எனத் தெரிவித்தார்.
- புதினம்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

